Saturday 12 December 2009

தமிழ்மணம் விருதுகள் - ஏக்கத்துடன் என் பதிவுகள்.

சிறுகதைப் போட்டிகள் அறிவிக்கப்பட்டு இருந்த நேரம் அது. சிறுகதை எழுதிவிடலாம் என தலைப்புகள் எல்லாம் தயார் செய்து காத்துக்கொண்டிருந்த நேரம் அது.

எனது கதை ஒன்றைப் பாராட்டி வித்யா அவர்கள் விருது வழங்கிய நேரம் அது. என்னை கோவியார் சந்தித்துச் சென்ற தருணமும் அது. இப்படி பல தருணங்கள் ஒன்றாய் சேர்ந்திருக்க இதையெல்லாம் தாண்டிய ஒரு தருணமும் என்னை நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்காக கொஞ்சம் எழுத்துப் பணியைத் தள்ளிவைத்துவிடலாம் என எண்ணம் கொண்டு தமிழ் உலகத்தையே சற்று மறந்துவிட்ட காலங்கள் என ஒரு மாதம் ஓடிப் போய்விட்டது.

இவ்வேளையில் என்னைச் சந்திக்க விரும்பிய மூத்த பதிவர் சீனா அவர்களைக்கூடத் தொடர்பு கொள்ள இயலாத வகையில் காலமும் நகர்ந்து போனது எனக்கே வியப்பாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அதில் எனது பதிவுகளை இணைக்க நினைத்தபோது எதுவுமே இணைக்கமுடியாதபடி எல்லாம் வேறொரு இணையதளத்தில் வெளியானவை என நினைத்தபோது விருதிற்கு பரிந்துரை செய்ய தகுதியற்றுப் போனது என் பதிவுகள்.

இந்த சூழலில் எனது முதல் கவிதைத் தொகுப்பான 'வெறும் வார்த்தைகள்' அச்சிடப்பட்டு வெளியீடு செய்யப்படக் காத்துக் கொண்டிருக்கிறது. அடுத்த முறை விருதுக்கென பரிந்துரை செய்யும்வகையில் சில பதிவுகளும் எழுதிவிடலாம் எனும் எண்ணம் எழாமல் இல்லை.

விருதுகள் பெற்றிட அனைவரையும் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.

4 comments:

கோவி.கண்ணன் said...

//இந்நிலையில் தமிழ்மணம் விருதுகள் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன். அதில் எனது பதிவுகளை இணைக்க நினைத்தபோது எதுவுமே இணைக்கமுடியாதபடி எல்லாம் வேறொரு இணையதளத்தில் வெளியானவை என நினைத்தபோது விருதிற்கு பரிந்துரை செய்ய தகுதியற்றுப் போனது என் பதிவுகள்.
//

அடுத்த முறை இனி புதிதாக எழுதுவதை இணைக்கலாம். வாய்ப்புகளுக்கான காலம் கண்டிப்பாக வரும் !

சீனா ஐயாவிடம் ஓரிரு முறைகள் உங்களைச் சந்திக்கச் சொல்லி நினைவு படுத்தினேன். அவரும் உடனடியாகவே தொடர்பு கொண்டு, தொடர்பு கிடைக்கவில்லை என்று சொன்னார்

Radhakrishnan said...

மிக்க நன்றி கோவியாரே.

Thekkikattan|தெகா said...

வெ. இரா அவர்களே, எப்படி இருக்கீங்க. நலமா?

Radhakrishnan said...

மிகவும் நலமாக இருக்கிறேன், நீங்கள் நலமா தெகா அவர்களே. தொடர்புக்கான மின்னஞ்சல் இணைத்துவிடுகிறேன்.