Friday 30 July 2010

கம்யூனிசமும் கருவாடும் - 1

மதார் அவர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க கம்யூனிசம் பற்றி ஒரு முழு விளக்கம் வெகு விரைவில் தரப்படும். அதனை கம்யூனிஸ்ட்கள் தந்தால் ஒருதலை பட்சமாக கருதப்படும் என்பதால் இது குறித்து விபரமாகவே எழுதுகிறேன். அதனால் கம்யூனிஸ்ட்கள் சற்று பொறுத்துக் கொள்க.

நான் கம்யூனிசவாதி கிடையாது, இந்த வாதி எனப்படும் வியாதி எதுவும் எனக்கு கிடையாது. பலருக்கு கம்யூனிசம் என்றாலே வேப்பங்காயாக கசப்பதற்கு காரணம் அரை குறையுடன் தெரிந்து வைத்து கொண்டு தன்னை கம்யூனிஸ்ட் என சொல்லிக் கொள்பவர்களும், கொள்கைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு சுயநலத்துடன் வாழப் பழகி கொண்டதும், கம்யூனிசம் என்றாலே உலகில் சமத்துவம் நிலவும் என்கிற பொய்யான கோட்பாடும்தான் முழு முதற் காரணம்.

பொருளாதாரத்தை மையப்படுத்தி பல புரட்சிகள் உலகில் ஏற்பட்டு இருக்கின்றன. முதலாளிகள், தொழிலாளிகள் எனப்படும் பிரிவினையை கண்டு குமுறியவர்கள் பலர்.

கம்யூனிசம் என்பது ஒரு சமூகத்தின் அடிப்படை ஆணி வேர். ஆனால் புரிதல் இல்லாத காரணத்தினால் இந்த கம்யூனிசம் கேலிப் பொருளாகிப் போனது. ஜனநாயகம் என்பதன் அடிப்படையே கம்யூனிசம் தான். எத்தனை பேருக்கு கம்யூனிசம் பற்றி ஒழுங்காக தெரியும்?

கம்யுனிட்டி (சமூகம்) பற்றிய சிந்தனை மட்டுமே கம்யூனிசத்துக்கு உண்டு. கம்யூனிசத்தில்தான் தோழர்களே எனும் ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இப்பொழுது மனிதர்கள் பார்வை எப்படி இருக்கிறது?

(தொடரும்)

வாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா?

எனக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத சந்தேகம் ஒன்று இருந்து வருகிறது.

வாசகர் கடிதங்களை பொதுவில் வெளியிட்டு அதற்கு பதில் தெரிவிப்பது சரியான முறையா?

வாசகர்கள் எப்படி தனியாய் நேரம் ஒதுக்கி நமக்கு தனியாய் எழுதுகிறார்களோ அதைப் போல நாமும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி எழுதுவதை தனியாய் அனுப்புவதுதான் சரியா?

சில வாசகர்கள் தங்களது எண்ணங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை என்பதால் மட்டுமே தனிப்பட எழுதி அனுப்புகிறார்கள் என்பதை எவரேனும் உணர்ந்து இருக்கிறார்களா?

மேலும் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்துதான் வெளியிடுகிறார்களா?

எவரும் கருத்து தெரிவிக்கலாம் எனும் வாய்ப்பு இருப்பதால் அதனை முறை கேடாக பயன்படுத்தும் நபர்களின் பின்னூட்டங்களை தைரியமாக நீக்கும் பண்பு உண்டா அல்லது அந்த முறைகேடுகளையும் சிரித்து வாசிக்கும் பண்புதான் நீடிக்கிறதா?

வாசகர்களே உங்கள் எண்ணங்கள் பல எழுத்தாளர்களின் எள்ளல்களுக்கு உள்ளாகி இருப்பதை எப்போதேனும் நினைத்து பார்த்தது உண்டா?

எனது கருத்துதனை சொல்கிறேன் என விழலுக்கு நீர் பாய்ச்சுதலை இனிமேலாவது தவிர்த்து விடுங்கள் வாசகர்களே.

Thursday 29 July 2010

இனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே

ஒரு வலைப்பூ வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் பின்னூட்டம் எழுதும் வாய்ப்புதனை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு வலைப்பூவே அல்ல.

                                                 - ஆங்கில வலைப்பதிவர்

வலைப்பூ அங்கீகாரம்தனை இன்றுமட்டும்  எனது வலைப்பூ இழக்கிறது. :)