Wednesday 16 December 2009

எழுத்துக்கு என்ன வயது?

பல வருடங்களாக எழுதிக்கொண்டே இருந்தாலும் எழுத்து என்னவோ அப்படியேதான் இருக்கிறது.

1994ல் எழுதின ஒரு கவிதையை என்னோட சின்ன சகோதரி படிச்சிப் பார்த்துட்டு 'என்னடா எழுதுற' எனத் திட்டிய 'திரும்பிப் பார்' கவிதைத் தொலைக்கப்படவே இல்லை. எனது சிந்தனைகள் தொலைக்கப்படவும் இல்லை.

வலைப்பூவில் எனது எழுத்துகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் பெற்ற நண்பர்கள் சிலர். சிங்கையைச் சார்ந்த நண்பர் கோவியாரை இலண்டனில் சமீபத்தில் சந்தித்தேன். அவர் வலைப்பூவில் நான் பின்னூட்டம் எழுதும்போது என்னை 'ஐயா' என்றே விளித்து வந்தார். எனக்குக் காரணம் தெரியாது. எனது வயதோ, புகைப்படமோ அவர் பார்த்தது இல்லை.

ஒரு உணவகத்தில் குடும்பத்தாருடன் இனிய சந்திப்பு நிகழ்ந்தது. என்னை முதன்முதலில் பார்த்த அவர் ஏமாற்றம் அடைந்துவிட்டார் என்பதை நேரடியாகவேச் சொன்னார்.

'உங்க எழுத்துகளைப் பார்த்து உங்களை ரொம்ப வயசானவருனு நினைச்சிட்டேனே' என்றார்.

என்னை நேரில் பார்த்தாலும் வயது அதிகமாகத்தான் தெரிவேன் என்பது வேறு விசயம். அதை நிரூபிக்கும் வகையில் அவரது கேள்வியும் இருந்தது.

'உங்களுக்கு ஒரு 43 இருக்குமா?' என்றார்.

'இல்லை 34' என்றேன்.

எழுத்துக்களைப் பற்றிப் பொதுவாக பேசினோம். பலர் என்னை வயதானவனாகவே நினைக்கிறார்கள். மேலும் நான் எழுதுவது புரியும்படியாக இல்லை எனும் குறைபாடும் உண்டு என சொன்னேன்.

எனக்குள் எழுந்திருக்கும் சில கேள்விகள், எனக்கு வயதாகிக் கொண்டே இருப்பதால் இன்னும் சில பல வருடங்களில் எனது எழுத்துக்கும் எனக்கும் ஒரே வயது எனும் நிலை வருமோ? அதிசயிக்க வைத்த அப்பர், திகைக்க வைத்த திருஞானசம்பந்தர், தமிழ் ஆட்சி செய்த ஆண்டாள் என எழுதியவர்களின் எழுத்துக்கும் வயது உண்டோ?! உங்கள் எழுத்துக்கும், உங்கள் வயதுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டோ?

4 comments:

vasu balaji said...

இல்லவே இல்லை:))

கிரி said...

"என்னை நேரில் பார்த்தாலும் வயது அதிகமாகத்தான் தெரிவேன் என்பது வேறு விசயம். அதை நிரூபிக்கும் வகையில் அவரது கேள்வியும் இருந்தது."

:-))))

கோவி.கண்ணன் said...

// பலர் என்னை வயதானவனாகவே நினைக்கிறார்கள். மேலும் நான் எழுதுவது புரியும்படியாக இல்லை எனும் குறைபாடும் உண்டு என சொன்னேன். //

உங்களைப் பற்றி இங்கு படத்துடன் எழுதி இருக்கிறேன்

Radhakrishnan said...

மிக்க நன்றி.