அந்த வாசகம் ''Fortune favours prepared mind''.
ஒருவர், இன்னொருவரையும் அவரது தாயையும் தாக்கியதாக வழக்கு. அந்த வழக்கின் சாரம்சம் இதுதான்.
இரு நண்பர்கள். ஒரே தெருவில் வசித்து வருபவர்கள். ஒருவர் மற்றவரிடம் மிதி வண்டியை வாங்கி இருக்கிறார். மிதி வண்டி சொந்தக்காரர் சில தினங்களுக்கு பின்னர் மிதிவண்டியை திருப்பிக் கேட்டு இருக்கிறார். வாங்கியவர் கொடுக்க மறுக்க சண்டை போட்டு இருக்கிறார்கள். சற்று விசயம் முற்றிப்போக, காவல் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொண்டு சென்று விட்டார்கள். ஆனால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சொல்ல மறுத்து இருக்கிறார்கள், அதனால் அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பின்னர் சிறிது தினம் கழித்து மிதி வண்டி வாங்கியவர், மிதிவண்டி கொடுத்தவர் வீட்டு வாசலில் வந்து சத்தம் போட்டு இருக்கிறார். மிதி வண்டி கொடுத்தவர் மாடியிலிருந்து இறங்கி வந்ததும் அவரை மிதி வண்டி சங்கிலியால் அடித்துவிட்டு, தடுக்க வந்தத் தாயையும் அடித்துவிட்டு ஓடிவிட்டார். அடிபட்டதால் மிதி வண்டி கொடுத்தவர் மயங்கி விழுந்து விட்டார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது இவருக்கு வலிப்பு வரும் என கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவ்வாறு அடிக்கவில்லை என்று மிதி வண்டி வாங்கியவர் மறுத்து இருக்கிறார். இதுதான் நடந்தது என வழக்கு நடந்து கொண்டிருந்தது.
இந்த வழக்கை கேட்டதும் எனக்கு 'இதெல்லாம் ஒரு வழக்கா' என்றுதான் இருந்தது.இது போன்ற வழக்குகளுக்காக மக்களின் பணம் எவ்வளவு செலவாகிறது என நினைக்கும்போது ஏன் இவ்வாறு அடிதடிகளில் எல்லாம் ஈடுபடுகிறார்கள், அதுவும் மிகவும் சின்ன விசயங்களுக்கெல்லாம் எந்த் தோன்றும். ஆனால் நமக்கு சின்ன விசயமாக இருப்பது அனைவருக்கும் சின்ன விசயமாக இருப்பதில்லை. அடிபட்டவர் மேல் ஒரு காயமும் இல்லை. சம்பவம் நடந்து நான்கு மாதங்கள்.
இப்பொழுது அடிபட்டவர் சொல்லும் விசயத்தை வைத்தும், மற்ற சாட்சிகள் வைத்தும் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.
கேள்வி கேட்டார்கள். ஆனால் அடிபட்டவரால் சரிவர பதில் சொல்ல இயலவில்லை. நினைவு இல்லை என்றார் அவர். அவரது நினைவுக்கு கொண்டு வர அவர் கொடுத்த வாக்கு மூலம் காட்டினார்கள். படிக்க அவகாசம் தந்தார்கள் அவருக்கு.
ஆனாலும் சரிவர பதில் சொல்லவில்லை. சாப்பிடும் தருணம் வரவே எங்களை போகச் சொன்னார்கள். அன்று திருப்பி அழைக்கவில்லை. அடுத்த நாள் காலை எங்களை வரச் சொன்னார்கள்.
சென்றோம். நாங்கள் வழக்கு குறித்து முடிவு எடுக்கவோ மேற்கொண்டு பேசவோ எதுவும் வாய்ப்பு இல்லை. சாட்சியும், சரிவர பதிலும் இல்லாததால் விடுதலை செய்வதாக முடிவு செய்து இருக்கிறோம், உங்களில் ஒருவர் அவர் மேல் குற்றம் இல்லை என சொல்ல வேண்டுமென்றார்கள். அவ்வாறே எங்களில் ஒருவர் எழுந்து சொன்னார். அத்துடன் வழக்கு முடிந்தது.
பின்னர் வேறு வழக்கு என அழைத்தார்கள். அதுவும் மூன்று நாள். என்னைத் தெரிந்தெடுக்கவில்லை. திருப்பி சென்று அமர்ந்தோம். மாலை சிலரை அழைத்து அடுத்தநாள் தொலைபேசியில் அழைக்கச் சொன்னார்கள். அழைத்த பெயர்களில் எனது பெயரும் சிலரது பெயரும் வரவில்லை. என்ன எனக் கேட்டோம். பத்து நிமிடங்கள் என்றார்.
எங்களது பெயர் அழைத்தார். மொத்த சேவையிலிருந்து விடுவிப்பதாக சொன்னார். மனம் சந்தோசமானது. நான்கே நாட்கள் தான். முதலில் சொன்ன அந்த வாசகம் ஏனோ எனக்குப் பெரிதாகப் பட்டது அன்று.
நீதிபதிக்கு உதவி செய்ய வேண்டுமென நமது பெயர் தெரிவு செய்து நாம் சென்று அமர்ந்ததும் உறுதிமொழி எடுக்கவேண்டும். பைபிள், குரான், கீதை என உறுதிமொழி இருந்தது. இது தவிர்த்து ஒரு உறுதிமொழியும் இருந்தது அது மதம் தனை குறிப்பிடாது, உண்மையின் பெயரால் என இருக்கும். ஒவ்வொருவரும் ஒன்றை எடுத்து உறுதி மொழி எடுத்துக்கொண்டார்கள். நானும் உறுதிமொழி எடுத்தேன்.
நான் எதை தெரிவு செய்து இருப்பேன் என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
முற்றும்.
Saturday, 4 July 2009
Friday, 3 July 2009
நான் சந்தித்த வழக்குகள் - 2
பல கட்டுப்பாடுகளை முன்னரேச் சொல்லி இருந்தார்கள். வழக்கைப்பற்றி வெளியில் பேசக்கூடாது. யாரிடமும் கலந்துரையாடக்கூடாது என்றெல்லாம் சொல்லி இருந்தார்கள். தகுந்த வழக்குக்கு தெரிவு செய்யப்பட்டவர்களே அது குறித்து விவாதிக்கலாம் ஆனால் ஒரு தனி அறையில், என நிபந்தனைகள்.
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டதும் ஒரு சிலர் நேரடியாக சரி சொல்லி அமர்ந்து கொண்டார்கள். சிலர் விளக்கம் சொன்னதும் அதில் ஒரு சிலரே விடுவிக்கப்பட்டார்கள். சிலர் விளக்கம் சரியில்லை என அமர்த்தப்பட்டார்கள். எனது பெயர் அழைக்கப்படவில்லை. சந்தோசமாக இருந்தது. தப்பித்தோம் என நினைத்துக் கொண்டேன். மாலை வரை இருந்தோம். அடுத்த நாள் வர வேண்டாம், தொலைபேசி மூலம் அவர்களை அழைக்கச் சொன்னார்கள்.
அடுத்த நாள் அழைத்தேன், அன்று வேண்டாம் என அதற்கு அடுத்த நாள் அழைத்தார்கள். பன்னிரண்டாம் தேதி புதன் வரச் சொன்னார்கள். சென்றோம். இம்முறை பதினாறு நபர் சென்றோம். பன்னிரண்டு பேர் என சொன்னார்கள். அது மூன்று நாள் வழக்கு. என் பெயர் அழைத்தார்கள். முதல் வழக்கிற்கு பெயர் வரவில்லை, மகிழ்ந்தேன், இப்பொழுதும் மகிழ்ந்தேன் மூன்று நாட்கள் தானே. ஆனால் இருவாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறைந்த பட்சம். இந்த வழக்கு முடிந்ததும் ஆறு வாரம் வழக்கு திரும்பவும் கிடைக்கலாம் எனும் நிலை.
ஒருவரிடம் பேசியபோது நாம் செய்யும் சொந்த வேலையை விட இது முக்கியம். நமது அரசாங்கத்துக்கு உதவி செய்கிறோம் என்றார். அவர் ஆறு வாரம் வழக்கில் இருப்பதாக சொன்னார். சிலர் நான்கு வாரங்கள் முடிந்து விட்டது , இன்னும் நான்கு வாரங்கள் ஆகலாம் என்றார்கள். அப்பொழுதுதான் இந்த வாசகம் கண்ணுக்குப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் சொன்னது என நினைக்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கும், அந்த வாசகமும்தான் என்ன?
ஒவ்வொருவராக அழைக்கப்பட்டதும் ஒரு சிலர் நேரடியாக சரி சொல்லி அமர்ந்து கொண்டார்கள். சிலர் விளக்கம் சொன்னதும் அதில் ஒரு சிலரே விடுவிக்கப்பட்டார்கள். சிலர் விளக்கம் சரியில்லை என அமர்த்தப்பட்டார்கள். எனது பெயர் அழைக்கப்படவில்லை. சந்தோசமாக இருந்தது. தப்பித்தோம் என நினைத்துக் கொண்டேன். மாலை வரை இருந்தோம். அடுத்த நாள் வர வேண்டாம், தொலைபேசி மூலம் அவர்களை அழைக்கச் சொன்னார்கள்.
அடுத்த நாள் அழைத்தேன், அன்று வேண்டாம் என அதற்கு அடுத்த நாள் அழைத்தார்கள். பன்னிரண்டாம் தேதி புதன் வரச் சொன்னார்கள். சென்றோம். இம்முறை பதினாறு நபர் சென்றோம். பன்னிரண்டு பேர் என சொன்னார்கள். அது மூன்று நாள் வழக்கு. என் பெயர் அழைத்தார்கள். முதல் வழக்கிற்கு பெயர் வரவில்லை, மகிழ்ந்தேன், இப்பொழுதும் மகிழ்ந்தேன் மூன்று நாட்கள் தானே. ஆனால் இருவாரங்கள் இருக்க வேண்டும் என்பது குறைந்த பட்சம். இந்த வழக்கு முடிந்ததும் ஆறு வாரம் வழக்கு திரும்பவும் கிடைக்கலாம் எனும் நிலை.
ஒருவரிடம் பேசியபோது நாம் செய்யும் சொந்த வேலையை விட இது முக்கியம். நமது அரசாங்கத்துக்கு உதவி செய்கிறோம் என்றார். அவர் ஆறு வாரம் வழக்கில் இருப்பதாக சொன்னார். சிலர் நான்கு வாரங்கள் முடிந்து விட்டது , இன்னும் நான்கு வாரங்கள் ஆகலாம் என்றார்கள். அப்பொழுதுதான் இந்த வாசகம் கண்ணுக்குப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் சொன்னது என நினைக்கிறேன்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கும், அந்த வாசகமும்தான் என்ன?
(தொடரும்)
நான் சந்தித்த வழக்குகள் - 1
கடந்த செப்டெம்பர் மாதம் இலண்டன் மத்திய நீதிமன்றத்தில் இருந்து ஒரு கடிதம் எனக்கு அனுப்பி இருந்தார்கள். நீதிபதிக்கு உதவிட வேண்டும் என கோரி இருந்தார்கள். நமது ஊரில் நாட்டாமையைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் போல வழக்கை உன்னிப்பாக கவனித்து தீர்ப்பு வழங்க உதவ வேண்டும்.
நவம்பர் பத்தாம் தேதி வரவேண்டும் என இருந்தது. இவ்வாறு நபர்களை ஓட்டு பதிவிலிருந்து பெயர் தேர்வு செய்து அனுப்புவார்கள். இப்படி எனக்கு ஒரு வாய்ப்பு வரவும், மறுக்க வேண்டாம் என சரி சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளூர பயம் இருந்தது. இரண்டு வாரம் எனக் குறிப்பிட்டு அதற்கு மேலும் ஆகலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
நவம்பர் பத்தாம் தேதி நீதி மன்ற வளாகம் அடைந்தேன். பலர் வந்து இருந்தார்கள். ஒரு அறையில் சென்று அமர்ந்து இருந்தோம். சென்றவுடன் ஒரு அட்டையை கொடுத்து அதில் ஐந்து பவுண்டுகள் ஒவ்வொரு தினமும் ஏற்றப்படும் எனவும், அந்த அட்டையை அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட உபயோகிக்கலாம் என கூறினார்கள்.
சற்று நேரம் கழித்து இருபது நபர்களை அழைத்தார்கள். நானும் தெரிவு செய்யப்பட்டேன். நீதிமன்ற அறைக்குள் சென்றோம். வழக்கு கொலை வழக்கு என்றார் நீதிபதி. மனம் கிடுகிடுவென ஆடியது. நான்கு பேர் ஒரு கூண்டில் அமர்ந்து இருந்தார்கள். இந்த வழக்கு ஆறு வாரம் நடக்கும் என்றார் நீதிபதி. மனம் பயந்து போனது.
பதினாறு நபர் தெரிவு செய்வோம், வழக்கில் உதவமுடியாதவர்கள் தகுந்த காரணம் சொன்னால் வழக்கிலிருந்து விடுபட்டு செல்லலாம் என சொல்லிவிட்டு நீதிபதியின் உதவியாளர் ஒவ்வொரு பெயராக அழைக்கத் தொடங்கினார். மனம் காரணம் யோசிக்கத் தொடங்கியது.
நவம்பர் பத்தாம் தேதி வரவேண்டும் என இருந்தது. இவ்வாறு நபர்களை ஓட்டு பதிவிலிருந்து பெயர் தேர்வு செய்து அனுப்புவார்கள். இப்படி எனக்கு ஒரு வாய்ப்பு வரவும், மறுக்க வேண்டாம் என சரி சொல்லிவிட்டேன். ஆனால் உள்ளூர பயம் இருந்தது. இரண்டு வாரம் எனக் குறிப்பிட்டு அதற்கு மேலும் ஆகலாம் எனவும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
நவம்பர் பத்தாம் தேதி நீதி மன்ற வளாகம் அடைந்தேன். பலர் வந்து இருந்தார்கள். ஒரு அறையில் சென்று அமர்ந்து இருந்தோம். சென்றவுடன் ஒரு அட்டையை கொடுத்து அதில் ஐந்து பவுண்டுகள் ஒவ்வொரு தினமும் ஏற்றப்படும் எனவும், அந்த அட்டையை அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட உபயோகிக்கலாம் என கூறினார்கள்.
சற்று நேரம் கழித்து இருபது நபர்களை அழைத்தார்கள். நானும் தெரிவு செய்யப்பட்டேன். நீதிமன்ற அறைக்குள் சென்றோம். வழக்கு கொலை வழக்கு என்றார் நீதிபதி. மனம் கிடுகிடுவென ஆடியது. நான்கு பேர் ஒரு கூண்டில் அமர்ந்து இருந்தார்கள். இந்த வழக்கு ஆறு வாரம் நடக்கும் என்றார் நீதிபதி. மனம் பயந்து போனது.
பதினாறு நபர் தெரிவு செய்வோம், வழக்கில் உதவமுடியாதவர்கள் தகுந்த காரணம் சொன்னால் வழக்கிலிருந்து விடுபட்டு செல்லலாம் என சொல்லிவிட்டு நீதிபதியின் உதவியாளர் ஒவ்வொரு பெயராக அழைக்கத் தொடங்கினார். மனம் காரணம் யோசிக்கத் தொடங்கியது.
(தொடரும்)
Subscribe to:
Comments (Atom)
-
ஆத்திகர்கள் எல்லாம் முஸ்லீம்கள் அல்ல. ஆனால் முஸ்லீம்கள் எல்லாம் ஆத்திகர்கள். எவர் ஒருவர் ஆத்திகர்கள் இல்லையோ அவர்கள் முஸ்லீம்கள் இ...
-
ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெ...
-
இந்த முறை நான் சாமியாரை பார்க்கச் சென்றபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. எவரையுமே அவரை சுற்றி காணவில்லை. நான் மெதுவாக அவரிடம் சென்று ...