Sunday 26 September 2010

ரஜினியின் எந்திரனும் அமெரிக்காவின் நாசாவும்

ரஜினியின் எந்திரனா?, சங்கரின் எந்திரனா? எனும் கேள்விக்கு  சங்கரின் எந்திரன் என  ரஜினி பதில் சொல்லிவிட்டார். ஆனால் இது ரஜினியின் எந்திரன் என சங்கருக்கும் தெரியும், இந்த படத்தை தயாரித்த கலாநிதி மாறனுக்கும் தெரியும். ரஜினி ஒரு மந்திர சொல் என்பதான மாயை எப்போதும் உண்டு.

இந்த எந்திரன் என்ன கதை? வைரமுத்து தனது பங்கிற்கு சொல்லிவிட்டார். 'இது ஒரு முக்கோண காதல் கதை'. ரஜினியின் படத்திற்கு எதற்கு கதை? யார் ரஜினியின் படத்திற்கு கதை தேடி சென்று இருக்கிறார்கள்? ரஜினி நடிக்கிறார் என்பதற்காக மட்டுமே செல்பவர்கள் அதிகம்.

எந்திரனில் அழிவில் இருந்து மீட்க எந்திரனாக வலம் வரும் ரஜினி, அறிவியலாளாரக வலம் வரும் ரஜினி. தான் உருவாக்கிய எந்திரனிடமே தனது காதலியை பறிகொடுத்துவிடும் நிலையில், எதிர்க்கும் நிலையில்  ரஜினி. மீதியை வெள்ளித்திரையில் காண்க.

ரஜினியின் திரைப்பட உலக வரலாற்றில் தோல்விப்படங்கள் பல உண்டு. ஆனால் அதில் குறிப்பிடப்பட வேண்டியவை ஸ்ரீராகவேந்திரர் மற்றும் பாபா. ரஜினிக்கு ஒரு உண்மை உரைத்து இருக்க வேண்டும். ஆன்மிகத்தை வியாபாராமாக்கும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவைகள் அந்த படங்கள்.

ஆன்மிகத்திற்கு எதற்கு விளம்பரம்? ஊரெல்லாம் பாபாஜி, மாதாஜி. உள்ளூர வெந்து வேகிறார் விவசாயி.

எந்திரன், மனிதன் போல பல மொழிகள் தெரிந்து வைத்து கொண்டு, மனிதன் போலவே செயல்படும் ஒரு பாத்திரம். இதை பல கதைகளில் எழுத்தாளர்கள் சித்தரித்து இருக்கிறார்கள்.

அதைப்போலவே நாசாவில் ஒரு மனிதனை போல செயல்படும் வண்ணம் ரோபோ ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். பத்து மொழிகள் தெரியும் அந்த ரோபோவிற்கு. அந்த ரோபோவின் நோக்கம் மனிதர்களை இடப்பெயர்ச்சி செய்வதல்ல. மனிதர்களுக்கு உதவியாய் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வைப்பது.

ரஜினியின் எந்திரனா, நாசாவின் எந்திரனா எனும்போது நாசாவின் எந்திரன் மனித குலத்திற்கு பெரும் உதவியாக இருக்கபோவது மட்டுமே உண்மை.

2 comments:

Gayathri said...

ஹஹா எதார்த்தமாக கூரிவிடீர்கள்..

Radhakrishnan said...

Thank you.