Monday 25 January 2010

நாமும் தாவரம் ஆகிவிடலாம்

நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான் 
எத்தனை காலம் தான் அண்டி பிழைப்பது

இவ்வுலகத்தில் வாழ்ந்திட மாற்றம் ஒன்றே
மரபணுக்களில் ஏற்பட்டு வந்தது எனில்
நமது செல்களுக்கும் தானே உணவு
தயாரிக்க சொல்லித் தராதா மரபணுக்கள்

மரபணு முறைகொண்டு நம்மிலும்
ஏற்படுத்துவோம் புதிய மாற்றங்கள்

எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருப்பது
மரங்களை அழிக்க வேண்டாமென

எத்தனை மாநாடுதான் போடுவது
உலகம் வெப்பமாகி போகிறதென

மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்

உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்.

9 comments:

Deepa said...

Beautiful...!

ப்ரியமுடன் வசந்த் said...

சிறப்பான கவிதை

நாம் தாவரமாகிவிடலாம் மனிதருக்கு பதிலாக நமக்குள்ளே வெட்டி கொள்வோமே என்ன செய்ய?

Radhakrishnan said...

மிக்க நன்றி தீபா.

மிக்க நன்றி வசந்த். தன்னிறைவு அடைந்துவிட்டால் தவறுகள் நடக்க வாய்ப்பு இல்லை.

Chitra said...

உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்..................அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

Paleo God said...

மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்//

ஒரே நிறம் கொண்டு
பசி இல்லாதது, புசிக்க கனி தந்து..::))

அருமை..::))

புலவன் புலிகேசி said...

நல்லா சமூக நோக்குடன் வெளிவந்துள்ள்ள கவிதை...

sathishsangkavi.blogspot.com said...

நல்ல கவிதை....

நன்றி தீபா...

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது...வாழ்த்துக்கள்...

Radhakrishnan said...

மிக்க நன்றி சித்ரா,

மிக்க நன்றி ஷங்கர்

மிக்க நன்றி புலவன் புலிகேசி

மிக்க நன்றி சங்கவி

மிக்க நன்றி கமலேஷ்