Thursday 5 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 1

அனைத்து மொழிகளின் தாய் தந்தை என எல்லாமே தமிழ் தான் என வாதிடுவோர் உண்டு. இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் நடந்தது கண்டது உண்டு. சமஸ்கிருதத்தை தேவ பாஷை என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து தமிழ் உணர்வாளர்கள் வெகுண்டு எழுவது உண்டு. மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் பல இழிவானவை என கருதுபவர்கள் உண்டு. இப்படி பல விசயங்களை அடிப்படையாக கொண்ட மொழியின் மூலம் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை என இந்த காலகட்டத்தில் ஆகிப்போனது.

இது குறித்து பார்க்கும்போது லெவிட் எனும் அமெரிக்கரும், கு. அரசேந்திரன் தனது புத்தகத்திலும் தமிழே தொன்மையான மொழி என குறிப்பிட்டு உள்ளதாக கூறுகிறார்கள். தமிழ் மீது பற்று கொண்ட ஜார்ஜ் ஹார்ட் தமிழே தொன்மையானது என பல கருத்துகளை குறிப்பிட்டு வாதிடுகிறார்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என சொல்வது மிகவும் மிகைப்படுத்தக்கூடிய செயலாகத்தான் தெரிகிறது, இல்லையோ? இருப்பினும் இது குறித்து பலரது கருத்துகளை பார்ப்போம்.

முதலில் ஜார்ஜ் ஹார்ட் என்ன சொல்கிறார் எனில்... தொடரும். 

9 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எல்லாத்துக்கும் வெளிநாட்டினன் சொன்னால் தான் ஒத்துக்குவீங்க.
போங்கப்பா ...
உங்க அறிவின் வீழ்ச்சியை என்னவென்று சொல்ல.
வெளி நாட்டினனுக்கு என்ன தெரியும்,வெங்காயம்.(வெங்காயம் உபயம் பெரியார்)

Radhakrishnan said...

மிக்க நன்றி நண்பரே. நமது பெருமையை நாமே சொல்கிறதை விட பிறர் சொல்லும்போது அதில் தனி சிறப்பு இருக்கிறது என சொல்வார்கள். :)

Anonymous said...

expecting lot of info from u

ananthako said...

naan pala sorkal knowledge sharing
ananthako.blogspot,com il koduththullen.molikalin otrumai paarum.athuthaan nattin otrumai.
palaimai perumaithaan.aanal kolaivery thaan top.athuvum foreign.

Yaathoramani.blogspot.com said...

சட்டென பதிவினை முடித்துவிட்டது போன்ற
உணர்வினைத் தவிர்க்க இயலவில்லை
ஆர்வமூட்டும் அருமையான துவக்கம்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

Yaathoramani.blogspot.com said...

tha.ma 2

மகேந்திரன் said...

தொடர்ச்சியை எதிர்பார்ப்போடு
எதிர்கொள்கிறேன் நண்பரே...

மகேந்திரன் said...

தமிழ்மணம் 3

Radhakrishnan said...

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.