Tuesday 28 September 2010

நான் இறந்து போயிருந்தேன்

 நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

பதினேழு முறை
நான் கொண்டு சென்று
பதினெட்டாம் முறையாய்
நான் இறந்து போனபின்

அஷ்டோத்திர மந்திரம் கற்று
உலகம் நலம் பெற வேண்டுமெனும்
ஒரு உயரிய உள்ளம் கொண்ட
அடியேன் ராமனுஜதாசன்
கதை கேட்டு

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
உள்ளூர மோதியபோது

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது

நான் நான் நான்
என நாணமே இல்லாமல்
செருக்குடன் கிறுக்குப் பிடித்த
நான் நான் நான் 

நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்.

நான் இறந்து போயிருந்தேன்
இதை எப்படி எவரிடம்
சொல்லிக் கொள்வது




கவிதைகள் எழுதி மின்னஞ்சல் அனுப்ப : bharathphysics2010@gmail.com

7 comments:

Shakthiprabha (Prabha Sridhar) said...

Awesome ! ரொம்ப அருமை. ரசிச்சேன்.

Radhakrishnan said...

மிக்க நன்றி சகோதரி

Unknown said...

அருமை RADHAKRISHNAN...
நான் மிக ரசித்த வரிக்கள்

"நான் இருந்தபோது
கவலைகள் என்னை
தின்று கொண்டிருந்தது

நான் இறந்தபோது
கவலைகளை
தின்று கொண்டிருந்தேன்."

Radhakrishnan said...

மிக்க நன்றி.

அன்பரசன் said...

அருமை

Raja said...

Read your poems...nice ones...Research in Pharmacy?

Radhakrishnan said...

மிக்க நன்றி அன்பரசன்.

ஆமாம் ராஜா. மிக்க நன்றி.