Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Tuesday 8 November 2011

வேணாம்னா விட்டுருங்க அணுத்தொல்லையை

கூடங்குளத்தில் வேகமாக பயன்பாட்டுக்கு உட்படுத்தவிருக்கும் அணுமின் நிலையத்தை எதிர்த்து ஒரு சாரார் போராட்டம் நடத்தி வருவது வியப்புக்குரியது அல்ல. இதற்கு முக்கிய காரணம் பயம். 

இந்த திட்டம் ராசீவ் காந்தியால ஆரம்பிக்க பட்டது. சோவியத் யூனியன்ல பிரச்சினை வராம இருந்து இருந்தா இந்நேரம் கூடங்குளம்  சூப்பரா வேலை செஞ்சிட்டு இருந்துருக்கும். காலம் கடந்ததால் இந்த கூப்பாடுகள். அதைவிட முக்கியமான ஒன்னு என்னன்னா யுரேனியம் நம்ம நாட்டுல குறைந்த அளவுலதான் கிடைக்குதாம். நாம பல நாடுகள்கிட்ட ஒப்பந்தம் போட்டு இறக்குமதி செய்றம். அதுக்கு எத்தனை கோடி செலவோ? இப்படி கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி 14000  கோடி ரூபாய்ல 2001  ல ஒரு ஒப்பந்தம் போட்டு அப்படி இப்படின்னு கூடங்குளம் அணுமின் நிலையத்த ஆரம்பிக்கிற நேரத்தை பார்த்து சிவ பூஜையில புகுந்த கரடி மாதிரி ஜப்பான் நாட்டுல நடந்த துயர செய்தி லேசு பாசா இருந்த போராட்டத்துக்கு ரொம்ப வசதியா போச்சு. 

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைமை அப்படின்னு அஞ்சாங்கிளாசுல படிச்சது எல்லோருக்கும் நினைவில இருக்கும் போல. அதுவும் இந்த ஜப்பான் நாட்டுல நடந்த பெரும் துயரத்திற்கு அப்பால உலக நாடுகளே ஒரு நிமிஷம் நமக்கு அணு உலை எல்லாம் தேவையான்னு ஒரு மாநாடு போட்டுகிட்டாங்க அவங்க அவங்க ஊருல. 

எப்படித்தான் இருந்தாலும் துணிஞ்சவனுக்கு துக்கமில்லை அப்படின்னு 1986ல  தற்போதைய உக்ரைன், அன்றைய சோவியத் யூனியன்,  நாட்டுல நடந்த பெரும் அணு உலை விபத்து நடந்தப்பறம் கூட உலகத்துக்காரங்க எதையும் நிறுத்தி வைக்கலையே. இது ஒரு செயற்கை விபத்து. இதனால பாதிக்கப்பட்டவங்க ரொம்ப பேரு. இந்த பூமி எப்பவும் அழிவை எதுத்துதான் போராடுதுன்னு பாதிக்கப்பட்டவங்களுக்காக துக்கம் அனுசரிச்சிட்டு அடுத்த வேலைய அந்த ஊரு மக்கள் கவனிக்க போய்ட்டாங்க. இந்த விபத்தினால சோவியத் யூனியனோட மொத்த பொருளாதாரமே ஆட்டம் கண்டுருச்சி. இந்த  விபத்தினால வந்த அழிவை சரி செய்ய கோடி கோடியா ரூபில்ஸ் செலவாகிப் போச்சு.   ஆனா ஜப்பான் நாட்டுல நடந்த இந்த அணு உலை விபத்து இயற்கை சீற்றத்தினால வந்தது. அங்க கசிஞ்ச கதிரியக்கம் அயர்லாந்து நாட்டுல ரெகார்ட் ஆச்சு அப்படின்னு பேசிகிட்டாங்க. காலம் போகப் போக நம்ம மனுஷ சாதி பல விசயங்களை மறந்துரும். இன்னும் கொஞ்ச வருஷம் கழிச்சி பாருங்க, புது அணுமின் நிலையத்தை ஜப்பான் நாட்டுக்காரங்க கட்ட ஆரம்பிச்சிருவாங்க, அதுவும் எப்படி தெரியுமா? எந்த இயற்கை சீற்றம் வந்தாலும் நொட்டமுடியாதபடி. அது அவங்களோட போராட்ட குணம். 

நமக்கும் போராட்ட குணம் இருக்கு. உங்களுக்கென்ன தெரியாதா? போராடுவோம், போராடுவோம் அணு உலையை எதிர்த்து போராடுவோம். வைக்காதே வைக்காதே எங்கள் உயிருக்கு உலையை வைக்காதே. போராடுவோம் போராடுவோம் ஊழலை எதிர்த்து போராடுவோம் அப்படின்னு கத்து கத்துனு கத்திட்டு இந்த அரசாங்க பலத்துக்கு முன்னால கடைசியில பம்மிட்டு போறவங்கதான் முக்காவாசி நம்ம ஊருக்காரங்க. 'ஏலே ஒழுங்கா உண்ணாவிரதத்தை நிறுத்திட்டு ஓடிப்போயிரு, சாலைய மறிக்கிறது, கட்டவிடாம தடுக்கிறது அப்படின்னு ஆட்டம் கிட்டம் போட்ட குண்டர் தடுப்பு சட்டம், தீயவர் தடுப்பு சட்டம், அணு உலை அக்கிரமர்கள் சட்டம் அப்படி இப்படி ஆரம்பிச்சி உள்ள போட்டுருவோம்'   என மிரட்டி அடக்கிருவாங்கே. இந்த போராட்டம் இங்க மட்டும் இல்லைங்க, மும்பைக்கு பக்கத்துல ஜைடாபூர் அங்கிர ஊருல புதுசா ஒரு அணு மின் நிலையம் கட்டப்போறத எதிர்த்து அங்க வாழற மக்கள் போராடிகிட்டு இருக்காங்க. பத்தாயிரம் பேரு தங்களுடைய இடம், காடு எல்லாத்தையும் இந்த திட்டத்துக்காக இழக்கனுமாம். மீனவர்கள் தங்களோட மீன் பிடிப்புக்கு பாதிப்பு வரும்னு ஒரே எதிர்ப்பு. மேற்கு வங்காள அரசு 'போங்கடா நீங்களும் உங்க அணுத் தொல்லையும்' அப்படின்னு ஹரிபூர்ல கட்ட கூடாதுன்னு விரட்டி அடிச்சிட்டாங்க. 

அப்துல்கலாம் கனவு காண சொன்னாரு, அது ரொம்ப பேருக்கு ரொம்ப ஈசியா இருந்துச்சி. ஹையா ஐயா சொல்லிட்டாரு அப்படினுட்டு ரொம்ப பேரு கனவு காண ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப ஐயாவும் தன்னோட பங்குக்கு இப்படியெல்லாம் எதிர்க்காதீங்க, விளைவுகள் நினைத்தால் விளைச்சல பார்க்க முடியுமா அப்படிங்கிற ரேஞ்சுக்கு சொல்லிட்டாரு. அதனால ரொம்ப பேரு இந்த போராட்டத்தை கைவிட்டுரலாம்னு யோசனையில இருப்பாய்ங்க அப்படினுட்டு ரொம்ப பேரு அப்துல்கலாம் சொல்றதை கேட்காதீங்க அப்படிங்கிற அளவுக்கு போராட்டத்தை தீவிரபடுத்தி இருக்காங்க. 

நம்ம மக்களோட பயம் நியாயம்தானே. ஒழுங்கா ரோடு போட தெரியாதவங்க கிட்ட போய் இந்த அணு உலைய கொடுத்தா குரங்கு கையில பூமாலை கொடுத்த கதை மாதிரி ஆகிப்போயிரும். போபால் கதை எல்லாம் நமக்கு மறந்து போச்சா. அது மறந்துருக்கும், நமக்கு கோபால் கோபால் அப்படிங்கிற வசனம் தான் நியாபகத்துல இருக்கும். நம்ம நாட்டுல இதுவரைக்கும் ஆறு தடவை இந்த அணு உலை சிறு விபத்து நடந்துருக்கு. இதெல்லாம் சின்ன சின்ன விபத்துதான் அப்படின்னு ஒதுக்கி வைக்க முடியாது. அதே நேரத்துல ஒரு விசயத்தை செஞ்சா ஆயிரத்தெட்டு பிரச்சினை வரும், பிரச்சினைய நினைச்சா வாழ முடியுமாலே. பிரச்சினை வரத்தான் செய்யும்னு சொல்றியள, ஏலே பிரச்சினைக்கு என்ன சொலுசண் வைச்சிருக்க,  ஒழுங்கா சேப்ட்டி பண்ணிகிட்டா எங்களுக்கு என்ன பிரச்சினை. அதை சொல்லுவே அப்படிங்கிற மக்களோட கோரிக்கை நியாயம் தானே. ஆனால் உயிருக்கு உத்தரவாதம் கொடுக்க முடிமா என அரசுதனை கேட்டால் அவர்கள் என்ன சித்திரகுப்தர்களையா மந்திரிசபையில் உட்கார வைத்து இருக்கிறார்கள், கணக்குகளை எல்லாம் மாற்றி எழுத. 

மின்சாரம் எப்படி தயாரிக்கிறது அப்படிங்கிறதை பத்தியும், இந்த அணு உலை எப்படி செயல்படுது, வேறு மாற்று வழிகள் என்ன எனபதையும், ஐசொடோப்கள், புளுடோனியம், யுரேனியம் அதனோட 'பாதி வாழ்க்கை காலம்' (4600 மில்லியன் வருடங்கள் அல்லது 4.6  பில்லியன் வருடங்கள் யுரேனியம் பாதியா குறைய), ஆல்பா, பீட்டா, காமா போன்ற கதிர்கள் பத்தின தகவல்களை, இதனால் ஏற்படும் விளைவுகளை இன்னொரு பதிவுல விளக்கமா பார்ப்போம். அப்பத்தான் நம்மவங்களோட பயம் நியாயமா இல்லையா அப்படின்னு தெரியும். 


சரி அதெல்லாம் இருக்கட்டும் என்னதான் முடிவு. 

அணு உலை வேணுங்கிறவங்க தமிழ்நாட்டுல வாழட்டும். 'அணு உலை வேணாம்னு நினைச்சீங்கன்னா, உங்க போராட்டம் ஜெயிக்காதுன்னு ஆகிப்போச்சுனா ஒரே வழி இருக்கிறது. தமிழகத்தை விட்டு மட்டுமில்லை, இந்தியாவை விட்டே ஓடிப்போயிருங்க அப்படின்னு கூட நாலு ஐஞ்சு பேரு அறிவுரை சொல்லலாம். எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டே அவதிபட்டுட்டு அங்கேயே இருங்க. 

மத்தவங்க சொல்றது இருக்கட்டும், நான் என்ன சொல்ல வரேன்னா 'ஊருல மின் பற்றாக்குறை ரொம்ப ஜாஸ்தி. இதுக்கு உற்பத்தி அளவு குறைச்சல் மட்டுமில்லை காரணம். நாம அளவோட மின்சாரத்தை உபயோகம் செய்றது இல்ல. புது வீடு, புது ஏசி, புது சலவை மெசினு, புது மோட்டாரு அப்படின்னு சகல வசதிகளையும் பெருக்கி வைச்சிட்டு நைட்டுல தூங்கறப்ப கூட லைட்ட போட்டு தூங்குறது, நல்ல மழை பெய்யும் ஆனாலும் வாய்க்காலுல தண்ணி விடறது, வக்காளி பொதுக்கூட்டம் போட்டாலும் சரி, ஒரு படம் ரிலீசானாலும் சரி, பொண்ணு வயசுக்கு வந்துட்டாலும் சரி, மாப்பிளைக்கு கல்யாணம் வைச்சாலும் சரி, அம்மனுக்கு தெருவெல்லாம் தேரு இழுத்தாலும் சரி, நட்டு வைச்சிருக்கிற அத்தனை போஸ்ட்ல இருந்தும் கரண்ட களவாடறது, குளிர்காலத்துல ஏசி தியேட்டுர்ல போய் உட்கார்ந்துட்டு ஏசிய போட சொல்லி அலம்பல் பண்றது, அல்லாப்பயகளும் தூங்கனப்புறம் கூட விளம்பர தட்டிக்கு லைட்டு கனக்சன் கொடுக்குறது   இப்படி சகட்டு மேனிக்கு நாம மின்சாரத்தை வேஸ்ட் பண்றத நிறுத்தறதுக்கு ஒரு போராட்டம் நடத்தனும். ஜெயராம் ரமேஷும், கோபால கிருஷ்ணனும், யாரு இவங்க அப்படின்னு கேட்டு தொலைசிராதீங்க, தங்களோட வாய்ச காட்டட்டும். நாமளும் வாய்ச மட்டும் காட்டாம உடனே வெட்டியா ஓடிட்டு இருக்கிற அத்தனை எலேக்டரிகளை நிறுத்துவோம். 

Friday 4 November 2011

திரு. ஞாநி கதை விடுபவரா?

திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது. 

கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது. 

இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை. 

நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது. 

தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை  விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான். 

இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். 

சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம். 

திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது. 

'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....

நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.

எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம். 

நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும். 

இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.

இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும். 

ஊர் கூடி தேர் இழுப்போம்.

எப்படி பணம் அனுப்புவது ?

முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'

அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது. 

'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?

ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'

இந்த உரையாடல் எனது வலைப்பூவில்  நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது. 

இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள். 

இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது  ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும்  எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய். 

ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :) 

Monday 31 October 2011

கைரேகை காவியம் - 1

இது ஏமாற்று கலை அல்ல. இது ஒரு அற்புதமான விசயம். அறிவியல் சார்ந்ததாக இருக்கலாம்.  இந்த கை ரேகை எப்படி அமைகிறது, எப்படி மாறுகிறது போன்ற விசயங்களை அலசப் போகும் ஒரு தேடல். சிறு வயதில் இருந்தே சோதிடம், கை ரேகை போன்றவை மனதில் பெரிய கேள்விக்குறியை எழுப்பின. ஆவலுடன் பல புத்தகங்கள் படித்தேன். ஆனால் இவையெல்லாம் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த இந்த சோதிடம், கை ரேகை எல்லாம் தூக்கி ஒரு ஓரத்தில் வைத்தேன். அவ்வப்போது படித்து பார்க்க ஆர்வம் ஏற்படும்.  எத்தனையோ விசயங்கள் இருக்க இந்த கை ரேகை குறித்த சிந்தனை எழுந்த காரணம் எனது கல்லூரியில் பயிலும் ஒரு வெள்ளைக்கார பெண் தான். 

சமீபத்தில் வாழ்க்கையில் காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை. நல்லவனா, நமக்கு சரிபட்டு வருவானா என பழகி பின்னர் கல்யாணம் பண்ணுவது எல்லாம் அவசியமில்லாத ஒன்று. பழகும் வரை சரியாக இருந்துவிட்டு கல்யாணம் பண்ணிய பின்னர் அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் என்ன செய்வாய்? எனவே திருமணம் பண்ணிய பின்னர் எப்படி இருக்கிறார்களோ அதுபோல வாழ்க்கை மாற்றி அமைத்து கொண்டாலே போதுமானது என பேசிய விசயத்தை அப்படியே அவளது காதலனிடம் அவள் போய் சொல்ல அவனோ இவளிடம் இனிமேல் நமக்கு சரிபட்டு வராது, பிரிந்து விடுவோம் என கூறி இருக்கிறான். இவளோ விளையாட்டுக்கு சொல்கிறான் என நினைக்க அவன் உண்மையிலேயே பிரிந்து விடுவதாகவே கூறி இருக்கிறான். இந்த விசயத்தை என்னிடம் சொன்னபோது எனக்கோ பக் என்று இருந்தது. என்ன மனிதர்கள்? 

நல்லவேளை இப்பொழுதாவது சொன்னானே என மனதை தேற்றி கொண்டாள். வேறு சில காரணம் இருக்கும் என்றேன். இல்லை இல்லை ஒரு வருடம் எந்தவித பிரச்சினையும் இல்லை. நாளை மறுநாள் கூட ஒரு இடத்தில் சந்திப்பதாக இருந்தோம், ஆனால் இந்த விசயத்தை சொன்னதும் அவன் இவ்வாறு செய்துவிட்டான் என்றாள். ஆம் நான் பேசியது காதலை கொச்சைபடுத்தும் விசயம் தான். காதல் பண்ணித்தான் திருமணம் பண்ண வேண்டுமென்பது இல்லை என காதலர்களிடம் சொன்னால் அவர்களுக்கு எரிச்சல் வர வாய்ப்பு இருக்கிறது. நேசம் என்பது, காதல் என்பது புரிந்து கொள்ளும் என்றுதான் எனக்குள் ஒரு வரையறை வைத்து இருந்தேன். ஆனால் உலகில் வித்தியாசமான மனிதர்கள் இருப்பது ஆச்சர்யமான விசயம் இல்லை. அவளது கையை காட்ட சொன்னேன். காட்டினாள். அவளது கைகளில் காதல் ரேகை எனக்கு தெரியவில்லை. 

எனக்கு ஒரு மனைவி, ஒரு காதலி, அப்புறம் ஒரு காதலி என எனது கைகளில் இருந்த ரேகைகளை காட்டினேன். சிரித்தாள். இந்த கை ரேகை ஒரு சுவாரஸ்யமான விசயம். இப்படி அவளது கை ரேகையை பார்த்து கொண்டிருந்தபோது பலரும் வந்து கைகளை காட்ட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கோ ஒரு மாதிரியாகிப் போய்விட்டது. எனக்கு கை ரேகை எல்லாம் பார்க்க தெரியாது. எல்லாம் மறந்து போய்விட்டது. சில காலம் தாருங்கள், படித்துவிட்டு வருகிறேன். இதையெல்லாம் நம்ப கூடாது, ஆனால் சுவராஸ்யமாக இருக்கும் என சொல்லிவிட்டு இந்த கை ரேகை குறித்த ஆய்வில் இறங்கி விட்டேன். இந்த கட்டுரையை எழுத ஆரம்பித்ததும் அருகில் இருந்த எனது மனைவி அவளது கையை என்னிடம் காட்டினாள். கொஞ்சம் பொறுத்து கொள், சொல்கிறேன் என சமாளித்து இதோ எழுதி கொண்டிருக்கிறேன். 

இந்த கைரேகை குறித்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறுகதை கைரேகை பற்றியது. எந்த காரணத்திற்கு அந்த கதையை எழுதினேன் என அந்த கதையிலேயே குறிப்பிட்டு இருந்து இருப்பேன். இந்த ஜோதிடம், கைரேகை, நாடி சோதிடம் எல்லாம் மக்களை ஒரு மயக்க நிலையில் வைத்திருப்பவை என்றாலும் இதன் மேல் அனைவருக்கும் ஒருவித நாட்டம் இருப்பது ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சில மனிதர்கள் முகத்தின் குறிப்பை அறிந்து அகத்தில் இருப்பதை சொல்லிவிடுவார்கள். அதுபோல மருத்துவர்களிடம் சென்றால் மருத்துவர் நமது கண்களில் ரத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை வைத்து நமது நோயினை தீர்மானிப்பார். இந்த கையும் ரேகையும் அப்படித்தான். ஒரு கையானது எப்படி மடக்கப்படுகிறது, எப்படி உபயோகப்படுத்த படுகிறது என்பது பொறுத்து கையில் ரேகைகள் அமைந்துவிடும். 

இது மிகவும் உன்னதமான கலை. இந்த அற்புதமான கலையை கற்றுக்கொள்ள ஆர்வம் இருப்பவர்கள் தாரளாமாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் எனக்கு இப்படி இருக்கிறதே, அப்படி இருக்கிறதே என நீங்கள் தேவையில்லாமல் வருத்தப்படுபவர்களாக இருந்தால் தயவு செய்து கைரேகையை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். 

இந்த கைரேகை குறித்து பல விசயங்கள் என்னை ஆச்சர்யம் அடைய செய்து இருக்கின்றன. பல வருடங்கள் முன்னர் மதுரை மீனாக்ஷி கோவில் ஒன்றில் அமர்ந்து இருந்த ஒருவர் எனது கைரேகையை பார்த்து நீ மீனம் ராசி என்றார். தவறாக சொல்கிறீர்கள், நான் மீன ராசி இல்லை என்றேன். அவர் கொஞ்சமும் சலனம் இல்லாமல் தம்பிக்கு கைரேகையில் நம்பிக்கை இல்லையோ என்றார். தவறுதனை தவறு என்றுதானே சொல்ல முடியும் என்றேன். ஆனால் அவர் நீங்கள் மீன ராசி தான், இந்த அம்மனுக்கு தெரியும் என்றார். ஆச்சர்யமாக போய்விட்டது. எங்கேனும் நான் ராசி சொல்லி அதை ஒட்டு கேட்டாரா என எனக்கு தெரியாது. ஆனால் கை ரேகை மூலம் எனது ராசியை மிக சரியாக கணித்த அந்த மனிதரை நான் தவறவிட்டு விட்டேன் என்றுதான் நினைக்கிறேன். சில மனிதர்கள் அதிசயமானவர்கள். 

பார்மசி கல்லூரியின் விடுதியில் மாலை ஒன்றில் வெளியில் நண்பர்களோடு அமர்ந்து இருக்க எனது கையை பார்த்துவிட்டு கையை மூடிக்கொள் எவரிடமும் காட்டாதே என சாலமன் ரேகையை சொல்லி சென்ற ஒரு மனிதரை மனது இன்னமும் நினைத்து கொண்டுதானிருக்கிறது. இரண்டு கைகளையும் இணைத்து பார்த்துவிட்டு அழகான மனைவி அமைவாள் என்று ஒருவர் சொன்னது குறித்து இன்னமும் இரண்டு கைகளை அவ்வப்போது இணைத்து பார்த்து அழகு பார்ப்பேன். சில பல  ரேகை வளர்கிறதா, தேய்கிறதா என சோதனை செய்வேன். சனி மேடு, குறு மேடு என ஆயுள் ரேகை, புத்தி ரேகை என பல விசயங்கள் ஆச்சர்யம் பட செய்கின்றன. இவையெல்லாம் உழைக்கும் மனிதருக்கு பெரிய விசயமாக படுவதில்லை, நேரமும் இருப்பதில்லை. 

பெருவிரலில் இரண்டு ரேகைகள் இணைந்து ஒரு வளையம் போலிருந்தால் பணம் அதிகமிருக்கும் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் வந்த பணம் கரைந்தோடும் என சொல்வதும் சிரிப்பாக இருக்கும். அத்தனை ரகசியங்களை நமது உடலைமைப்பு வைத்திருப்பதை சாமுத்ரிகா லட்சணம் என பிரித்து வைத்தார்கள். பிறப்புறுப்புகள் கூட எப்படி எப்படி இருக்கும் எனவும் எப்படி பட்ட கனவானுக்கு எப்படிபட்ட மனைவி பொருத்தம் என்றெல்லாம் எப்படி சிந்தனை செய்தார்கள். ஆராய்ச்சி செய்து சொன்னார்களா? எத்தனை பேர் இந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டார்கள் என்பதெல்லாம் தேடலில் கிடைக்குமோ தெரியாது. 

ஆட்காட்டி விரலில் அமைந்திருக்கும் ரேகை அமைப்பானது ஒரு பெரிய விசயத்தை சொல்லும் என்கிறார்கள். அதைப்போல இந்த ரேகை அமைப்பு எவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்கிறார்கள். இதனால்தான் படிக்காத காலத்தில் கை ரேகையை நகல் எடுப்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்த கை ரேகைக்கும் மரபணுக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்க கூடும் என்றால் இரட்டை குழந்தைகளின் ரேகைகளும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார்கள். இது குறித்த ஆராய்ச்சி இன்னும் தேவை. 

ஆனால் இதை மட்டும் நம்பி அவரவர் வாழ்க்கையை தொலைத்தல் என்பது மிகவும் தவறு. எனவே இந்த கைரேகை, சோதிடம் எல்லாம் ஒரு குறியீடாக மட்டுமே வைத்துக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் சிறந்தது. 

(தொடரும்) 

Friday 28 October 2011

ஏழாம் அறிவு

ஒரு திரைப்படத்தை திரைப்படமாக பார்க்காமல் அதில் என்ன குறை இருக்கிறது, எதற்கு இப்படி படம் பார்ப்பவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள் எனும் சத்தம் தமிழ் திரையுலகில், விமர்சன கூட்டத்தில்  மிகவும் அதிகமாகவே உண்டு. எதுக்குதான் இப்படி பணத்தை செலவழிச்சி குப்பை படம் எடுக்கிறாங்களோ என குறைப்பட்ட படங்கள் தமிழில் அதிகமாகவே உண்டு. நாம் நமது பணத்தை செலவழித்து ஒரு படத்தை மட்டுமல்ல, எந்த ஒரு விசயத்தையுமே செய்யும்போது ஆயிரம் நல்ல விசயங்கள் இருந்தாலும் ஒரு சில கெட்ட விசயங்கள் இருந்தால் அதை தூக்கிப் பிடிப்பதுதான் மனித எண்ணத்தின் இயற்கை. அதைவிட தன் மொழியில், தன்னால் இயலாத ஒன்றை ஒருவர் செய்து காட்டுகிறாரே என்கிற எரிச்சல் நிறைய பேருக்கு தமிழ் உலகில் உண்டு.

எதற்கெடுத்தாலும் இது அங்கே இருந்து காப்பி அடிச்சது, இங்கே இருந்து எடுத்து போட்டது என புலம்பி தள்ளுபவர்கள் மத்தியில் ஒரு திரைப்படம் அது சொல்ல வந்த விசயத்தை விஷமமாக்கி காட்டும் பண்பு நம்மிடம் அதிகமே உண்டு. அதைப்போல ஒருவர் என்ன எழுதுகிறார், என்ன சொல்கிறார் என்பதை பாலானது எப்படி தன்னிடம் இருக்கும் இனிப்பை அமிலமாக்கி தன்னை திரித்து கொள்கிறதோ அதைப்போல தங்களை தாங்களே குற்றம் சொல்லி தமிழர்கள் தலை குனிந்து கொள்கிறார்கள்.

நமது தமிழ் திரையுலகம் மாற வேண்டும், ஆங்கில படங்களுக்கு இணையாக வளர வேண்டும் என்கிற ஒரு கோட்பாடு எல்லாரின் மனதிலும் உண்டு. அதாவது கதை இருக்க வேண்டும், திரைக்கதை சீராக இருக்க வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஒரு நல்ல விசயத்தை மிகவும் தெளிவாக சொல்ல வேண்டும் என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு. தொழில்நுட்பம் அதிகம் இல்லாத காலங்களில் பண்பாடு குறித்த, உறவுகள் குறித்த கதைகள் மக்களின் ரசனையை அதிகம் ஈர்த்தன, சிறந்த கதை அம்சம் உள்ள படங்கள் என பாராட்டப்பட்டன. இன்றும் கூட உறவுகள், காதல், நட்பு பற்றிய படங்கள் சிறந்த திரைக்கதை வடிவத்துடன் வந்தால் மக்களால் நேசிக்கப்படுகின்றன. காதல் இல்லாமல் கதை சொல்ல முடியாது என்பதுதான் நமது தமிழ் திரையுலகம் கண்ட ஒரு வெற்றி படிவம். 

பொதுவாகவே நமது முன்னோர்கள் பற்றிய சிந்தனை நம்மில் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் சிந்தனைக்கு எட்டிய விசயங்களை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லி சென்றதால் மூட நம்பிக்கை மடையர்கள் என அவர்கள் திட்டப்பட்டார்கள். இதில் சித்தர்கள் பற்றி சொல்லவே வேண்டாம். போதி தர்மர் என்ன பெரிய போதி தர்மர்? புத்த மதம் வேறு நாடுகளில் பரவியது, இந்தியாவில் இல்லாமல் ஒழிந்து போனது. இந்து மதத்தின் கோட்பாடுகளை புத்த மதம் திருடியதுதான் என்பார் பலர். ஆனால் புத்த மதத்தின் மிகவும் மென்மையான கடவுளை எதிர்க்கும் கோட்பாடு உண்மையிலேயே ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை. கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என உலகெங்கும் வீரம் பாராட்டியவர்கள் தமிழர்கள் என்பதை பாடப் புத்தகத்தில் கூட வைத்து இருக்கிறார்கள். தமிழர்களின் சிற்ப கலை, நுட்ப கலை என பல விசயங்கள் நம்மால் புறக்கணிக்கப்பட்டு விட்டன. 

புராணங்களில் சொல்லப்பட்ட பல விசயங்கள் நம்மவர்களால் கேலி கூத்தாக்கப்படுவது உண்டு. அதெல்லாம் எப்படி சாத்தியம், இதெல்லாம் எப்படி சாத்தியம் என வெட்டியாக கூவிவிட்டு போய்விடுவார்கள். கூடு விட்டு கூடு பாயும் கலை அறிந்த திருமூலர், சகல மருத்துவங்களையும் சொல்லி சென்ற போகர். இந்த சித்தர்கள் பற்றிய வரலாறு மிகவும் விசித்திரமான, நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கும். நாம் எப்பொழுதும் நம்மை பெருமை படுத்திப் பார்ப்பதில்லை என்பதுதான் இயற்கையாக நடக்க கூடிய விசயம்.

இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பொக்கிஷங்கள், அதாவது பணம், நகை, கலை உட்பட எல்லாம் வெளிநாடுகளில் தான் பெரும் பரவலாகப் பேசப்படுகிறது. தியானத்தை, யோகா பயிற்சி முறையை, எண்களை தந்தது இந்தியாதான் ஆனால் அதை கற்று கொண்டிருப்பது உலகில் உள்ள மக்கள். நாம் பெருமைப்பட்டு கொண்டு நாமும் கற்று சிறக்க வேண்டும். உலகப் பொதுமறை என்பது திருக்குறளுக்கு மட்டுமே கிடைத்த பெருமை, எந்த ஒரு நூலுக்கும், அதுவும் மத நூலுக்கும் கூட அப்படி ஒரு பெருமை கிடையாது. 

தமிழ் பற்றிய பெருமையை தமிழர்கள் நாம் தான் பேச வேண்டும். தம்பட்டம் என்பது வேறு. இப்படியெல்லாம் இருக்கிறது என தன்மையுடன் சொல்வது வேறு.  சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஆங்கிலேயர்களை எவரும் காப்பி அடித்தான் என சொல்லி புலம்புவதில்லை. ஒரு அவதார் படம் வந்தபோது அந்த படத்தின் அடிப்படை கதையம்சம் இந்தியாவில் இருந்துதான் திருடப்பட்டது என்பாரும் உளர். பகவத் கீதை சொல்லும் ஒரு அரிய வாசகம் என ஒரு தமிழரால் எழுதப்பட்ட 'எல்லாம் இங்கிருந்தே எடுக்கப்பட்டது' என்பதுதான் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. 

அடுத்தது, படிச்சவன் எல்லாம் வெளிநாட்டுக்கு போயிடுறான் அப்படின்னு ஒரு பேச்சு. வெளிநாட்டுக்கு போனவங்கள எத்தனை பேரு பெரிய சாதனையாளர்கள் அப்படின்னு பேரு எடுத்து இருக்காங்க. இந்தியாவில வசதி இல்லை, ஊழல் அது இது அப்படின்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. எனக்கு தெரிந்து எனது நண்பர்கள் இன்னும் பலர் இந்தியாவில் தான் வேலை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நான் சாதித்ததை விட அவர்கள் நிறையவே சாதித்து இருக்கிறார்கள். வெளிநாடு வேண்டாம் என வாய்ப்பு கிடைத்தும் அதை ஒதுக்கி தள்ளியவர்களை நான் கண்டதுண்டு. அது எதற்கு,  படிக்காதவங்க கூட வெளிநாடுகளில் சென்று வேலை பார்க்கத்தான் செய்கிறார்கள். எல்லாம் பொருளாதார வேறுபாடு. திரை கடலோடி திரவியம் தேடு என சொல்லி வைத்த சமூகம் நமது சமூகம் தான். அதைப்போலவே உலகில் வாழ்ந்த மக்கள் வெவ்வேறு நாடுகளுக்கு சென்றார்கள் என்கிறது வரலாறு. இது போன்ற குற்றசாட்டுகளை, நமது மக்களை நாமே மதிப்பது இல்லை என்பது போன்ற நிகழ்வுகள் எல்லாம் படத்தில் வருவது சகஜமாகிவிட்டது. 

ஐந்து உணர்வுகள் தான் உயிரினங்களுக்கு பொது, அதாவது பார்க்கும் தன்மை, கேட்கும் தன்மை, தொடுதல் உணர்வு, சுவை உணர்வு மற்றும் வாசம் உணர்வு. சில உயிரினங்களுக்கு இந்த உணர்வுகள் சற்று குறைவாகவே இருக்கும். சில உயிரனங்கள், காந்த சக்தி, மின் சக்தி போன்ற வேறு பல சக்திகளை உணரும் தன்மையும் உண்டு என சொல்வார்கள். நாய் ஊளையிடுது, நரி ஊளையிடுது என அதற்கு காரணம் காட்டிய தன்மை நம்மில் உண்டு. மேலும் பல உணர்வுகள் நமது உடலுக்குள் நரம்புகளால் தூண்டப்படுகின்றன என்பது அறிவியலின் கண்டுபிடிப்பு. அதாவது நமது உடலில் உள்ள உறுப்புகள் எப்படியெல்லாம் வேலை செய்கின்றன என்பது இந்த உணர்வுகளின் அடிப்படையில் தான். நமது மூளை செயல்பாடு நரம்புகள் மட்டும் வேதி பொருட்களினால் நடைபெறுகிறது என்பதுதான் இப்பொழுது நாம் கண்டு கொண்ட ஒரு விசயம். 

இதையெல்லாம் தாண்டி இப்பொழுது மரபணுக்கள் பற்றிய ஆராய்ச்சி பெருமளவில் நடத்தபடுகிறது. இது மிகவும் அளப்பற்கரிய முன்னேற்றம். எந்த மரபணு எந்த புரதத்தை உருவாக்கும் என்பது வரை நமது அறிவியல் சென்று கொண்டிருக்கிறது. எந்த மரபணு எந்த நோயை உருவாக்கும் என்பது வரை நமது பயணம் செல்கிறது. ஆனால் இது மட்டுமே காரணி அல்ல என்பதும் அறிவியலுக்கு தெரியும். மேலும் ஒன்றை மறந்து விடுகிறார்கள், நமது அறிவு மரபணுக்களில் ஒளிந்திருப்பது இல்லை. எனது தாய்க்கு தெரியாத ஆங்கிலம் எனக்கு தெரியும். எனது தந்தைக்கு புரியாத மொழி எனக்கு புரியும். எனக்கு தெரியாத கலைகள் அவர்களுக்கு தெரியும். இது நரம்புகளின் செயல்பாடு என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். இந்த கற்று கொள்தல் எல்லாம் மரபு வழியாக செல்வதே இல்லை. எனது தாத்தாவுக்கு தெரிந்த கலை எனக்கும் தெரிந்து இருக்க வேண்டும். இந்த கருத்தில் கொண்ட வேறுபாடுதான் லமார்க் என்பவரை விட டார்வின் பெயர் அதிகம் பேசப்பட்டது.

லமார்க் கொள்கை 'தந்தையின் அறிவு பிள்ளைக்கு செல்லும் என்பது' டார்வின் கொள்கை 'எது உயிர் வாழ பயன் தருகிறதோ அந்த தன்மை மற்ற உயிருக்கு செல்லும் என்பது'  படிக்காமல் ஒருவர் உயிர் வாழ முடியாது என நிலை வந்தால் படிக்கும் தன்மையுள்ள மரபணு உருவாகலாம் என்பதுதான் பரிணாமத்தின் சாரம்சம். ஆனால் இது மட்டும் காரணி அல்ல என்பதை நினைவு கொள்வோம். வாழ்வில் பல விசயங்களை சுருக்கி கொள்ள முடியாது.

உலகில் இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று இயற்கை. மற்றொன்று செயற்கை. மொழியில்லா ஒலி எழுப்புவது இயற்கை. மொழியுடன் ஒலி எழுப்பவது செயற்கை, அதாவது கற்று கொள்தல். போதி தர்மனின் ஆய கலைகளும் அவனது பேரனுக்கு செல்வது என்பது எல்லாம் கதை. ஆம் கதை. இது கதை. ஒரு ஊருல ஒரு ராஜாவாம் என சொல்லும் கதையை போல இந்த கதையை கதையாக பார்க்க வேண்டும். அதற்கடுத்து பொதுவாக இன்றைய கால கட்டத்தில் விமானத்தில் ஒரு மசால் பொடி எடுத்து கொண்டு போனால் கூட நாய் மோப்பம் பிடித்துவிடும். அதையெல்லாம் தாண்டிய ஒரு வரத்து போன சிந்தனை இந்த போதி தர்மனை சிதறடித்து விட்டது. போதி தர்மனின் வாழ்க்கை வரலாற்றை சுவாரஸ்யமாக சொல்லி இருந்தாலே இந்த ஏழாம் அறிவு பெரிதளவு பேசப்பட்டிருக்கும், அதைவிட்டுவிட்டு இவரை தெரியுமா என இண்டர்நெட்டிலும், சில பல இடங்களிலும் திருடிவிட்டு நான் தான் இவரை கண்டுபிடித்தேன் என கொடி தூக்குவது கொடுமை. இந்த போதி தர்மனை பற்றி விக்கிபீடியாவில் எழுதியவர் கூட இத்தனை தம்பட்டம் அடித்து கொண்டிருக்க மாட்டார். இன்னும் பல வரலாற்று மனிதர்கள் விக்கிபீடியாவில் இருக்கிறார்கள். பல புத்தகங்களில் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனது நண்பர் ஒருவர் களப்பிரர் காலம் பற்றிய சிந்தனையை கதையில் சொன்னது உண்டு. பல்லவர், சேரர், சோழர், பாண்டியர் என அவர்களது வரலாற்றில் சொல்லப்பட்ட விசயங்கள் பெரும் காவியங்கள் தான். ஒரு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதிய இளங்கோ அரச குடும்பத்தில் இருந்தவர்தான். புத்தர் கூட அரசு குடும்பத்தை சேர்ந்தவர்தான். போதி தர்மர். இவரை தெரியுமா? அட அட! இந்த போதி தர்மரை விட சித்த வைத்தியம் எனும் முறை தெரிந்த பல குடும்பங்கள் தமிழகத்தில் உண்டு.

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன். பார்க்கப் போறா, பார்க்கப் போறா, ஐயோ பாத்துட்டா என தன்னை பார்க்காத ஒரு பெண்ணை தான் பார்ப்பதால் தன்னை பார்ப்பாள் என நினைக்கும் செயல்பாடு. அந்த கண்கள் மூலம் பிறரை மயக்கலாம் என்பது பொது விதி. கிறங்கடிக்கும் பார்வை. மயங்க வைக்கும் பார்வை. ஒருவரை நேருக்கு நேராக பல நிமிடங்கள் எங்குமே பார்க்காமல் பார்த்து கொண்டே இருங்கள். அதற்கடுத்து நடக்கும் நிகழ்வுகளை குறித்து கொள்ளுங்கள். காதலால் கசிந்து உருகி, கண்ணீர் மல்கி. சிலரை பார்க்க அச்சம் ஏற்படும். சிலரை பார்க்க சந்தோசம் ஏற்படும். இந்த உணர்வுகளை கண்கள் எப்படி மூளைக்கு கடத்துகிறது? ஒளியின் தன்மையா? டெலிபதி என ஒன்றும் உண்டு. நாம் இங்கு ஒன்றை நினைக்க எங்கோ இருப்பவர் உணர்தல். இப்படி பல மர்மங்கள் அடங்கியது இந்த வாழ்வும், நமது எண்ணங்களும். அதைப் பற்றிய ஆராய்ச்சி உலகில் எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில விசயங்கள் புரியாமலே இருக்கின்றன. ஆறாம் அறிவு என்பதே சுத்த மோசம். அதில் ஏழாம் அறிவாம். இருப்பது ஒரு அறிவுதான். அதை எப்படி உபயோகப்படுத்துகிறோம் என்பதில் தான் உள்ளது நமது எண்ணமும் செயல்பாடும்.

ஆறாம் உணர்வு எனும் ஒரு படம் நமது தமிழரால் 'நைட் சியாமளன்' என்பவரால் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் அந்த படத்தில் வரும் கதை எல்லாம் சாத்தியம் இல்லாத கதை. இறந்தவர்களுடன் பேசுவது, இறந்தவர்களை காண்பது என்பதெல்லாம் கண்கட்டி வித்தை. ஆனால் அந்த கண்கட்டி வித்தையை நம்மில் பலர் உணர்வதாக சொல்வது உண்டு. எனது ஊரே பேய் ஊரு என்றுதான் சொல்லப்பட்டு உண்டு. அந்த கதையின் முடிவு அந்த இயக்குனரை பாராட்ட சொல்லும். சாத்தியம் இல்லாத ஒன்று எனினும் சொல்லப்படும் விதம் பலரை கவர்ந்து விடும்.

எந்திரன் எப்படி ஏமாற்றியதோ அப்படித்தான் பலரும் இந்த ஏழாம் அறிவு பார்த்து ஏமாந்து இருப்பார்கள். சிலரும் பாராட்டி இருப்பார்கள்.

அறிவியல் பக்கம் போக வேண்டும் எனும் ஆர்வத்துடன் பணியாற்றும் தமிழ் இயக்குனர்கள் சற்று திரைக்கதையில் கவனம் செலுத்துவதோடு இல்லாமல் நாலு டான்சு பாட்டு, ஒரு குத்து பாட்டு, ஒரு மெலடி, மூணு சண்டை காட்சி என கழுத்தறுக்காமல் அந்த நேரத்தையெல்லாம் திரைக்கதை அமைப்பில் செலவழித்தால் நலம். பாடல் எல்லாம் கேட்பதற்கு என இசை வடிவமாக மட்டுமே வெளியிடுங்கள். பாடலாசிரியர்கள் பிழைத்துவிட்டு போகட்டும்.

சரி இந்த படத்தோட விமர்சனம் எழுதலைன்னு நீங்க கேட்டா, கஷ்டப்பட்டு பல வருசம் உழைச்சி அட்டகாசமா ஒரு படம் எடுத்திருக்கோம்னு நினைச்சி பெருமைபட்டவங்க கிட்ட போங்கப்பா நீங்களும் உங்க குப்பை சிந்தனையும் அப்படின்னு சொன்னா அவங்களுக்கு வலிக்குமா வலிக்காதா? அது சரி இப்படி எழுதி என்னதான் சொல்ல வரேன்னு நீங்க கேட்டா நான் என்ன பண்றது. 


Wednesday 19 October 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)


சுவாசம் என்பது மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது. இந்த சுவாசம் ஒரு இயந்திர தன்மையாக இருக்கும்பட்சத்தில் அதிகளவு உபயோகமில்லை. ஆனால் அதே வேளையில் இந்த சுவாசத்தினால் ஒரு வேதிவினை நடைபெறும்போதுதான் இதன் முக்கியத்துவம் மிகவும் மனதில் கொள்ளவேண்டியது. 

மூச்சை அடக்கி வாழும் வாழ்க்கை என்பது ஒரு சில நிமிடங்கள் மட்டுமே சாத்தியம். தாவரங்கள் கரியமில வாயுவை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது. நாமோ ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறோம். 

தாவரத்தின் சுவாசம் இலையின் மூலமாகவே நடைபெறுகிறது. இலையில் இருக்கும் காற்றிடங்கள் இதற்கு உருதுணையாகின்றன. ஸ்டாமோடா எனப்படும் சிறு துளையானது தவாரங்கள் சுவாசிக்க உதவுகின்றன. 

ஒவ்வொரு உயிர் வாழ் இனமும் தனக்குள் வெவ்வேறு உடல் அமைப்பை வைத்துக்கொண்டு சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன. நமக்கு மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என நுரையீரல் அமைப்புடன் சுவாசிக்கின்றோம். இந்த மூச்சுக்குழல், கிளைக்குழல், சுவாசப்பை என பகுதியில் ஏற்படும் பிரச்சினைகளே ஆஸ்த்மா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணமாகும். 

இந்த அமைப்பானது பஞ்சு போன்று மெருதுவாக இருக்கும். சுவாசப்பைகள் மிகவும் சின்னதாக காணப்படும். இந்த சுவாசப்பைகள் வாயுக்கள் பரிமாற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன. சுவாசப்பைகள் சிறிதாக இருப்பதினாலும், ரத்த நாளங்கள் அதிகளவில் வந்து செல்வதாலும் வாயுக்கள் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக செய்து கொள்கின்றன. இந்த நுரையீரலும், இருதயமும் இணைந்து பணியாற்றுவதால் நமது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் தேவையான ஆக்சிஜன் பரிமாற்றமும், கரியமில வாயு வெளியேற்றமும் நடைபெறுகிறது. 

இந்த நுரையீரல் அமைப்பில் இருக்கும் திசுக்கள், நார், சுரக்கும் காரணிகள் என இந்த நுரையீரலை பாதுகாத்து கொள்ளும் வகையில் பல விசயங்கள் அமையப்பெற்று இருக்கின்றன. பொதுவாகவே நமது உடலில் இருக்கும் திசுக்களுக்கு தம்மை தாமே சரி செய்து கொள்ளும் செயல்பாடுகள் உண்டு. சரிசெய்யும் அளவிற்கு விட மிஞ்சும்போதுதான் பிரச்சினைகள் உருவாகின்றன. 

நமது உடலில் ஏதேனும் உபாதைகள் ஏற்பட்டால் நமது ரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்கள் குழுவில் உள்ள நியுட்ரோபில், பெசொபில், எசிநோபில், மேக்ரோபெஜ், மோனோசைட், லிம்போசைட் என்பவை பெருமளவில் உதவிபுரிகின்றன. இவையே நமது உடலில் உள்ள பிரச்சனைகளை சரிகட்டும் நிபுணர்கள். 

இப்படி நாம் இந்த நுரையீரல் அமைப்புடன் சுவாசித்து கொண்டிருக்க, மீன்களோ வேறு சுவாச அமைப்பு பெற்று இருக்கிறது. அவைகளுக்கு இந்த நுரையீரல் அமைப்பு கிடையாது. அதற்கு பதிலாக செதில்கள் மூலம் சுவாசம் அதுவும் நீரில் மட்டுமே சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. தவளைகள் தனது தோள்களின் மூலம் நீரிலும், சிறிய நுரையீரல் அமைப்புடன் நிலையத்திலும் சுவாசிக்கும் தன்மை உடையவனாக இருக்கின்றன. எறும்புகள் போன்றவை எல்லாம் இது எல்லாம் எதற்கு என நேரடியாக காற்றினை தனது செல்களுக்கே அனுப்பி வைத்து விடுகின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமும் இப்படி இருக்க ஆஸ்த்மா மனித குலத்திற்கே மட்டும் தானா பிரச்சினை? 

பிரணாயமம் பற்றி நமது முன்னோர்கள் கூறியதை நாம் இப்போது நினைவு கூர்வோம். நமது சுற்றுப்புறம் மிகவும் சுத்தமானதாகவும், நமது சுவாசம் சீராகவும் இருந்தால் நெடுங்காலம் வாழலாம் என்பது அவர்களின் கணிப்பு. அது முற்றிலும் உண்மை. 

விஷம்தனை உண்டு அதிக நாள் உயிர் வாழ்வோர் உண்டோ? சுற்றுப்புற மாசுவினால் நாம் விஷத்தை உள்ளிழுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறோம்.
நாம் எப்படி மூச்சு விடுகிறோம் என்பதை நாம் உன்னிப்பாக கவனித்து பார்த்தல் அதுவே ஒரு தியானத்திற்கு சமானம். குறிப்பிட்ட நேரத்தில் வலது நாசி புறமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் இடது நாசி புறமாகவும், சில நேரங்களில் இரண்டு நாசிகள் வழியாக சுவாசம் செய்கிறோம் என எவரேனும் நம்மிடம் வந்து சொன்னால் நமக்கு வேலை அற்றவர்களின் வீண் வேலை என சொல்லத்தான் தோன்றும். ஆனால் எதற்கும் ஒரு நாள் இதற்கென நேரம் செலவிட்டுப் பார்த்தால் சொல்வதில் உள்ள சூட்சுமம் தெரியும். 

நாசியில் இருந்து தொடங்கும் இந்த பயணம் நுரையீரல் வரை சென்று அங்கிருந்து வேறு பயணம் தொடங்குகிறது. நாம் உட்கொள்ளும் உணவானது மூச்சுக்குழல் வழி சென்றிடாது ஒரு மூடி போன்ற அமைப்பு நம்மை பாதுகாத்து வருகிறது. ஏதேனும் மூச்சுக்குழல் வழியாக சென்றுவிட்டால் புரையேறிவிட்டது என இருமல் மூலமாக நாம் அந்த பொருளை வெளியேற்றி விடுகிறோம். இதற்கு எல்லாம் காரணமாக இருப்பது நரம்பியல் மண்டலம் தான். இந்த நரம்பியல் மண்டலம் எல்லா தகவல்களையும் சேகரித்து என்ன செய்வது என்ன செய்யக்கூடாது என ஒரு திட்டவட்டமட்டமாக பணிபுரிந்து வருகிறது. 

நமக்கு பயம் ஏற்பட்டாலோ அல்லது உடற்பயிற்சி செய்தாலோ நமது சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கிறது. இதற்கு காரணம் நமது திசுக்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் ஆக்சிஜன். அதோடு மட்டுமல்லாமல் இருதயம் இதற்கென வேகமாக துடிக்கவும் செய்கிறது. அதற்கேற்றாற்போல் நமது சுவாசத்தன்மையும் ஈடு கொடுக்கிறது. 

இப்படிப்பட்ட சகல சௌபாக்கியங்களையும் கொண்டுள்ள நமது நுரையீரல் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தான் என்ன? மூச்சு திணறல் மூலம் அவஸ்தைப்படும் நபர்களின் அனுபவங்கள் சொல்லும் கதைகள் பல. இந்த விசயத்தை குறித்த ஆராய்ச்சிகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. சுவாசம் இல்லாவிட்டால் சுக வாசம் ஏது?






Friday 14 October 2011

தண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா

நியூட்ரினோ ஒரு போங்காட்டம் அப்படினு ஒரு தலைப்புல எழுத நினைச்சேன். அதைப் பத்தி மனசுல நினைச்சிட்டே இருக்கறப்ப சவால் சிறுகதை பத்திய அறிவிப்பு பார்த்தேன். சரி போங்காட்டம் அப்படின்னு ஒரு தலைப்பு வைச்சி ஒரு சிறுகதையை எழுதி முடிச்சிட்டேன். நியூட்ரினோவுக்கு போங்காட்டம் தான்.

எப்ப பார்த்தாலும் உலகை திருத்த வந்த உத்தம சிகாமணி மாதிரி எழுத்துல வேஷம் கட்டினா எதுனாச்சும் நடக்கவாப் போகுது. வாழ்க்கைய சீரியசாப் பார்த்தா அப்புறம் ஐ சி யு ல கொண்டு போய் சேர்க்க வேண்டியதுதான் அப்படின்ற ஒரு அடிப்படை எண்ணம கூட வந்து சேரலை. என்ன செய்ய, செய்ய முடியாதவங்க சிந்திக்க மட்டும் செய்வாங்கன்னு சொல்லிக்கிற வேண்டியதுதான்.

பல மாசங்களா இந்த பதிவுலகம் பக்கமே அவ்வளவா எட்டிப் பார்க்கலை. எல்லாம் தலை போற காரியம்னு நினைச்சி, இந்த ஊரை சீர்படுத்த வந்த தியாக செம்மல்னு நினைச்சிகிட்டு அப்பப்பா ஒருவழியா ஒரு வருஷம் ஓடிப் போச்சு. இன்னும் தலை போற காரியம் நிறைய இருக்கு. அப்ப அப்ப எழுதுவோம்னு அப்ப அப்ப நினைப்பு வரும்.

சரி, என்ன என்ன எழுதி வைச்சிருக்கொம்னு பார்த்தா ரொம்ப தொடர்கள் அந்தரத்தில தொங்கிட்டு இருக்கு. ஒன்னு ஆரம்பிச்சி அதை தொடர்ந்து செய்யணும், இல்லேன்னா ஆரம்பிக்க கூடாது. அப்படி ஆரம்பிச்சிட்டா முடிச்சிரனும் அல்லது தொடர்ந்து வாரம் வாரம் எழுதணும். இப்படி எந்த நிர்பந்தம் இல்லாம, கொள்கையும் இல்லாம எழுதினா 'மொக்கை பாண்டி' அப்படின்னு ஒரு பட்டம் போட்டுக்கிரலாம்.

இப்படித்தான் ஒரு பில்டர் அங்கொரு இங்கொரு வேலைன்னு எல்லா வேலையும் வாங்கி வைச்சிகிருவானாம். ஒரு வேலையும் ஒழுங்கா முடிச்சி தரமாட்டானாம். இப்போ முடிக்கிறேன், அப்போ முடிக்கிறேனு இழுத்து அடிப்பானாம். அது மாதிரி எழுத்துல இருந்தா எழுத்து வசப்படுமா.

சரி இந்த நியூட்ரினோ எதுக்கு, தண்ணீர் வரம் தலைப்பு எதுக்கு. எல்லாம் அறிவியல் பண்ற கூத்து தான். எதையாவது சொல்லிட்டே இருந்தாத்தான் அறிவியல் பத்தி பரபரப்பா பேசுவாங்க.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ஒளியை விட வேகமாக செல்லும் பொருள் எதுவுமே இவ்வுலகில் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை அப்படின்னுட்டு. இவர் சொன்னதை இதுவரைக்கும் யாருமே முறியடிக்க முடியலையாம். ஒளி தான் அதி வேகமாம். ஆமா இந்த ஒளி எது? இயற்பியல் பாடம் தான் எடுக்கனும். இந்த ஒளிக் கீற்றுகளில் மொத்தம் ஏழு வகையா பிரிச்சி இருக்காங்க, அதனுடைய அலை நீளத்தை கணக்கில் வைச்சி. அந்த அத்தனை ஒளியும் ஒரே வேகம் தானாம். இந்த ஒளியின் வேகம் வேறுபட்ட கனம் நிறைந்த பொருள்களில் செல்லும் போது குறையுமாம்.

சரி இந்த நியூட்ரினோ எங்கே இருந்து வந்திச்சி. என்ன பண்றது. புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் அப்படின்னு படிச்சி வந்தவங்க கிட்ட அதையும் தாண்டிய பல அணு துகள்கள் இருக்குன்னு சொன்னா எப்படி இருக்கும், அப்படித்தான் பல அணு துகள்கள் இருக்காம். அதுல ஒண்ணுதான் இந்த நியூட்ரினோ. இருந்துட்டு போகட்டுமே, இந்த நியூட்ரினோவா சாப்பாடு போடப் போகுது.

அது இல்லை பிரச்சினை, இந்த நியூட்ரினோ ரொம்ப வேகமாம். அதாவது ஒளியை விட மில்லி செகண்டு வேகமா போகுதாம். இதை உங்ககிட்டே விடறேன், நீங்களே அறிஞ்சி சொல்லுங்க அப்படின்னு பல வருசமா ஆராய்ச்சி பண்ணுன கூட்டம் அறிவிசிருச்சாம். சரி இப்போ அதுக்கென்ன அப்படினா, ஐன்ஸ்டீன் சொன்னது பொய், இதுவரைக்கும் சொல்லிட்டு வந்த பெரும் பிளவு கொள்கை எல்லாம் பொய் அப்படின்னு நிரூபணம் செய்யலாமாம். செஞ்சி...கால காலமா ஒன்னை சொல்லி இன்னொன்னை மாத்துரதுதானே நம்ம அறிவியலோட வேலை. அதுக்குத்தானே அறி இயல்.

இந்த செய்தி வந்த நேரம் பெரும் பரபரப்பு. இப்ப அப்படியே அடங்கி போச்சு. எதுக்குனா நாநோபார்ட்டிகில் அப்படின்னு கேள்வி பட்டுருப்போம். கடுகு சிறிசு காரம் பெரிசு அப்படிங்கிற மாதிரி ஒரு துகள் ரொம்ப சின்னதா இருந்தா அதனோட போக்குவரத்தே தனியாம். அது போல இந்த நியூட்ரினோ விதிகள் எதுவுமே பின்பற்றாதாம். நம்ம உடலுக்குள்ள கூட இப்போ இந்த நிமிஷம் பல நியூட்ரினோக்கள் கடந்து போகுதாம். ஆனா ஒளி நம்ம உடலை ஊடுருவுமா? அப்படி ஊடுருவிச்சினா எப்படி ஒருத்தரை ஒருத்தரை பார்க்கறது. இந்த நியூட்ரினோ ஒளியை விட வேகமா இருக்க வாய்ப்பு இல்லைன்னு சொன்னாலும் அறிவியல் வித்துவான்கள் வேற யாராச்சும் ஆராய்ச்சி செஞ்சி சொல்லட்டும்னு இருக்காங்க.

அப்புறம் இந்த கோமெட்டு. இது பண்ற அட்டூழியம் தாங்க முடியலை. கால் கடுக்க நடந்து தலையில ஒரு குடம், இடுப்புல ஒரு குடம் அப்படின்னு தண்ணீ சுமந்து வரக்கூடியவங்க்களை நினைச்சா எவ்வளவு கஷ்டம். அதுவும் இந்த தண்ணீர் தான் இந்த பூமியில் உயிர்கள் வாழ ஆதாரம்னு தெரியும். அந்த தண்ணீரை இந்த கோமேட்டுதான் கொண்டு வந்து கொட்டுச்சாம். பூமியில மட்டும் எதுக்கு கொட்டுச்சோ. கோமெட்டுக்கே வெளிச்சம். இந்த கோமெட்டு சூரியன் பக்கத்தில வந்ததும் தன் கிட்ட இருக்க பனிக்கட்டிய உருக்கி தண்ணியா கொட்டிருமாம். அதோடு மட்டுமா, பூமியில ஏற்பட்ட எரிமலை வெடி சிதறல் இந்த தண்ணீருக்கு காரணம் அப்படின்னு எப்படி தண்ணீர் வந்ததுனு ஒரே அலசல். போர் போட்டு தண்ணீர் எடுக்கறவங்களை நிறுத்த சொல்லனும். பூமிக்கு தண்ணீர் வரம் கொடுத்தது எங்க ஊரு மாரியாத்தா அப்படின்னு இவங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது.

அதோடு நிற்கிறாங்களா, உலகம் விரிவடைஞ்சிட்டே அதுவும் படு வேகமா போய்கிட்டே இருக்காம். எல்லாம் இந்த ஒளி மூலம் பண்ற ஆராய்ச்சி தான். கருந்துளை, கரும் பொருள் அப்படின்னு இந்த மொத்த உலகமே அப்படித்தான் இருக்காம். ஒளி ஊடுருவ இயலாத பொருள் ஏதேனும் வான் வெளியில் சிந்தப்பட்டு இருக்கிறதோ அப்படின்னு ஒரு ஐயம் வந்துட்டு போகுது.

இப்படி அறிவியல் எல்லாம் பேசிட்டு இருந்தா நல்லா தான் இருக்கும், ஆனா சாப்பாட்டுக்கு மம்பட்டிய எடுத்து வெட்டுனாதானே உண்டு. கிணத்துல தண்ணீ இருக்கா, வயக்காலுக்கு தண்ணீ போதுமானு வானத்தை பார்த்துட்டு இருக்கிற நமக்கு இந்த தண்ணீ எப்படி வந்துச்சுனும், இந்த உலகம் விரிவடையுதா, சுருங்கி தொலையுமானு கவலை பட தோணுமா. அவரவர் கவலை அவரவருக்கு.

அதுக்கப்பறம் ராணா படத்துக்கு ஒரு பாட்டு எழுதினா என்ன அப்படின்னு தோணிச்சி.

இணையம் இல்லாத காலத்தில்
மனிதர்களின் மனதில்
இணையே இல்லாமல்
இடம் பிடித்த அரசனே பேரரசனே

மழை பொழிய வானம் மறுத்தால்
நல்ல மனிதர்களை விதைக்கும்
வருணனே நீ தர்மனே (இணையம்)

ஒளியை விட நீ வேகம்
உன் உணர்வால் தீர்த்துவிடு தாகம்
நியூட்ரினோ அது நீதானோ
உலகம் போற்றும் அரசனே ராணா

நீ சொன்னதால் தானே பூமியில்
உயிரினம் வளர்ந்தது
பூமிக்கு பெருமை சேர்க்க
நீயும் அரசனாய் இங்கு பிறந்தது

ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்)

கருந்துளை கரும்பொருள் எல்லாம்
உன்னில் உன்னில் ஐக்கியம்
ஒளியை மட்டுமே சிந்தும்
உனது கண்கள் உலகின் பாக்கியம் ராணா

செம்மண்ணோ, களிமண்ணோ
பசுமை போத்திடும் ரகசியம்
இந்த பாரினில் நீ தந்தாய் அதிசயம்
உண்மை மக்கள் பெற்றவனே


ராணா ராணா ராணா
நீ வேணா வேணா வேணா
என சொல்வேனா (இணையம்) 

இப்போதைக்கு நான் மொக்கைபாண்டி இல்ல, இல்ல, இல்ல. 




Thursday 4 August 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 3

குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தை பிறந்த நேரத்தை கொண்டு கணிக்கப்படும் ஜோதிடம் எனப்படும் கலை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது பெருமளவு உண்மைதான். நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட பலர் சுவாரஸ்யத்திற்காக ஜோதிடம் பார்ப்பது உண்டு, படிப்பது உண்டு. முக்காலமும் உணர்ந்த முனிவர்களை காட்டும் கண்ணாடி அல்லவா அது! பல நேரங்களில் கண்ணாடி சரிவர காமிப்பது இல்லை என்பதுதான் துரதிர்ஷ்டம்.

இந்த ஜோதிடத்தை நம்பி மோசம் போனவர்கள் உண்டு, அதே வேளையில் லாபம் அடைந்தவர்கள் உண்டு. லாபம் அடைந்தவர்கள் பெரும்பாலும் ஜோதிடம் சொல்பவர்கள்தான். இந்த ஜோதிடம் சொல்லும் பாடம் ஒன்றுதான். வாழ்க்கையானது ஒரு நிகழ்தகவு. வாழ்க்கை ஒரு வாய்ப்பு.

சிலருக்கு ஒரே மாதிரியாக, அது நல்லவிதமோ, கெட்ட விதமோ, அல்லது இரண்டு நிலைகளிலும் உட்பட்டோ அமைந்து விடுகிறது. வாழ்க்கை ஒரு சக்கரம். அது சுழன்று கொண்டே இருக்கும் என்கிறார்கள்.

எங்கு தொடங்கியதோ அங்குதான் முடியும் என்பதுதான் முக்காலம் உணர்த்தும் ஒரு செய்தி. இடுகாடோ, சுடுகாடோ எங்கு சுற்றினாலும் இங்குதான் வரவேண்டும் எனும் மொழி வழக்கு உண்டு.

'உன்னை மட்டும் என் வாழ்வில் பார்க்காது இருந்து இருந்தால் எனது வாழ்கை அஸ்தமனமாக போயிருக்க கூடும்'

'இவர் மட்டும் இல்லாது போயிருந்தால் உனது வாழ்க்கை நரகமாகி இருக்க கூடும்'

'இவரால் தான் உனது வாழ்க்கையே இப்படி நரகமாகிப் போனது'

இப்படிப்பட்ட வசனம் பேசும் பலரை நாம் காணலாம். இது போன்ற வரிகளை எல்லாம் சற்று அலசி பார்த்தால் மனிதர்களின் மனம் போடும் கணக்கு மிகவும் தவறாகவே இருக்கிறது!

அடுத்த நொடி என்ன, அடுத்த யுகத்தையே நிர்ணயிக்கும் வல்லமை முனிவர்களிடம் இருந்திருக்கிறது என்கிறது புராணங்கள். அதாவது 'பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது' போல.

அவதாரங்கள் எல்லாம் பார்த்தால் ஒரு தீயவர் படைக்கப்படுவார், அல்லது உருவாகுவார், அந்த தீயவரை, தெய்வம் அவதாரம் எடுத்து திருத்தும் அல்லது பெரும்பாலும் கொல்லும்!

'மனிதன் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்'

காலை எழுந்தவுடன் ஒரு இயந்திரம் போல் பணியாற்றும் நமது நிலையை பாருங்கள். இரவு வந்ததும் என்ன என்ன செய்தோம் என நினைத்து பாருங்கள். ஒரு நாளுக்கு மற்றொரு நாள் வித்தியாசமாக இருக்கிறதா என எழுதி வைத்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு விசித்திரமா! வாழ்க்கை ஒரு சித்திரமா!

இன்று இதை இதை செய்ய வேண்டும் என பட்டியலிட்டு எதுவுமே செய்ய இயலாது போனால் வாழ்க்கை ஒரு விசித்திரம்.

என்ன செய்ய வேண்டும் என நினைத்து அதையே செய்து முடித்தால் வாழ்க்கை ஒரு சித்திரம்.

கவன குறைவு தான் பல பேராபத்துகளுக்கு காரணம். இது தவறு என்று தெரிந்து செய்யும் குணாதிசயம் உடையவன் மனிதன். முயற்சி என்பதன் அர்த்தம் பல நேரங்களில் தவறாகவே இருக்கிறது. இந்த முயற்சியினை முறையாக செயல்படுத்த தெரியாமல் அழிவுக்கு உட்பட்ட விசயங்கள் பற்பல. அதன் பொருட்டே இந்த உலகம் பொருளாதார சீரழிவுக்கோ, கலாச்சார சீரழிவுக்கோ உட்பட்டு வந்து கொண்டு இருக்கிறது.  என்ன சொல்லி வைத்தார்களாம்! கலியுகம்!

சிந்தனைகளின் வலிமை பற்றி ஒரு பெரும் கருத்து உண்டு. அதாவது ஒரு சிந்தனை வலுப்பெற அதை பின்பற்ற பலர் தேவை. அப்படி இல்லாது போனால் அந்த சிந்தனை அழிந்துவிடும்.

இதில் அந்த சிந்தனை உண்மையா, பொய்யா என்பதை நிரூபணம் செய்ய வேண்டிய அவசியம் எல்லாம் தேவை இல்லை. உலகில் உள்ள மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் நம்பினாலே போதும், அது அப்படி அப்படியே பரவி அந்த சிந்தனை வலுப்பெறும் என்பதுதான் காலம் உணர்த்தும் செய்தி.

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்கள் தொகை எத்தனை?!

இரண்டாயிரம் வருடங்கள் முன்னர் மக்களின் சிந்தனை எத்தகையது?!

அப்படியே பெருக்கி கொண்டே போவோம். நான்காயிரம், எட்டாயிரம், பதினாறாயிரம்!

முக்காலம் உணர்ந்த முனிவர்கள் மிகவும் அதிசயிக்க வைக்கத்தான் செய்கிறார்கள்!

(தொடரும்)


Saturday 25 June 2011

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 2


இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா? மனிதரின் எண்ணங்கள்.

இது எங்களுக்கு தெரியாதா? என உங்கள் மனம் நினைத்தால் அதுதான் இந்த சிந்தனைக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் வேறு ஏதேனும் இருக்க கூடுமோ என மனம் கணக்கு போடத் தொடங்குகிறது. என்னவாக இருக்க கூடும் என்பதில் மனதின் எண்ணங்கள் அலைபாயத் தொடங்குகிறது. இது ஒரு சாதாரண மனிதரின் மன நிலை.

சற்று அதிகப்படியான சிந்தனையாளரின் மனநிலை என்ன செய்யும்? 

என்னவாக இருக்க கூடும் எனும் வினாவில் இருந்து வெளியேறி இதுவாகத் தான் இருக்கும் என கணக்கு பண்ண தொடங்குகிறது. பல விசயங்களை இதனுடன் இணைத்து கொள்கிறது. இதுவாகத்தான் இருக்கும் என்பதற்கான விசயத்திற்கு உறுதுணையாக இருப்பவைகளை கணக்கில் எடுத்து கொண்டு திட்டவட்டமாக இதுதான் என நினைத்து விடுகிறது. 

ஒருவர் நமக்கு தீங்கு இழைக்கிறார். இது நிகழ்கால நிகழ்வு. எதிர்காலத்தை நாம் தீர்மானிக்க தயாராகிறோம். எப்படி? இந்த மனிதர் கெட்டவர். எனவே அவர் எதிர்காலத்திலும் கெட்டவராகவே இருப்பார் எனும் ஒரு எண்ணம் உறுதியாகிறது.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் எதிர்காலத்தை தீர்மானிக்கிறோம். இதே போலவே இறந்தகாலமும் தீர்மானிக்கப்படுகிறது. நிகழ்கால நிகழ்வுகளை கொண்டே எதிர்காலமும், இறந்தகாலமும் நிர்ணயிக்கப்படுகிறது. 

இப்படித்தான் இந்த உலகம் நிர்ணயிக்கப்பட்டு பல்வேறு விசயங்கள் மனிதர்களின் மனதில் ஊசலாடி கொண்டு இருக்கின்றன. இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவது இதனால்தான். 

'இப்படித்தான் எனது வாழ்க்கை இருக்கும்' என வாழ்ந்து முடித்தவர்கள் உண்டு. இல்வாழ்க்கை. துறவற வாழ்க்கை, இதுவும் அற்ற, அதுவும் அற்ற வாழ்க்கை என மனிதர்களின் வாழ்க்கைதனை பிரிக்கலாம். அதே வேளையில் இப்படி பிரித்துதான் வாழ வேண்டிய கட்டாயம் கூட நமக்கு இல்லை. ஆனால் அப்படித்தான் இருக்கிறது. 

ஒரு மனிதரின் சராசரி ஆயுட்காலம் சுமார் அறுபது வயதில் இருந்து நூறு வயது வரை வைத்துக் கொள்வோம். இந்த நூறு வருட காலத்தை ஒருவர் எப்படி வாழ்ந்து முடிக்கிறார், என்ன செய்து முடிக்கிறார் என ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வரலாறு எழுதி வைப்போம். அப்படி எழுதப்படும் வரலாறுகளில் கிட்டத்தட்ட தொன்னூற்றி ஐந்து சதவிகிதம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். மீதமுள்ள ஐந்து சதவிகித வரலாறு மட்டுமே மிகவும் வித்தியாசமாக இருக்கும். யார் அந்த மனிதர்கள்? 

புராணங்களில் புனையப்பட்ட மனிதர்களா? இதிகாசங்களில் எடுத்துரைக்கப்பட்ட மனிதர்களா? வாழ்ந்து கொண்டிருக்கும் நாமா?  யார் அந்த முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்? 

(தொடரும்) 


Wednesday 23 March 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (2)

காற்று வளி மண்டலம். பூமிக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் எனலாம். வாயுக்கள் சில கிரகங்களில் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் அந்த வாயுக்கள் எல்லாம் உயிர்கள் தோன்ற வழி வகுக்கவில்லை என எண்ணும்போது ஆச்சர்யம் மட்டுமே மிஞ்சுகிறது. அறிவியல் சொல்படி இந்த பூமி உருவானபோது இங்கே ஆக்சிஜன் தனியாக இல்லை. ஏதோ ஒரு தனிமத்துடன் இணைந்தவண்ணமே இருந்து இருக்கிறது. கரியமில வாயு தன்மையில் இந்த ஆக்சிஜன் கலந்து இருக்கிறது. மேலும்  நீர் கோமெட்டினால் பூமியில் கொட்டப்பட்டு இருக்கிறது. அந்த நீரில் ஆக்சிஜன் ஹைட்ரஜனுடன் கலந்து இருக்கிறது.

தனியே தனிமமாக இல்லாத ஆக்சிஜன், ஆனால் உயிர்கள் எப்படி உருவானது என பார்க்கும்போது பாக்டீரியாவை சொல்கிறார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் (?)சுவாசிக்கின்றன. ஏதோ ஒரு வகையில் அதன் உடல் அமைப்புகள் அவ்வாறு இருக்கிறது. இந்த சுவாசத்தின் முக்கிய பணி என்னவெனில் அந்த உயிரினத்திற்கு தேவையான சக்தியை வழங்குவது மட்டுமே.

தானாக உணவை தயாரிக்க தெரிந்த பாக்டீரியாக்கள், தாவரங்கள் எல்லாம் சுவாசம் செய்து கொண்டுதான் இருக்கின்றன. மூச்சை உள்ளிழுத்து விடுதல் மூலம் மட்டும் ஒரு உயிரினம் வாழ்ந்து விடுவதில்லை. செல்களில் இருக்கும் மைட்டோகான்றியாவில் நடைபெறும் வேதிவினையே ஒரு உயிரினம் வாழ  வழி வகுக்கிறது.

உள்ளிழுக்கப்பட்ட காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், வெளிவிடப்படும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவும், ஏன் ஈரப்பதமும் வித்தியாசபடுகிறது.

உள்ளிழுக்கும் காற்றில் இருக்கும் வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 21% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 0.04% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு குறைந்த ஈரப்பதம் என அறியப்படுகிறது. அதுவே வெளியிடப்படும் காற்றில் உள்ள வாயுக்கள் அளவு ஆக்சிஜன் 16% , நைட்ரஜன் 78% கார்பன் ஆக்சைடு 4% ஆர்கன் மற்றும் இதர வாயுக்கள் 1% அதோடு அதிக  ஈரப்பதம் என அறியப்படுகிறது. 

இந்த நைட்ரஜன் நீரில் மூழ்கி செல்பவர்களுக்கு ஆஸ்த்மா வரவழைக்கும் சக்தி உடையதாக குறிப்பிடுகிறார்கள். 

(தொடரும்) 

Tuesday 4 January 2011

ஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)

1. 


கதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் தமிழில் எழுதிக் கொண்டிருந்தபோது மருத்துவம் சம்பந்தமாக எழுத இயலுமா என என்னை நோக்கிக் கேட்டபோது இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை என ஓரிரு வருடம் முன்னர் சொல்லி இருந்தேன். 'கதை விடுவது மிகவும் எளிது' என நினைத்துக் கொண்டு மருத்துவம் சம்பந்தமாக எழுதுவது பற்றி சிறு முயற்சி கூட எடுத்ததில்லை.

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக ஆங்கில மொழியிலேயே பயின்று வந்ததின் காரணமாக பல ஆங்கில சொற்களை தமிழ்படுத்துவதில் இருக்கும் சிரமம் ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை எனும் தொடரை எழுதும்போது அறிந்தேன். ஒரு விசயத்தை வெளியில் சொல்ல வேண்டுமெனில் இருக்கும் சிரமத்தைப் பொருட்படுத்தாது எழுதுவது மிகவும் அத்தியாவசியமாகும். அதன் பொருட்டே ஆஸ்த்மா பற்றிய ஆராய்ச்சித் தொடரை எழுத முயற்சி எடுத்து இருக்கிறேன்.

தமிழில் எழுதுவதின் மூலம் விசயங்களைத் தவறாகச் சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

சுவாசம் நன்றாக இருந்தால்தான் இந்த பூமியில் சுகவாசம் செய்ய இயலும். அந்த சுவாசத்தில், சுவாசக் குழலில், சுவாசப் பைகளில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், அது எதனால் ஏற்படுகிறது, என்னென்ன ஆராய்ச்சிகள் உலகில் செய்து வருகிறார்கள், என்னென்ன மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன என்பது குறித்து விரிவாக, விளக்கமாக விரைவில் தொடர்வோம்.


Monday 22 November 2010

முக்காலமும் உணர்ந்த முனிவர்களா நாம்? 1

காலம் என்று வந்த பின்னர் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பிரித்து வைத்து பார்த்தாகிவிட்டது. ஆனால் இக்கணத்தில் எக்கணமும் இல்லை எனும் புத்தரின் கூற்று எத்தனை உண்மை என்பதை  எத்தனை மனிதர்களின் மனம் பரிசீலிக்கும்.

பல்லாயிரம் வருடங்கள் முன்னர் நடந்தது எது? இனிமேல் நடக்கப்போவது எது? நடந்து கொண்டிருப்பது எது? எனும் எண்ணங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

முன்னாளில், இந்நாளில் இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் பல விசயங்கள் மனிதர்களுக்கு புலப்பட்டு இருக்கிறது. ஆதிகாலத்தில் எந்தவொரு கருவிகளும் இல்லாமலே பல விசயங்களை அனுமானிக்க முடிந்தது. இது ஒரு நிகழ்தகவு என கொள்ள இயலாது.

முனிவர் என்றால் முற்றும் துறந்தவர் என்பது பொருள் அல்ல. முனிவர் என்பவர் முக்காலமும் அறிந்தவர் என பொருள்படும். உண்மையிலேயே முனிவர்கள் இருந்தார்களா? இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் எவரிடம் இருக்கிறது என தேடி பார்த்தால் நம்மிடமே இருக்க கூடும். சித்தர் தன்னை சித்தர் என அறிவித்து கொள்வதில்லை. முனிவர் தன்னை ஒரு முனிவர் என முன்மொழிவதில்லை.

ஒரு விசயத்தை அணுகும்போது மனிதர்கள் அனைவருமே 'வாய்ப்பு' என்கிற தொனியில் அணுகாமல் இதுதான் சரி என்கிற தொனியில் அணுகும்போது அவர்கள் அந்த விசயத்தில் மிகவும் கெட்டித்தனமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம். இந்த மனிதர்களிடம் அஷ்டமா சித்திகள் அடங்கி இருக்கிறது என்கிறது சித்தர்கள் என போற்றப்படும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு. இந்த வரலாற்றில் எத்தனை உண்மை இருக்கிறது என்பது அலசப்பட, ஆராயப்பட வேண்டிய ஒன்று.

ஒரு ஆசிரியரின் அறிவினை சோதிப்பது அந்த ஆசிரியரை இழிவுபடுத்தும் நிகழ்வாகவே பெரும்பாலும் கருதுகிறார்கள், அந்த ஆசிரியர் உட்பட. ஆனால் உண்மை என்னவெனில் , இந்த சோதனை மிகவும் அத்தியாவசியம் ஆகிறது. ஆசிரியர் ஒருவர் தவறாக சொல்லித் தந்தால் அது தவறு என சுட்டி காட்டும் ஆற்றல் ஒரு சில மாணாக்கருக்கே உண்டு. விளக்கம் கேட்டல் எதிர்த்து பேசுதல் என்றாகிறது. நம்மில் முனிவர்கள் உண்டோ?

எதுவெல்லாம் நடக்கும் என எதிர்காலத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடத்திலும் உண்டு.  'இது நடக்கும்னு நினைச்சேன்' என நடந்தபின்னர் சொல்லும் மனிதர்கள் எத்தனை?

இதற்கு அனைத்துக்கும் விடையாய் அமைவது எது தெரியுமா?

(தொடரும்)

Tuesday 26 October 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 3

3. உலக உயிரினங்கள் ஒரு பார்வை

'உலகில் தோன்றும் உயிரினங்கள், இயற்கையின் சூழலுக்கேற்ப, செயற்கைத்தனமான வாழ்வியலுக்கேற்ப, தம்மில் மாற்றம் கொள்வதோடு, தம்மை மாற்றியமைத்துக் கொண்டு வாழும் பழக்கத்தை எடுத்துக்கொள்வது மட்டுமில்லாது, அந்த வெற்றிகரமான காரணிகளை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்வதன் மூலம் தம்மை உலகில் நிலைநிறுத்திக் கொள்கின்றன'

உயிரினங்கள் எப்படி தோன்றியது? உயிரினங்கள் எவரால் படைக்கப்பட்டது? 'படைப்பு கொள்கை' 'சுயம்பு கொள்கை' என இரண்டு வகைகள் இருக்கின்றன என வைத்து கொண்டாலும், படைக்கப்பட்டதோ, தோன்றியதோ அது எப்போது எனும் வினாவிற்கான விடைகள் தெளிவாக இல்லை என்பதுதான் உண்மை.

உலகம் தோன்றியது எப்போது? வேதம் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அறிவியல் சொல்லும் கணக்கை எடுத்துக் கொள்வதா? அல்லது நானாக ஒரு புதுக் கணக்கு எழுதுவதா? என யோசித்துக் கொண்டிருக்குபோது எல்லாமே ஒருவிதத்தில் பொய் கணக்கு என்றுதான் தோன்றுகிறது.

உலகில் தற்போதுள்ள ஜீவராசி வகைகள் பதினேழு லட்சங்கள் என அறிவியல் அறிஞர்கள் அறிவித்து இருக்கிறார்கள். அதில்

முதுகெலும்புள்ள விலங்கினங்கள் வகை  62,305,
முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகை 1, 305, 250.
தாவர இன வகைகள் 321,212
 காளான் வகை, பாசி வகை என 51,563.

பூச்சிகள் மட்டும் ஒரு லட்சம் முதுகெலும்பற்ற விலங்கினங்கள் வகையில் அடக்கமாம். பாலூட்டி வகைகள் வெறும் 5490 மட்டுமே.

இந்த கணக்கெடுப்பில் ஆடுகள், ஒட்டகங்கள், பாக்டீரியாக்கள் போன்றவை கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை என அந்த அறிவிப்பில் உள்ளது. தற்போது பூமியில் இல்லாது போன மறைந்த ஜீவராசி வகைகள் 300, ௦௦௦ என அறியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எல்லா ஜீவராசி வகைகள் சேர்த்தால் 3,000,000 லிருந்து 10,000,000 அல்லது 50,000,000 இருக்கலாம் என கருதப்படுகிறது.

மறைந்து போன ஜீவராசிகள் எத்தனை என்பதை அறுதியிட்டு கூற இயலாத நிலையும், திடீர் திடீரென புது வகையான ஜீவராசிகள் உருவாவதும் என இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

நமது சூரியக் குடும்பம் தோன்றிய வருடங்களில் முதல் ஒன்றரை பில்லியன் வருடங்கள் மட்டுமே பூமியில் உயிரினங்கள் இல்லை எனவும் அதற்கு பின்னர் பாக்டீரியா தோன்றிவிட்டது என வெளியிடப்படும் அறிவியல் கணக்கெடுப்புகள் ஆச்சர்யம் அளிக்கின்றன. மூன்றரை பில்லியன் வருடங்களாக பாக்டீரியாக்கள் நமது பூமியில் நிலை கொண்டுவிட்டது. நமது மனித இனத்துடன் ஒட்டிய இனம் தோன்றி தற்போது ஏழு மில்லியன் வருடங்கள் (7,000,000) என்பது கணிப்பு.

இதில் எத்தனைவிதமான மாற்றங்கள்? பூமியில் ஏற்பட்ட வேறுபாடுகள்தான் எத்தனை? இருப்பினும் ஜீவராசிகள் பூமியில் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள போராடி கொண்டே இருக்கின்றன. ஒரு ஜீவராசி வகை அழிந்தாலும், வேறொரு வகையில் ஜீவராசி தோன்றுவதும், நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிப்பதும் 'படைப்பு கொள்கையை' காற்றில் பஞ்சாக பறந்துவிட செய்கிறது.

அதே வேளையில் ஒரு செல் உயிரினம் பூமியில் மட்டும் தோன்ற வேண்டியதன் அவசியம் என்ன? ஒரு செல் உயிரினத்தில் இருந்து பல செல் உயிரினங்கள் தோன்றியதன் மர்மம் யாது? அறிவியல் இதனை இயற்கை தேர்வு விதி என்கிறது. பூமியில் மட்டுமே உயிரினம் தோன்ற இந்த சூழல் எனில் பிற கிரகங்களில் அந்த சூழல்தனை பயன்படுத்தி இயற்கை எதற்கு உயிரினத்தை உருவாக்கி கொள்ளவில்லை எனும் கேள்விக்கான பதில் இயற்கை தேர்வு விதியில் ஒரு விதிவிலக்காகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சந்ததியை உருவாக்கிட பாலூட்டி வகைகள் எடுத்து கொள்ளும் கால கட்டங்கள்  அதிகம். அதிலும் குறிப்பாக யானைகள் 660 நாட்களும், மனிதர்கள் சுமார் 270 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன. பூனைகளும் நாய்களும் முறையே 62 நாட்கள், 65 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பன்றிகள் 115 நாட்கள், ஆடுகள் 145 நாட்கள், பசுக்கள் 283 நாட்கள், குதிரைகள் 336 நாட்கள், சிங்கங்கள் 108 நாட்கள், முயல்கள் 33 நாட்கள் என பல வேறுபாடுகள் இருப்பதை காணலாம்.

இப்படிப்பட்ட பல வித்தியாசங்கள் உள்ளடக்கிய உயிரினங்களில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையனவாக இருப்பதுதான் இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் ஒரு பொது மூலம் ஒன்று உண்டு என்பது அறிவியலின் தீர்மானம். உதாரணத்திற்கு சிம்பன்சி எனப்படும் குரங்கின வகையும், மனித வகையும் ஒரு பொது உயிரினத்தில் இருந்து உருவாகி இருக்கலாம் என்றுதான் தற்போது கருதப்படுகிறது. குரங்கிலிருந்து மனிதன் வரவில்லை என்பது அறிவியலின் தீர்க்கமான ஒரு முடிவு.

இத்தகைய எண்ணங்கள் தோன்றிட உதவிய  மரபணுக்கள் பற்றி அடுத்த தேடலை தொடர்வோம், அதோடு இன்னும் உயிரினங்களில் அதிக பார்வையை செலுத்துவோம்.

(தொடரும்)


.

Wednesday 14 July 2010

கோழிதான் முதலில் வந்தது

முதலில் வந்தது எது? கோழியா? முட்டையா?

விடை தெரியாத கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாய் அறிவியலாளர்கள் அறிவிப்பு.

முதலில் வந்தது கோழிதான் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு புரதம் (ஒவோக்லேடிடின் 17) முட்டை உருவாவதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்ததன் மூலம் இதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த புரதம் கோழியின் அண்ட செல்லில் மட்டுமே இருப்பதாலும், இந்த புரதம் பல வினைகளை செயல்படுத்துவதாலும் கோழிதான் முதல் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரதம் கால்சியம் கார்பனேட் தனை மாற்றி முட்டையின் ஓடுதனை உருவாக்குகிறதாம்.

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடை உண்டு. அந்த விடையையும் மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.

Wednesday 9 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள் - 2

2. இயற்பியலோடு சில வார்த்தைகள்

இயற்பியல் பற்றி நினைத்துப் பார்க்கையில் எனக்குச் சொல்லித் தராத இராமமூர்த்தி ஆசிரியரும், இயற்பியல் சொல்லித் தந்த பாலசுப்பிரமணியன் ஆசிரியரும் நினைவுக்கு வருவார்கள். அறிவியலை தற்போது பல வகைகளாக பிரித்து வைத்துப் பார்த்தாலும் வேதியியல், இயற்பியல், உயிரியல் (விலங்கியல், தாவரவியல்) என இவற்றை அடிப்படையாக கொண்டு எல்லாம் விளங்கிக் கொள்ளப்பட்டன. வேதியியலும் உயிரியியலும் விளங்கிக் கொள்ளாத முடியாத விசயங்களை இந்த இயற்பியல் விளங்கிக் கொள்ள பெரும் வழி வகுத்தது எனலாம். விசை, சக்தி இவை இரண்டும் இயற்பியலை வேதியியலுக்கும் உயிரியியலுக்கும் ஆசானாக அமர்த்திக் கொள்ளச் செய்தது. தற்போது ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு எண்ணற்ற விசயங்கள் தெளிவு நிலைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது' ஆற்றலானது ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறுபாடு அடையுமே தவிர அழிந்து போகாது என்பதை அறிந்து கொண்டவர்கள், ஆற்றலின்  மூலம் எது என நிச்சயம் கேட்கமாட்டார்கள். அப்படி ஒருவேளை கேட்பார்களேயானால் ஆற்றலின் மூலமானது ஈர்ப்பு விசை ஆற்றல் என உறுதியாக சொல்ல முடியும். இதை எந்த கண்ணோட்டத்தில், அதாவது அறிவியல் மற்றும் உணர்வுப்பூர்வமாக, நோக்கினாலும் இந்த ஈர்ப்பு விசை ஆற்றல்தான் என்பதை அறுதியிட்டுக் கொள்ளலாம்.

ஈர்ப்பு விசை ஆற்றலுக்கு மூலமாக என்ன இருந்து இருக்க முடியும் என எண்ணிப் பார்த்தால் எதுவுமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த ஈர்ப்பு விசை ஆற்றலுடன்  இணைந்து இருந்த ஆற்றலானது  வேதிவினை ஆற்றல். அத்துடன் மூன்றாவதாக இருந்த ஆற்றலானது  இலகுவாதல் ஆற்றல். இதனால்தான் இந்த மூன்று ஆற்றல்களையும் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆற்றல் என்கிறோம்.

1. ஈர்ப்புவிசை ஆற்றல்
2. வேதிவினை ஆற்றல்
3. இலகுவாதல் ஆற்றல்

இதன் அடிப்படையில்தான் உலகம் எவ்வாறு தோன்றியிருக்கக் கூடும் என அறிவியலாளர்களால் இயல்பாக விளக்க முடிந்தது.

ஈர்ப்புவிசை ஆற்றலால்   வாயு ஒன்று அருகில் வந்தது, அழுத்தம் கொண்டது, ஈர்ப்பு விசை ஆற்றல், வேதிவினை ஆற்றலை எழுப்பி விட்டது, வேதிவினை ஆற்றல் வெடித்து சிதறியதுடன் இலகுவாதல் ஆற்றல் விழித்துக் கொண்டது. பிரபஞ்சம் இலகுவாகிக் கொண்டே இன்னும் இருக்கிறது.

இயக்கமற்று இருந்த ஈர்ப்பு விசை ஆற்றலால், இயக்க ஆற்றல் ஏற்பட்டு, வேதிவினை ஆற்றலால்  உருவானதுதான் ஒளி ஆற்றல் மற்றும் ஒலி ஆற்றல். இந்த ஒளி ஆற்றலானது, மின்சார ஆற்றலுக்கு  வழி காட்டியது. வேதிவினை ஆற்றலின் கோர வடிவமே நியூக்ளியர் ஆற்றல், இதை கருவினை ஆற்றல் என சொல்வோம்.

4. இயக்க ஆற்றல்
5. ஒளி ஆற்றல்
6. ஒலி ஆற்றல்
7. கருவினை ஆற்றல்
8. மின்சார ஆற்றல்

ஈர்ப்புவிசை ஆற்றலுக்கு  இணையாக காந்த ஆற்றலையும் சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த காந்த ஆற்றலானது உருவாக பல வருடங்கள் ஆனது, ஆனால் இந்த காந்த ஆற்றல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இயல்புநிலை வாழ்க்கையில் இந்த ஆற்றலானது  ஏதாவது ஒரு ரூபத்தில் நம்மிடம் இருந்துகொண்டு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த வெப்ப ஆற்றல்  ஒன்றே உலகம் உருவாக காரணம் என கருத வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மாசுக்களும் தூசுக்களும் ஒன்றையொன்றை கவர்ந்திழுத்துக்கொண்டன. அப்படி எல்லாம் ஒன்றாக சேர்ந்த பின்னர் வருடங்கள் செல்ல செல்ல இறுக்கம் அதிகரித்து வெப்பம் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

பொதுவாக எதிர்துகள் எதிர்துகளிலிருந்து விலகி ஓடும். நேர்துகள் எதிர்துகளுடன் ஒட்டிக்கொள்ளும். இப்படி இருந்தபோது ஹைட்ரஜனில் கருவில் ஏற்பட்ட மாற்றம் பெரிய கரு வினையாக அமைந்து உள்ளது. இப்படி மாற்றங்கள் உருவானபோது புதிய துகள்கள் இருந்த துகள்களிருந்து எந்த வித மாற்றம் இன்றி உருவாகத் தொடங்கி இருக்கின்றன. அதாவது ஒரு புரோட்டானிலிருந்த்து அதே நிறையுள்ள மற்றொரு புரோட்டான். இப்படி உருவானபோது எந்த ஈர்ப்பும் இல்லாத ஒரு துகளும் உருவாகத் தொடங்கி இருக்கிறது. அப்பொழுது வெளிப்பட ஆரம்பித்த வெப்ப ஆற்றல்  ஒட்டிய அனைத்தையும் பறக்கச் செய்து இருக்கிறது.

இப்படி வெப்ப ஆற்றல்  ஒரு சின்ன தனிமத்திலிருந்து பெரிய தனிமம்வரை உருவாகியதும் இதே வினை தொடர்ந்து நிகழ்ந்து இருக்கிறது. இப்படித்தான் ஒரு சூரியன் உருவாகி இருக்கிறது என்கிறார்கள்.

அப்படி உருவான சூரியன் என்னவாகிறது? சூரியக்கதிர்கள் யாவை எனத் தொடரலாம்.

Saturday 5 June 2010

தேடிக்கொண்ட விசயங்கள்

1. செல் அமைப்புகள் 

இப்பொழுது தாவரம் மற்றும் விலங்கு செல்லின் படங்கள் காணலாம். இதில் சில விபரங்கள் குறித்துப் பார்க்கும் பொழுது சில வித்தியாசங்கள் தென்படுகிறது. 

தாவர செல்லில் செல் சுவர் இருக்கிறது ஆனால் விலங்கு செல்லில் இல்லை. தாவர செல்லில் குளோரோபிளாஸ்ட் எனப்படும் செல் காணப்படுகிறது. ஆனால் விலங்கு செல்லில் அது இல்லை. மேலும் தாவர செல்லில் மையப்பகுதி தண்ணீரால் ஆனது ஆனால் இது போன்று தனி அமைப்பு விலங்கு செல்லில் இல்லை. தனித்தனியாக செல் அமைப்பு பற்றி விபரங்கள் தெரிந்து கொள்வோம். 





இந்த செல் அமைப்புகளைப் பற்றி விளக்கிச் சொல்லும் முன்னர் நாம் நுண்ணுயிரான பாக்டீரியாவின் செல் அமைப்பை பார்த்துவிடலாம். பாக்டீரியாக்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றிவிட்டதாகவும் இந்த பூமியானது உயிரினங்கள் வாழ வகை செய்து தந்தது என்பது அறிந்துக் கொள்ளப்பட வேண்டிய விசயம். 

கார்பன் வாழ்க்கை சுழற்சி, நைட்ரஜன் வாழ்க்கை சுழற்சி என உதவி வரும் இந்த பாக்டீரியாக்கள் ஒரு செல் அமைப்புடன் இருப்பதும் இத்தனை வருடங்கள் கழித்தும் இனியும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும் நிலை காணும்போது சற்று அதிர்ச்சி அளிக்கிறது. 

பாக்டீரியாக்கள் இல்லாத உலகம் காண்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. இவை சாதாரண கண்களுக்குத் தெரிவதில்லை என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று ஓரிரு பாக்டீரியாக்கள் தவிர. இந்த பாக்டீரியாக்களில் டிஎன்ஏவானது தனக்கென ஒரு தனி கரு, உறை என கொள்ளாமல் செல் திரவத்தில் மிதந்து இருப்பது மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று. இந்த பாக்டீரியாவின் செல் அமைப்பு தாவரத்தின் செல் அமைப்பு போன்று செல் சுவர் கொண்டு உள்ளது என்பதும் மிகவும் சுவாரஸ்யம. பாக்டீரியாவிற்கு வால் அமைப்பு உள்ளது, இது சிறப்பம்சம். இதோ செல் அமைப்பு. 



இப்பொழுது வைரஸ் அமைப்பினை பார்த்துவிடுவோம். வைரஸ் பற்றி இப்படித்தான் குறிப்பிட்டு இருக்கிறேன். அடக்கப்பட்ட உயிர். ஒடுக்கப்பட்ட உயிர். தனியாய் இருந்தால் மயான நிலை. ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை. 

இந்த வைரஸ் ஒரு செல் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வைரஸிடம் நியூக்ளிக் அமிலமும் அதைச் சுற்றி புரத உறை மட்டுமே உள்ளது. 


அனைத்து செல் வடிவமைப்புகளை நாம் பார்த்தாகிவிட்டது, ஆனாலும் சில குறிப்பிட்ட செல்கள் இதே விசயங்கள் பெற்று இருந்தாலும் சில மாறுபாடுகளை கொண்டு இருக்கிறது. உதாரணமாக தாவரத்தின் வேர் செல்கள், விலங்குகளின் இனப்பெருக்க செல்கள் என சொல்லலாம். இவைகளை பற்றி பின்னர் பார்ப்போம். இனி இந்த செல் உறை மட்டும் செல் சுவர் பற்றி சிந்திப்போம். அதற்குப் பின்னர் நியூக்ளிக் அமிலங்கள் பற்றி பார்ப்போம். 

Sunday 30 May 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 11

11. ஆராய்ச்சியில் ஏற்பட்ட ஆர்வம்

தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வது அடக்கம் என்றே கருதப்படுகிறது. சில பல வேளைகளில் எனக்குத் தெரியாத விசயங்களை தெரியாது என சொல்லும்போது நான் தன்னடக்கம் நிறைந்தவன் எனவும், நிறை குடம் தழும்பாது எனவும் சொல்லும்போது மனதில் சிரித்துக் கொள்கிறேன். உண்மையிலேயே எனக்கு பல விசயங்கள் தெரியவே தெரியாது, என்னால் அத்தனை எளிதாக எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது.

ஆப்பிள் மரத்திலிருந்து ஆப்பிள் விழுந்தால் அதை எடுத்து பல கடி கடித்துவிட்டுத்தான் நான் போயிருப்பேன். நியூட்டன் போல் அந்த ஆப்பிள் ஏன் விழுகிறது என யோசித்துக் கொண்டிருக்கமாட்டேன். எனக்குத் தெரிந்தது அந்த கால கட்டத்தில் அவ்வளவுதான்.

ஒன்றைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வமே ஆராய்ச்சிக்கு அடிப்படை. ஒரு பதிலோடு உட்கார்ந்துவிடுவதல்ல ஆராய்ச்சி. அந்த பதிலுக்கும் பதில் தேடி செல்வதுதான் ஆராய்ச்சி. அதன் காரணத்தினால் ஆராய்ச்சி எளிதாக முற்றுப் பெறுவதில்லை. இதன் காரணமாகவே பல நோய்களுக்கு வெவ்வேறு விதத்தில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.

எப்பொழுது விதைத்தால் எப்பொழுது அறுவடை செய்யலாம் என கால நிலைகளை அறிந்து விவசாயம் செய்யத் தொடங்கிய விவசாயி ஒரு ஆராய்ச்சியாளர் தான். சூரிய நிழலை வைத்தே காலத்தை கணக்கிட்டவரும் ஆராய்ச்சியாளர்தான். எந்த மண்ணில் எந்த தாதுப் பொருட்கள் கிடைக்கும் என தோண்டி எடுத்தவரும் ஆராய்ச்சியாளர்தான். சமய சூழலுக்கு ஏற்ப கிடைத்த விசயங்களை வைத்து ஒரு புரட்சி ஏற்படுத்தியவரும் ஆராய்ச்சியாளார்தான். இப்படி எல்லா விசயங்களிலும் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் அளப்பரியது.

சிறு வயதிலிருந்து மருத்துவத் துறையில் ஆராய்ச்சி செய்ய வேண்டும் எனும் அளவிலா ஆசை வந்து சேர்ந்தது. அதற்கேற்றபடி நான் படிக்கும் துறையும் அமைந்துவிட மிகவும் வசதியாகப் போனது. ஆனால் முழு அளவில் ஈடுபாடு என்னிடம் இருந்ததா என என்னால் சொல்லத் தெரியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் தமிழ் மீதுதான் தனிப்பற்று இருந்தது. இப்போது கூட சில வேளைகளில் நினைத்துக் கொள்ளத் தோன்றும், தமிழ் பட்டப் படிப்பு படித்து இருந்து இருக்கலாமா என!

முதல் ஆராய்ச்சி என எடுத்துக் கொண்டது ஆஸ்பிரின் எனப்படும் மருந்து எவ்வளவு வேகத்தில் கரையும் என கண்டுபிடிப்பது. நானும் எனது இரு நண்பர்களும் சேர்ந்து செய்தோம். நாங்களே எங்களுடன் படித்த நண்பனின் மருந்து தயாரிக்கும் கம்பெனியில்தான் மாத்திரை உருவாக்கினோம். அந்த வேளையில் ஆசிரியர் சில வாரங்கள் கல்லூரிக்கு வராததால் அவர் சொன்னதற்கு மாறாக நாங்கள் செய்து முடித்து இருந்தோம். சின்ன திட்டுகளோடு முதல் ஆராய்ச்சி முடிந்து போனது.

அதற்கடுத்த ஆராய்ச்சி பாக்டீரியா பற்றியது. ஆன்டிபயாடிக் என இருந்து கொண்டிருக்கும் போது இந்த பாக்டீரியவை ஆன்டிபயாடிக் இல்லாமல் வேறு மருந்துகளாலும் கொல்ல இயலும் என நான்-ஆன்டிபயாடிக் எனும் புது பாதையையே வகுத்து வைத்திருந்தார்கள். இதில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர்கள் என பலரும் இருந்தார்கள். இந்த ஆராய்ச்சிதான் நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் செய்தேன். கிட்டத்தட்ட 305 வகையான பாக்டீரியாவை தையோரிடஜின் எனப்படும் மனநிலை பாதிப்புக்கு உபயோகப்படுத்தும் மருந்தினை வைத்து செய்யப்பட ஆராய்ச்சி அது. இந்த மருந்து பாக்டீரியாவை கொல்லத்தான் செய்தது. ஹைட்ரோகுளோரிக் அமிலம் கூடத்தான் பாக்டீரியாவை கொல்லும் அதற்காக அதை மருந்தாக குடிக்க முடியுமா என அறிவு எழுந்த இடம் அங்குதான். இருப்பினும் மிகத் தீவிரமாகவே இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதுநிலைப் பட்டப்படிப்பு படித்ததும், ஆராய்ச்சி பட்டம் பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. 'டாக்டர்' எனப் போட்டுக்கொள்ளவா ஆராய்ச்சி செய்யப் போகிறாய் என நண்பர் ஒருவர் கேலி செய்தபோதிலும் ஆராய்ச்சி பட்டம் பெறுவதே கருத்தில் இருந்தது. இதற்காக இலண்டன் வரும் முன்னர் கொல்கத்தாவிலும், டில்லியிலும் ஆராய்ச்சி பட்டம் பெற இணைந்து பின்னர் தொடராமல் நிறுத்தி விட்டேன். ஒரு கல்லூரியில் வேலைப் பார்த்தபோது அந்த ஒரு வருடத்திலேயே செடிகொடிகளை வைத்து பாக்டீரியாவை கொல்லும் சக்தி இருக்கிறதா என சில மாணவர்களை வைத்து ஆராய்ச்சி செய்தேன். இப்படியான சின்ன சின்ன ஆராய்ச்சி வேட்கை பெரிய ஆராய்ச்சி திட்டமாகி கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. எங்கேனும் எப்படியாவது நிறுத்திவிடலாமா எனும் ஆசையும் வந்து சேர்ந்துவிட்டது.

இலண்டனில் நான் எடுத்துக் கொண்ட ஆராய்ச்சி பற்றிய விபரங்களை சற்று விபரமாகவே விரைவில் எழுதுகிறேன்.

(தொடரும்)

Tuesday 18 May 2010

பெண்களுக்கு மட்டுமே வலி உணர்வு அதிகமா?

வலி என்பது என்னவெனில் ஒரு தனிப்பட்ட மனிதரின் உணர்வுகளால் உண்டாவது, மேலும் ஏதேனும் திசுக்களில் பாதிப்பு ஏற்படுவதாலும் உணரக் கூடியது. இந்த வலி ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டும்போது நம்மால் தாங்க முடியாமல் போகிறது. வலி என்பது எப்போதும் நம்முள் இருந்து கொண்டிருக்கும் ஒன்றாகும். அதை உணரும் தன்மை வரும்போதுதான் வலி என அறிகிறோம். நமக்கு அதிக வலி ஏற்படும் போது நாம் உட்கொள்ளும் மருந்துகள் இந்த வலி உணரக் கூடிய அளவினை அதிகரிப்பதால் நாம் வலியில் இருந்து நிவாரணம் பெறுவதாக கருதுகிறோம்.

ஒரு  வலி ஏற்படும் போது அது சம்பந்தப்பட்ட திசுக்கள் நீக்குவதன் மூலமாகவோ, வேறு வழியின் மூலமோ நிவாரணம் தேடுவது வாடிக்கை. முதுகு வலி, தலை வலி, பல் வலி, மூட்டு வலி, அடி வயிற்று வலி போன்றவைகளால் வரும் உபாதைகள் மிகவும் இம்சையானவைகள்.

இப்படிப்பட்ட வலிதனை உணரும் தன்மை இருபாலருக்கும் ஒரே விதத்தில் தான் இருக்கிறதா எனும் ஆராய்ச்சி பல வருடங்களாக இருந்தாலும் கடந்த ஆறு வருடங்கள் மேலாக மிகவும் ஒரு முக்கியமான  ஆராய்ச்சியாகவே கருதப்படுகிறது. வலி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆண்களை விட பெண்களால் மிகவும் அதிகமாகவே உணரப்படுவதாக வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் ஒரு தன்மை சார்ந்தவையாக இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் நிச்சயமாக இந்த மாதிரியான வலி வித்தியாச உணர்வுக்கு ஏதேனும் காரணம் இருக்கலாம் என அந்த காரணத்தையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள். சமூக, கலாச்சார எண்ணங்கள், பயம், மன அழுத்தம்,  நடந்து கொள்ளும் முறை, பாலின ஹார்மோன்கள் ஆகியவை  வலி உணரும் தன்மைக்கு ஒரு அளவுகோலாக செயல்படுகிறது.

பொது இடங்களில் ஆண்கள் அழுவது கௌரவ குறைச்சல் என கருதப்படுகிறது. வலி ஏற்பட்டாலும் அதைத் தாங்கிக் கொண்டு 'ஹி ஹி, வலிக்கலையே' என தைரியம் காட்டும் ஆண்கள் அதிகம் எனினும் தனியாக அறையில் சென்று அந்த வலிதனை தாங்க முடியாது அழும் ஆண்களும் உண்டு என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.

நமது உடலில் இருக்கும் பாலின ஹார்மோன்கள் இந்த வலி உணரும் தன்மைக்கு ஒரு காரணியாக இருக்கிறது, எப்படியெனில் இந்த பாலின ஹார்மோன்களும் அதனுடைய ரிசெப்டார்களும் அதிக அளவில் நமது மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படுகிறது. வயதுக்கு வந்த பின்னர் பெண்களில் இந்த வலி உணரும் தன்மை அதிகம் வேறுபடுவது இந்த பாலின ஹார்மோன்களால்தான். பெண்களில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஷ்டீரோன் இந்த வலி உணரும் தன்மையில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ப்ரோஜெஷ்டீரோன் அளவு அதிகம் இருக்கும்போது இந்த வலி உணரும் தன்மையின் அளவு அதிகரிக்கப்பட்டுவிடுகிறது. இதனால் கருவுற்று இருக்கும் பிற்காலங்களில் அதிக அளவிலான வலியை பொறுத்துக் கொள்ள முடிகிறது. மாத விடாய் காலங்களில் முதல் நான்கு ஐந்து நாள்களில் இந்த ப்ரோஜெஷ்டீரோன் குறைந்த அளவு இருப்பதால் வலி சற்று அதிகமாகவே உணரப்படுகிறது.

மத்திய நரம்பு மண்டலத்தில் காணப்படும் ம்யு எனப்படும் ரிசெப்டார் இந்த வலி நிவாரணத்தில் மிக முக்கிய  ஒன்று என கருதப்படுகிறது. மருந்துகள், மார்பின், இந்த ரிசெப்டாரில் சென்று இணையும் பொது வலி குறைவு ஏற்படுகிறது. இந்த ரிசெப்டார் ஆண்களில் வித்தியாசமாகவும், பெண்களில் வித்தியாசமாகவும் தூண்டப்படுகிறது. இதனால் ஆண்களுக்கு வலி வேகமாக குறைகிறது எனவும், பெண்களுக்கு வலி குறைவதில் வேறுபாடு இருப்பதாகவும்  கருதப்படுகிறது. தலைவலி, முதுகு வலி என தரப்படும் ஐபூப்ரோபன் எனப்படும் மருந்து பெண்களுக்கு சரியாக வேலை செய்யாது என்பது மிகவும் குறிப்பிட தகுந்த விஷயம்.

மேலும் இந்த வலி நிவாரணிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது பெண்கள் ஆராய்ச்சியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆண்களில் இந்த மருந்துகள் நன்றாக வேலை செய்கிறது என காட்டப்பட்டு சில விற்பனைக்கு வந்துவிட்டன. இப்படி வலி உணரும் தன்மை, வலி குறையும் தன்மையில் வேறுபாடுகள் இருப்பதால் பெண்களும் ஆராய்ச்சியில் உட்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

பெண்கள், பயம் தரும் விசயங்கள் என பல விசயங்களில் மிகவும் எச்சரிக்கை உணர்வு உடையவர்களாக இருப்பதால் அவர்களால் வலிதனை மிகவும் எளிதாக உணர முடிகிறது என்கிறது ஒரு அறிவியல் ஆராய்ச்சி.

காரணம் புரிகிறது, ஆசிரியர்கள் கூட பள்ளியில் மாணவிகளை அடிக்கும்போது மெதுவாகவே அடிப்பார்களாம். பல பெண்கள் சட்டென அழுதுவிடுவதன் மர்மம் தெரிகிறது. பெண்களால் வலி தாங்க இயல்வதில்லை.

எங்கள்  ஊரிலும் சொல்வார்கள், 'அட பொட்ட புள்ளைய போய் எப்படி அடிக்கிறான் பாரு' என. எத்தனை கணவன்மார்கள் தங்கள் மனைவிமார்களை அடித்து இருப்பீர்கள், எத்தனை தந்தைமார்கள் தங்கள் பெண் குழந்தைகளை அடித்து இருப்பீர்கள். அவர்களுக்கு எப்படியெல்லாம் வலித்திருக்கும் என நினைக்க தோன்றுகிறதா?

பூரி கட்டைகள், சட்டிகள்  என ஆண்களை அடிப்பதற்கு  உதாரணம் சொல்லப்பட்டது. ஏனெனில் வலி தாங்கும் மகானுபாவாக காட்சி தருபவர்கள் அல்லவா ஆண்கள். அது சரி வலி தாங்கும் சக்தி இருந்துவிட்டால் அடிப்பது நியாயமா என்ன? காதலால் ஏற்படும் வலி இருபாலருக்கும் வேறு வேறா? அறிவியல் இன்னும் ஆராய்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Wednesday 24 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10


ஒரு தனிமத்தை பிரித்தெடுப்பது என்பது அந்த தனிமத்தின் வினைத்தன்மையை பொருத்தது என அறிவோம். ஒரு தனிமம் தன்னிடமிருந்து எலக்ட்ரான்களை இழக்கும்போது பெரும் தன்மையும், எலக்ட்ரான்களை பெறும்போது பெறும் தன்மையும் வைத்தே அதனை பிரித்தெடுக்க முனைந்தார்கள். இதனை எலக்ட்ரோலைசிஸ் எனச் சொல்வார்கள். மின்சார வேதிப் பகுபாடு எனலாம்.

தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முன்னர் இருமல் பற்றிய கருத்தரங்கு பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். இருமல் பற்றிய கருத்தரங்கு மூன்று தினங்கள் நடந்தது. நூற்றுக்கும் குறைவாகவே கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் இந்த கருத்தரங்கு நடந்தது. 

ஒருவருக்கு இருமல் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகளைப் பேசினார்கள். இருமல் நமது உடலுக்கு ஒரு தடுப்புச் சாதனம் அதை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருவர் கேட்டார். இருமல் தடுப்புச் சாதனம்தான் ஆனால் அதுவே ஒருவருக்குத் தொடர்ந்து வரும்போது எவ்வளவு அவதி என்பதை இருமினால்தான் தெரியும் என்றார் அதற்கு பதில் அளித்தவர். 

பேசினால் இருமல் வருகிறது, சிரித்தால் இருமல் வருகிறது, வெயிலில் நின்றால் இருமல் வருகிறது, குளிர் அடித்தால் இருமல் வருகிறது. இப்படி சகலத்துக்கும் இருமல் வருகிறது இதைத் தடுக்க வழி இல்லையா என ஆராய்ச்சியாளர்கள் பேசியதைப் பார்க்கும்போது இன்னும் நிறைய தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் பட்டது. ஆனால் இருமல் எதனால் ஏற்படுகிறது என மூளையில் ஏற்படும் மாற்றங்களை படம்பிடித்து போடும் அளவிற்கு ஆராய்ச்சி முன்னேறி இருப்பது வியத்தகு சாதனையே. 

மத்திய நரம்பு மண்டலமா, சுற்றியுள்ள நரம்பு மண்டலமா இருமலுக்கு காரணம் எனப் பார்க்கும்போது இரண்டும்தான் என பதில் அளித்தார்கள். பல சுவாரஸ்யமான தகவலுடன் கருத்தரங்கு நடைபெற்றது. இருமலுக்கு என ஒரே ஒரு மருந்துதான் இதுவரை வெளிவந்து உள்ளது. அதுவும் அந்த மருந்து ஒரு செடியிலிருந்து பிரித்தெடுத்து இருக்கிறார்கள். குவெய்ஃபெனசின் என அந்த மருந்தின் பெயர். இதுதான் இருமலுக்கு என அங்கீகரிக்கப்பட்ட மருந்து. மற்றதெல்லாம் அலர்ஜியை கட்டுப்படுத்தக்கூடியவையே. பல மருந்துகள் ஆராய்ச்சிநிலையிலே இன்னும் இருக்கின்றன என்பது வருந்ததக்க விசயம். 

எனது ஆராய்ச்சியை பற்றி எழுதும்போது இது குறித்து மிக விளக்கமாக எழுதுகிறேன். ஏனெனில் நான் முதன்முதலில் எடு்த்துக்கொண்ட ஆராய்ச்சியும் இப்போது செய்து வரும் ஆராய்ச்சிக்கும் அதிக தொடர்பு உண்டு. 

மின்பகுப்பு முறையானது சில தனிமங்களை பிரித்தெடுக்க உதவுகிறது. பொதுவாக மின்பகுப்பு முறையில் புரட்டான்களும், எலக்ட்ரான்களும் சுதந்திரமாக வலம் வர வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் பிரித்தெடுப்பது என்பது இயலாத ஒன்று. 

மின்பகுப்பு முறைக்கு உட்படுத்தப்படும் தனிமம் எலக்ட்ரான்களை இழக்க தயாராக இருக்க வேண்டும். நேரணுக்கள், எதிரணுக்கள் அவசியம். அதைப்போல நேரணுக்களைப் பெற எதிர் மின்கடத்தி, எதிரணுக்களைப் பெற நேர் மின்கடத்தி அவசியமாகிறது. 

மின்சாரத்தைப் பாய்ச்சும்போது தனிமமானது தன்னிலை இழக்க வேண்டும். பொதுவாக தண்ணீரில் அந்த பொருளை கரைத்து இருக்க வேண்டும் அல்லது உருகிய நிலையில் இருக்க வேண்டும். திடப்பொருளாக இருக்கும்பட்சத்தில் எலக்ட்ரான்கள் சுதந்திரமாக இருப்பது கடினமாகும். 

உதாரணத்திற்கு அலுமினியம் எடுத்துக்கொள்வோம். இது பாக்ஸைட்டாக கிடைக்கிறது. அதாவது அலுமினியம் ஆக்ஸைடாக பூமியிலிருந்து கிடைக்கிறது. இதில் அலுமினியம் நேரணுக்கள் கொண்டது. ஆக்ஸிஜன் எதிரணுக்கள் கொண்டது. இந்த பாக்ஸைடிலிருந்து அலுமினியத்தை பிரிக்க அப்படியே உபயோகிக்க இயலாது, காரணம் வெப்பநிலை மிகவும் அதிகமாகும். மேலும் இந்த பாக்ஸைட்டுடன் வேறு சில பொருட்கள் கலந்து இருக்கும். அவைகளை கரைத்தல் முறை மூலம் நீக்கலாம். பாக்ஸைட்டை பிற கலப்பட பொருட்களிலிருந்து நீக்கிவிட்டு அதனுடன் கிரையோலைட் எனப்படும் பொருளை கலக்க வேண்டும். இப்போது பாக்ஸைட் 900 டிகிரியிலே உருக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் 2000 டிகிரி வேண்டும். 

இந்த நிலையை அடைந்தவுடன் இதனை மின்பகுப்பு பானையில் போட்டு மின்கடத்திகளை இணைக்க வேண்டும். மின்சாரம் பாய்ச்சியவுடன் பாக்ஸைடிலிருந்து அலுமினியம் நேர் சக்தியுடனும், ஆக்ஸிஜன் எதிர் சக்தியுடனும் பிரிகிறது அவ்வாறு பிரிந்து நேர் சக்தி எதிர் மின் கடத்திக்கும், எதிர் சக்தி நேர் மின் கடத்திக்கும் செல்கிறது. கார்பன் மின்கடத்தியாக உபயோகிக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் கார்பனுடன் சேர்ந்து கரியமில வாயுவாக மாறிவிடுவதால் அந்த மின்கடத்தியை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும். இவ்வாறு அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. 


ஒரு வேதியியல் வினை என்பது அத்தனை எளிதான விசயமல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் முறையாக சில வேதியியல் வினைகளை மேற்கொண்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வேதிவினையை சில காரணங்களால் இங்கு எழுதி விளக்கமுடியாத நிலை. இந்த ஒருங்கிணைந்த மூலக்கூறுகள் மருந்துகளாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவைகளை இப்போது மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம். 

வேதியியல் வினைக்கு வருவோம். 

1. இரண்டு வெவ்வேறு தொடக்க மூலக்கூறுகள். சிறு மாற்றம் மட்டுமே ஒரு மூலக்கூறுக்கும் மற்றொரு மூலக்கூறுக்கும்.

2. இந்த இரண்டு மூலக்கூறும் வினைபுரியக்கூடிய காரணிகள் ஒன்றுதான். அந்த காரணிகளில் எந்த மாற்றமுமில்லை.

3. எல்லா சூழலும் ஒன்றாக இருக்க ஒரு மூலக்கூறு மட்டுமே நினைத்தபடி வினைபுரிந்தது, மற்றொரு மூலக்கூறு வேறு விதமாக வினைபுரிந்தது. 

இப்படி சிறு மாற்றங்களே கொண்ட மூலக்கூறு வினைபுரியும் தன்மை மட்டும் வேறுபாடன்றி, நமது உடலில் அவை செயல்படும் முறையும் வித்தியாசமாக இருப்பது வியப்புக்குரியதுதான். 

மேலும் இப்பொழுதெல்லாம் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், முன்னர் போல் இந்த வியாதிக்கு இந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என உட்கார்ந்து யோசிக்க வேண்டியதெல்லாம் இல்லை. கணினியில், வியாதிக்கு காரணமான ரிசெப்டார் (receptor) எதுவென கொடுத்தால் அந்த ரிசெப்டாரில் சென்று உட்காரும் மூலக்கூறுகள் என பல மூலக்கூறுகளை தந்துவிடுகிறது. ஆனாலும் ஒரு மருந்தை உருவாக்குவது என்பது இன்னும் அத்தனை எளிதான காரியமாகவே இல்லை! விரைவில் அதற்கான வழியை கண்டுபிடிப்போம். 

வேதியியலை விளங்கிக் கொள்ளவே முடிவதில்லை. சில நேரங்களில் மிகவும் மனதை தளர்வடையச் செய்துவிடும். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கிவிட்டோம் என இறுமாந்து இருந்துவிடமுடியாதுதான். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கி அந்த மூலக்கூறு சரிதானா என ஆதாரத்துடன் காண்பிக்க வேண்டும். 

நிறை மட்டும் எத்தனை புரோட்டான் உள்ளது என ஆராய வேண்டும். அவை சரியாக இருந்தால் ஓரளவு நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலாக அந்த மூலக்கூறில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், குளோரின் என அனைத்தும் சரியான விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இவை சரியாக அமைந்திருந்தால் மட்டுமே அந்த மூலக்கூறு மிகவும் தூய்மையான ஒன்றாக கருத முடியும். 

இப்படி ஒருமுறை ஒரு மூலக்கூறினை உருவாக்கி ஆராய்ந்தபோது சம்பந்தமே இல்லாமல் இருந்தது. செய்முறை எல்லாம் சரி செய்து பார்த்தபின்னரும் இந்த விசயம் ஆச்சரியமாக இருந்தது. இந்த பணியை செய்தவரிடம் கேட்டபொழுது அவர்களும் மிகச்சரியே, மூலக்கூறில் தான் பிரச்சினை என்றார்கள். 

சில நாட்கள் பின்னர் அதே மூலக்கூறினை அனுப்பியபோது மிகச் சரியான விகிதத்தில் இருந்தது. நான் முதலில் அனுப்பியதுதான் என்ன என கண்டுபிடிக்கவே இயலவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை எனவும் சொல்லிவிட்டார்கள். 

ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறு உருவாக்குவது என்பது இந்த பணியில் இருப்போர்க்கு மிகவும் எளிதாக இருக்கக்கூடும். சில வேளைகளில் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. 

முன்னர் சொன்னதுபோல இத்தனை சிரமம் பட்டு செய்தாலும் பல்லாயிரம் மூலக்கூறுகளில் ஒரு மூலக்கூறு மட்டுமே நாம் எதிர்பார்க்கும் பலன் தருகிறது என்பது மருத்துவ உலகிற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் போராட்டம் தான். 

ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பது குறித்து ஆய்வகம் இல்லாத அந்த காலத்தில் என்ன முறையைக் கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவைல்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் உண்மையிலேயே நோய் தீர்க்கும் மருந்தாக இருந்ததுதான் மிகவும் ஆச்சரியம். முன்னோர்கள் சொன்னது என்றே வைத்துக்கொள்வோம், முன்னோர்களுக்கு யார் சொன்னது என கேள்வி வந்து சேரும். தேடித் தேடி அலுத்துப் போயிருப்பார்கள் தான்.

ஆய்வகம் இல்லாத சூழ்நிலையினால் மொத்தமாக சாற்றினைப் பிழிந்து அப்படியே உபயோகித்த வழக்கம்தான் இருந்து வந்தது. அதுவும் ஒன்றை மட்டும் தராமல் பிற செடி இனங்களையும் அரைத்து தரும் வழக்கம் இருந்தது. இப்படி ஒன்றோடு ஒன்று இணைவதால் என்ன விளைவுகள் வந்தது, என்ன நேர்ந்தது என எவரேனும் ஒருவேளை எழுதி இருக்கலாம். மருத்துவம் எழுதிய நமது போகர் சித்தர் போல. போகர் சித்தர் எழுதியதாக நான் கேள்விபட்டதுதான் உண்டு. ஆனால் இதுவரை அவர் எழுதியதைப் படித்தது கூட இல்லை என்பதே உண்மையான விசயமாகும். 

நாளடைவில் பாட்டி வைத்தியம் என சொல்லும் அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது இந்த வைத்திய முறைகள். அதுவும் தலை வலித்தால் என்ன பண்ணுவார்களாம் எனில், தலையில் பக்கவாட்டில் ஒரு ஓட்டை போடுவார்களாம். இதுதான் அறுவை சிகிச்சைக்கான முதல் படி. ஏதாவது வெட்டு பட்டால் அதை சுற்றி இலைகள் வைத்துக் கட்டுபோடுவதுதான் வழக்கமாக இருந்தது. மாவுக் கட்டு தெரியாத கிராமவாசி இருக்க முடியாது. பின்னர் உடலைக் கூறுபோட்டு என்ன இருக்கிறது எனப் பார்க்கத் தொடங்கிய காலமும் உண்டு. 

இப்படி மொத்த மருத்துவமும் உள்ள செடியை முதன்முதலாகப் பிரித்து எடுத்துப் பார்க்க ஆசை வந்தது. எப்படி மருந்து உருவானது என்பது ஒரு பெரிய கதைதான். இப்படி செடிகள் தரும் மருந்து என்ன என நினைத்தபோதுதான் ஒரு எண்ணம் உதயமானது. 

அந்த செடியை காயவைத்தார்கள். பொடியாக்கினார்கள். தண்ணீரிலும் பிற ரசாயனங்களிலும் மூழ்க வைத்தார்கள். இந்த முறைதான் ஒரு மூலக்கூறினைப் பிரித்தெடுக்க வைத்த வழியாகும்.