Wednesday 17 July 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 15

என்னைப் பற்றியும் சுபத்ராவைப் பற்றியும் காயத்ரி என்ன நினைத்திருப்பாள் என்றே என் மனம் நினைக்கையில்

"ஹலோ ஐ ஆம் சுபத்ரா" என காயத்ரியின் கைகள் பிடித்து குலுக்கினாள்.

"ஹாய் ஐ ஆம் காயத்ரி"

''சுபா, நீ எப்படி இந்த ஊருக்கு, எப்போ வந்த'' என நான் குறுக்கிட்டேன். சுபா என்றே அவளை அழைத்து பழகிப் போனது.

''நேத்துதான் வந்தேன், பரிணாம ஆராய்ச்சிக்காக வந்து இருக்கேன்''

''என்ன கோர்ஸ் எடுத்துப் படிக்கிற''

''டெவெல்த்தோட ஸ்டாப், பரிணாமத்தில இண்டரெஸ்ட் அதான் அது எடுத்து தனியாப் படிக்கிறேன், சரி பிறகு வந்து பார்க்கிறேன், விவரமா பேசலாம், இப்போ ஒருத்தரை சந்திக்கப் போறேன், ஸீ யூ காயூ'' என அவள் கிளம்பி சென்றாள்

காயூ... நான் அழைப்பது போலவே அவளும் அழைத்து சென்றது எனக்கு பெருமையாக இருந்தது.

''காயூ, நீ சுபாவைப் பத்தி என்ன நினைக்கிற''

''உங்களுக்கு மிகவும் பொருத்தமானவ''

சில வேளைகளில் என்ன பேசுகிறோம் என்றே நமக்கு தெரியாமல் போய்விடுவது துரதிர்ஷ்டம் என நினைத்துக் கொண்டேன். காயத்ரி அவ்வாறு கூறியதும் நான் சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு பேசினேன்.

''ஆமா, என்னோட அலைவரிசை அவளுக்கு இருக்கு''

''அவளை ஏன் காதலிக்கலை''

''அது அந்த பருவம் வரலை''

''இப்போ காதலிக்கலாமே''

''உன்னை காதலிச்ச பிறகு வேறு யாரை நான் காதலிக்கனும்''

நான் சொன்ன இந்த வார்த்தைகளில் காயத்ரி வாயடைத்துப் போனாள். பொதுவாகவே ஆண் - பெண் இடையே ஈர்ப்பு என்பது சகஜமான ஒன்றுதான். ஒரு ஆண் பல பெண்களை காதலிப்பதும், ஒரு பெண் பல ஆண்களை காதலிப்பதும் என்பதெல்லாம் சரியே என்றே வெளித் தோற்றத்தில் தென்படும். ஆனால் அவை ஒருவகையான பாலின ஈர்ப்பு என்பது புரிந்தபாடில்லை. காதல் என்பதன் முழு அர்த்தம் கவனிக்கப்படவில்லை என்றே தோணியது.

''காயூ, நீ மனசை போட்டு உலப்பிக்காதே, சினிமாவுல வரமாதிரி முக்கோண காதல் எல்லாம் எனக்குள்ள வராது. ஒரு காதல் கதைன்னு வந்தாலே அதுல ஒரு முக்கோண காதல், அந்த பெண் இவனைக் காதலித்தாள், அவன் வேறு ஒருவளை காதலித்தான் அப்படின்னு சொல்றதுக்கு இது நிழல் இல்ல, நிஜம். என்னை நம்பு''

கல்லூரியின் வாசல் அடைந்து இருந்தோம். காயத்ரி எனது கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு என் அப்பாவோட வாழ்க்கை என்னை ரொம்பவே பாதிச்சிருச்சி முருகேசா என கண்களில் கண்ணீர் மல்க  சொன்னாள்.

''காயூ, மனசு அப்படிங்கிறது நமக்கு கட்டுப்பட்ட ஒண்ணா இருக்கனும், மனசுக்கு நாம கட்டுபட்டவங்களா மாறக் கூடாது''

சொன்ன மாத்திரத்தில் எனக்கு புரியவில்லை.  மனதுக்கு கட்டுப்பட்டு இருப்பது, மனதை கட்டுப்படுத்துவது, இதில் என்ன வித்தியாசம் இருப்பதாக எனக்குத் தோன்றியது என புரியாமலே இருந்தது.

''சரி முருகேசா''

புரிந்தது போல சரி என சொல்கிறாளே என நினைத்துக் கொண்டிருக்கையில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். கல்லூரியில் இருக்கும் பொழுதில் பாடத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க காதல் சற்றே வழிவிட்டு நிற்கும். எனக்குப் பிடிக்காத ஆசிரியரே பாடம் எடுத்தார். அவர் எடுத்த முதல் பாடம் மனம் பற்றியதுதான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

''Human mind is not an object, it is not located any particular part of the body''

வழக்கம்போல எனது அருகில் இருந்தவன் எழுந்து ''mind your language'' என்றான். மொத்த வகுப்பும் கொல்லென சிரித்தது. அந்த ஆசிரியர் மிகவும் கோபத்துடன் ''why should I?, get out of the class'' என்றார்.

''சாரி சார், நீங்க சொன்னது எனக்குப் புரியலை, கொஞ்சம் தமிழுல சொல்றீங்களா''

''அப்படி கேட்க வேண்டியதுதானே, டிசிப்ளின் இல்லாத பசங்க எல்லாம் எதுக்குப் படிக்க வரனும், பன்னி மேய்க்க போகலாமே''

''பன்னி மேய்க்க கூட டிசிப்ளின் வேணும் சார், அதுவும் படிக்க சொல்லித் தரதுக்கு ரொம்ப டிசிப்ளின் வேணும் சார்''

''பாடம் நடத்துங்க சார், நீங்க இரண்டு பேரும் வெளில சண்டையை வைச்சிகோங்க'' என்றாள் வளர்மதி. மொத்த வகுப்பும் ஆமா சார் என்றது.

''This is what I call is human mind. It is not located any particular part of the body, it is everywhere. அதாவது மனம் எங்கும் வியாபித்து  இருக்கிறது. வளர்மதி சொன்னதும் நீங்க எல்லாரும் ஆமாம் சொன்னீங்க இல்லையா அதுதான் மனம். அது சுற்றுப்புற சூழல் மூலம் மாசும் அடையும், சுத்தமும் அடையும். Human mind is influenced by external stimulations; based on that, internal vibrations start to occur. It is very difficult to control internal vibrations once you have constant external stimulations or once external stimulations occurred very deeply, this start coming back again and again to create internal stimulations how clever you are!''

''யோவ் நீ என்னதான் சொல்ல வர''

இப்படி அருகில் இருந்தவன் சொல்வான் என்றே எவரும் எதிர்பார்க்கவில்லை. அவர் நடத்திய பாடம் எனக்கு பிடித்து இருந்தது. முதலில் பிடிக்காத ஆசிரியர் எனக்கு பிடித்தவராக தெரிந்தார். மொத்த வகுப்பும் நீ உட்கார் என அவனை நோக்கி சத்தம் போட்டது.

''என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு, நான் எது சொன்னாலும் உனக்கு நக்கலா இருக்கு, உனக்கு விருப்பம் இல்லைன்னா நீ வகுப்பு விட்டு வெளியே போ, புரியலைனா என்னனு மரியாதையா கேளு இப்படி அநாகரிமாக நடந்துகிறது நல்லதில்லை''

ஆசிரியர் பேசியது எனக்கு சரியாகவே பட்டது. சாரி கேட்டு உட்காருடா என அவனை இழுத்தேன்.

''I tried to see how you react to me Sir, when I said mind your language, you shouted at me and asked me to get out of the class and talked about discipline. That was an external stimulation which angered you. You talked about discipline. I said 'Teacher should have more discipline than others'. After you taught for a while, I have criticised your way of teaching that I did not understand, you reacted very differently now and you have shown some degree of dignity. How could an external stimulation have such an impact immediately, you should have some internal vibrations all the time on all matters, is that right?''

அவன் பேசி முடித்து அமர்ந்தபோது மொத்த வகுப்பும் கைதட்டி ஆரவாரம் செய்தது. ஆசிரியர் கைத்தட்டல்கள் சத்தம் ஓயும் வரை காத்து இருந்தார். 

''Does child have internal vibrations on all matters which is not exposed to or do you have internal vibrations which you are not exposed to or you haven't paid any attention to it?'' 

ஆசிரியரின் அந்த கேள்வி என்னை நிஜமாகவே உலுக்கியது. பக்கத்தில் இருந்தவன் எழுந்து சில  வார்த்தைகள்  சொல்லிவிட்டு அமர்ந்தான். 

''Worth looking at it''

''என்னடா சொல்ற'' என மெல்ல கேட்டேன். 

''நிறைய யோசிக்க வைச்சிட்டான்டா வாத்தி''

ஒரு விசயம் பிடிக்கும், பிடிக்காது காரணம் சொல்லலாம். காதலுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? என மனம் நினைத்தது. இந்த மனம்... கர்ம வினையா? மர்மம் தீர வேண்டினேன். 

(தொடரும்)


3 comments:

sathishsangkavi.blogspot.com said...

தொடருமா... என்ன பாஸ்...

ரொம்ப எதிர்பார்க்கிறேன் அடுத்த பதிவை...

ராஜி said...

மர்மம் தீர வேண்டினேன்
>>
நாங்களும்

Radhakrishnan said...

விரைவில் தொடர்வோம் சங்கவி,

மர்மம் நீங்கும் ராஜி