Wednesday 6 March 2013

நீ பேசுவதில் இருக்கிறது

கல்யாணத்திற்கு முன்னர்
நீ பேசமாட்டாயா
என்றே இருந்தது
கல்யாணத்திற்கு பின்னர்
நீ எதற்கு பேசுகிறாய்
என்றே இருக்கிறது
எவரோ எழுதிய வரிகள்
அவை இனி நம் வாழ்வில்
வருமா புரியவில்லை 

என்னோடு பேச
வருபவர்களைவிட
உன்னோடு
பேசிக்கொண்டிருப்பது மட்டுமே
எனக்குப் பிடிக்கும்.

உன்னை என் அம்மாவிடம்
அழைத்து சென்று
அம்மாவிடம்
உன்னைப்போல் ஒரு பெண்
என்றே உன்னை
காட்டிடத் தோணும்

அம்மாவும் தனது பாரம்
குறைந்ததாய் கண்கள்
நனைத்து கொள்வார்
என்னை காத்திட
நீ கிடைத்தாய் என்றே
பூரித்து கொள்வார்

மௌனமாய் நீ அமர்ந்து
இருந்தால்
மரணத்தை தழுவுவது
போன்றே நெஞ்சில் ஊர்கிறது

மௌனத்தை கலைத்திட
வார்த்தை ஒன்றை
தேர்ந்தெடுத்திட தேடுகையில்
ஏதேதோ பேசி முடித்துவிட்டாய்

நீ பேசிய வார்த்தைகள்
எதுவுமே நினைவில் இல்லை
மௌனத்தில் நீ அமர்ந்து
கொள்வது
மரணத்தை நான்
தழுவுவது போன்றது

இனிமேல் நீ பேசுவதில் தான்
இருக்கிறது
நமது காதலும்
காதல் வாழ்வும். 

No comments: