Tuesday 31 January 2012

கூகிள் குரோமில் என்னதான் பிரச்சினை - பின்னூட்டம்

நான் internet explorer அதிகம் உபயோகம் செய்வது கிடையாது. நான் மிகவும் விரும்பி உபயோகம் செய்வது google chrome. மின்னல் வேகத்தில் வேலை செய்யும். அதைப்போல எதாவது தளம் வைரஸ் போன்ற விசயங்களால் தாக்கப்பட்டு இருந்தால் காட்டி கொடுத்துவிடும். அதனால் எப்போதும் கூகுள் குரோம் தான் எனக்கு சிறந்த ஒன்று. 

அதுவும் இந்த வலைப்பூ எழுதுவது என்றால் குரோம் அல்லது ஆப்பிள் சஃபாரி. ஆப்பிள் சஃபாரியில் என்ன பிரச்சினை என்றால் நேரடியாக பின்னூட்டத்தில் தமிழ் வைத்து எழுத முடியாது. கூகுள் சென்று அங்குதமிழில் மாற்றி எழுதி அதை கொண்டு வந்து பின்னூட்டத்தில் வந்து பதிவிட  வேண்டும். அதனால் படிக்கும் வலைப்பூக்களுக்கு என்னால் எளிதாக பின்னூட்டம் இடவே முடிவதில்லை. அதனால் சுயநலமியாக எனது வலைப்பூவில் மட்டும் பின்னூட்டம் எழுதிவிட்டு அவ்வப்போது ஒவ்வொரு வலைப்பூவிற்கு பின்னூட்டம் இடுவது உண்டு. 

கூகிள் குரோம் என்னவென்றால் பதிவுக்கு கீழே வைத்திருக்கும் பின்னூட்ட பெட்டியில் மறுமொழி பதிவு போட இயலாது. அதுவே மற்றொரு பக்கத்தில் வரும் பின்னூட்ட பெட்டி என்றால் எளிதாக பின்னூட்டம் எழுத முடியும். இப்படி இருப்பதால் குரோமில் படித்துவிட்டு பின்னர் எக்ஸ்ப்லோறேர் சென்று போதும் என்றாகிவிடும். 

பொதுவாக பின்னூட்டம் எழுதுவது அந்த நேரத்தில் எழுதுவதும், சிறிது நேரம் பின்னர் எழுதுவதும் வித்தியாசமாக இருக்கும். சிந்திக்க அவகாசமே தரக்கூடாது என்பதுதான் நான் படிக்கும்போது நினைப்பது. படித்தவுடன் பளிச்சென ஒரு எண்ணம் வரும், அதுதான் எனக்குப் பிடித்த  பின்னூட்டம். சிறிது நேரம், சிறிது நாட்கள் கழித்து எழுதினால் மொத்த சிந்தனையும் வேறு மாதிரி இருக்கும். 

நண்பர் கிரி பதிவில் குரோம் பற்றி எழுதி இருந்தார். இந்திய மக்களுக்கு நான் அனுபவிக்கும் சோதனைகள் வருமோ என்னவோ. 

சில மாதங்கள்தான் இந்த பிரச்சினை. அதுவும் புதிய வலைத்தள வடிவமைப்புக்கு சென்ற பின்னர் என கருதுகிறேன். ஏதாவது தொழிநுட்பம் தெரிந்தால் சொல்லுங்கள். 

இத்தருணத்தில் மேலும் சில நாட்கள் நீட்டித்தமைக்கு நேசம் குழுவுக்கு நன்றி. கட்டுரை எழுதி கொண்டிருக்கிறேன். தமிழ் படுத்தும் பாடு! 

No comments: