Thursday 11 December 2014

வெட்டித் தருணங்கள் - 2

அன்று நிறைய கனவு கண்டேன். எனக்கான ஒரு லேப்டாப். இரவு முழுக்க விழித்து இருந்தேன். அடுத்தநாள் நானும் என் அப்பாவும் கடைக்குப் போனோம். விதவிதமாக லேப்டாப் வைத்து இருந்தார்கள்.

"எதுனு தெரியுமா?"

"டோசிபா ஸ்டேடிலைட்"

"அப்ப போய் எடு, எதுக்கு பிராக்கு பாக்குற"

எனக்கு எதை தேர்ந்தெடுப்பது என சற்று குழப்பம் அடைந்தேன். நண்பன் சொன்னதை நம்பலாமா என புரியாமல் திகைத்தேன்

"என்ன மசமசனு நிற்கிற"

"இதோ எடுத்துட்டு வாரேன்"

அங்கே இருந்த விற்பனை பையனிடம் மேலும்  விசாரித்து சரியாக ரூபாய் 30000க்கு ஒரு லேப்டாப் வாங்கினேன்.

"எனக்கு ஒரு நல்ல போன் வேணும்பா"

"இந்த போன் நல்லாதான இருக்கு"

"நிறைய ஆப்ஸ் இதில இல்லை"

இது உடையட்டும், வேற வாங்கலாம்"

லேப்டாப் வாங்கிய கையோடு நேராக மாரியம்மன் கோவிலுக்குப் போனேன். லேப்டாப் பூஜை பண்ண இல்லை. என்னிடம் சவால் விட்டவன் அங்கு இருந்தான், அவனுக்கு காட்டவே சென்றேன். வீடு வந்ததும் லேப்டாப் திறந்தேன். புதிய உலகம் எனக்கானது. இரண்டு அக்காக்கள், வேண்டாம்
.
இன்டர்நெட் கனெக்‌ஷனுக்கு போன் பண்ணி சொன்னேன். டாடா மெமரி கார்டு வாங்க சொன்னார்கள். எனக்கு வீட்டில் இணைப்பு வேண்டும் என அடம்பிடித்தே போன் செய்தேன். இன்னும் சில நாட்களில் இணைப்பு தருகிறோம் என சொன்னார்கள்.

சிவகுமாருக்கு போன் செய்தேன்.

"டேய் லேப்டாப் வாங்கிட்டேன்டா"

"என்ன லேப்டாப்"

"டோசிபா"

"இன்டர்நெட்?"

"ஏர்டெல்"

"பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் அப்புறம் இன்ஸ்டாக்ராம் எல்லாம் ஆரம்பிடா"

"அதெல்லாம் எதுக்குடா"

"நீ வெளி உலக ஆட்களோட பழக வேணாமா? உங்க வீட்டுல யார்கிட்டயும் இல்லையா?"

"இல்லைடா"

"இன்னைக்குத்தான லேப்டாப் வாங்கி இருக்க, ஒண்ணொன்னா சொல்றேன். மொபைலே காலேஜுக்கு வந்தப்பறம் வாங்கி இருக்க"

"கிண்டல் பண்ணாத"

"நாளைக்கு லிங்கா பார்க்க வாடா"

"என் தலைவன் படம் மட்டுமே பார்ப்பேனு உனக்குத் தெரியாதா?"

"யாரு அணிலா?"

"அப்பா வரார்,பிறகு பேசறேன்டா"

அப்பா ஒன்றும் வரவில்லை. அந்த நாயை செருப்பால் அடிக்க வேண்டும் போலிருந்தது. சிவகுமார் நாய் கல்லூரியில் பழக்கம். பெரிய பணக்காரன். எல்லோரிடம் திமிராக பேசுவான். கத்தி படம் வெற்றி பெற்றது அவனுக்கு வயிற்றெரிச்சல். தான் யாருக்கும் ரசிகன் இல்லைனு சொல்வான். மடையன், அணிலாம். நாளை அவனை வயிற்றில் ஓங்கி குத்து விட வேண்டும்.

(தொடரும்)

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஆரம்பம் நன்றாக உள்ளது தொடருங்கள் அடுத்த பகுதிக்கா காத்திருக்கேன்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Radhakrishnan said...

Thank you Roopan