Friday 24 January 2014

ஜீரோ எழுத்து - 9 (கருந்துளை)

கருந்துளை, கருங்குழி எப்படி வேண்டுமெனினும் தமிழ்படுத்தி கொள்ளுங்கள். இந்த கருந்துளையில் உள்ள ஈர்ப்பு விசை ஒளியை கூட வெளிவிடாமல் தன்னுள் உறிஞ்சி கொள்ளும் தன்மையுடையது என்றே முதன் முதலில் கண்டுபிடித்தார்கள். கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது  வருடங்களுக்கு முன்னர் உருவான சிந்தனை இது. அதிக ஈர்ப்புவிசை கொண்ட நிறை பொருள் ஒளியை வெளிவிடாது என்றே சிந்தனை எழுந்தது. இது கிட்டத்தட்ட் ஐம்பது வருடங்கள் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது, நியூட்ரான் நட்சத்திரங்களே இந்த ஒப்புதலுக்கு முதற்காரணம். 

நமது சூரியனைவிட பன்மடங்கு பெரிதான நட்சத்திரங்களே இந்த கருந்துளை ஏற்பட காரணம் ஆகிறது. ஒரு நட்சத்திரம் தனது வாழ்நாளை இரண்டு வகையாக முடித்துக் கொள்ளும். நமது சூரியன் போல அளவு இருந்தால் இறுதியில் ஒன்றுமற்றதாகவே மாறிவிடும். எப்படி ஒரு விறகை எரித்து முடித்திட ஜூவாலை தோன்றி மறைந்தபின்னர் தகதகவேனும் சிவப்பாக மாறி இறுதியில் சாம்பலாக மாறி கடைசியில் கருப்பாக மறைந்துவிடுமோ அதைப்போலவே நமது சூரியன் போன்ற அளவுடைய நட்சத்திரங்கள் ஆகும் என்பது அறிவியல் குறிப்பு. 

அதே வேளையில் பெரிய அளவுடைய நட்சத்திரங்கள் தனது வாழ்நாளை முடித்துக்கொண்டு உள்ளே இருக்கும் அளப்பரிய ஆற்றல் மூலம் மற்றொரு சூரிய குடும்பத்தை உருவாக்கும், அப்படி உருவாக்காத நட்சத்திரங்கள் நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறி பின்னர் கருந்துளையாக மாறிவிடும் என்பது அறிவியல் குறிப்பு. 

எப்படி இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. இருட்டினை எப்படி கண்டு கொள்வது. ஒளிதனை இருட்டில் பாய்ச்சினால் அந்த இருள் ஒளியாகும், ஆனால் ஒளியை தன்னுள் உட்கிரகித்துக் கொள்ளும் இருளை எப்படி கண்டு கொள்வது. எந்த ஒரு பொருளும் தன்னை சுற்றியுள்ள பொருள் மீது ஒருவித அதிர்வை ஏற்படுத்தும் தன்மை உடையது, அதன் அளவீடு குறைந்ததாக இருக்கலாம், அதைப்போலவே இந்த கருந்துளை தன்னை சுற்றி உள்ளவைகள் மீது ஒரு மாற்றத்தை உருவாக்கியது. அதாவது இந்த கருந்துளையை தாண்டி செல்லும் எந்த ஒரு பொருளும் பெரும் ஒளி வெள்ளத்தை ஏற்படுத்தி நகர்ந்தது. அதாவது தனக்குள் இருக்கும் ஆற்றல் மூலம் இந்த நட்சத்திரங்கள் மீது ஒளி பாய்ச்சியது. அதைவைத்துதான் இந்த கருந்துளை கண்டுபிடிக்கப்பட்டது. 

நியூட்டனின் கொள்கையான ஈர்ப்புவிசை ஒளியின் வேகத்தில் மாறுபாட்டினை உண்டு பண்ணும் என்பதே இந்த கருந்துளைக்கு அடிப்படை தத்துவம். சுப்பிரமணியம் சந்திரசேகரின் சூரிய நிறை குறித்தும், எப்படி ஒரு நட்சத்திரம் உருக்குலைந்து கருந்துளையாக மாறும் என்பது குறித்தும் இப்போதைக்கு சற்று தள்ளி வைப்போம். 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வேகமாக சுழலக்கூடிய, அதிக காந்த தன்மை கொண்ட நியூட்ரான் நட்சத்திரம் வெளிப்படுத்திய கதிரியக்கத்தை பூமியில் இருந்து காண முடிந்தது. இவை பல்சார் எனப்பட்டன. இந்த கருந்துளைகள் நிறை, மின்னேற்றம், சுழல் உந்தம் போன்றவை பொருத்து அமைகின்றன. 

வெறும் நிறை அடிப்படையிலும் இந்த கருந்துளைகள் அமையும். சமீபத்தில் இந்த கருந்துளை பற்றி ஒரு அதிசய நிகழ்வு நடந்தது. 

(தொடரும்) 

2 comments:

வவ்வால் said...

ராகி,

எளிமையாக சொல்லி இருக்கீங்க,அஸ்ட்ரோபிசிக்ஸ் ப்பதிவுகளை இப்பத்தான் கவனிக்கிறேன்.

#கருந்துளைகள் மின்காந்தப்புலன்களை உருவாக்கும்,அதனாலும் அறியப்படுமாம்..

Radhakrishnan said...

உண்மைதான் சார் :)) தொடர்ந்து எழுத நினைப்பதுண்டு. முடிவதில்லை