Monday 8 September 2014

திருவரங்கனும் கோடி ரூபாயும்

இந்தியாவில் சில நாட்கள் - 8

எனக்கு ஶ்ரீரங்கம் மிகவும் பிடிக்கும். அங்கே இருக்கும் ஶ்ரீரங்கநாதனை இன்னும் பிடிக்கும். ஆண்டாளுக்குப் பிடித்த ஶ்ரீரங்கன் அல்லவா. காவிரி, மாம்பழ சாலை, திருவானைக்கோவில் என அத்தனை ஆசை. அங்கேயே தங்கி ஶ்ரீரங்கனை மட்டுமே சேவித்து வாழ்ந்து விட முதுமை ஆசை உண்டு.

சனிக்கிழமை ஶ்ரீரங்கனை காண கிளம்பினோம். திருப்பதியை காண திட்டமிடாத காரணத்தால் ஶ்ரீரங்கம் போயே ஆக வேண்டும் என சென்றோம். திருச்சியை அடைந்தபோது மணி 1.15 இனி நடை சாத்தப்பட்டு இருக்கும் என உறவினர்களை திருச்சியில் பார்த்துவிட்டு ஶ்ரீரங்கம் அஅடைந்தபோது மணி மாலை 4. கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று முன்வரை கூட்டம் இல்லை என சொன்னார்கள். ரூபாய் 50, 100 என வரிசை அதோடு நியாய வரிசை.

வாய்ப்புதனை பயன்படுத்தும் வசதி. 250 ரூபாய் வரிசை நின்றோம். அதுவே சற்று கூட்டம் தான். அவசரமாக சென்றுவர ஒரு வழி. ஓரிடத்திற்கு நடந்து போகலாம், சைக்கிள், மோட்டார் வாகனம் என பல உண்டு. அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிகேற்ப ஒன்றை பயன்படுத்துவோம் ஆனால் அதை எவரும் திட்டுவதில்லை. இறைவழிபாடு மட்டும் விதிவிலக்கு. எனக்கு பணம் கொடுத்து போவது குறித்து தர்மசங்கடமில்லை. சென்றோம். சிறிது நேரம் நன்றாக வணங்கிச் செல்ல அனுமதி தந்தார்கள்

இறைவன், பணம். கோவில் சுற்றி முடிக்க முடிக்க பணம் மட்டுமே பிரதானம். ஆனால் ஶ்ரீரங்கனே கதி என பணம் எல்லாம். பொருட்டல்ல என வாழ்பவரும் உண்டு. லண்டனில் கட்டும் கோவிலுக்கு வழி கொடு என வேண்டுதல்.

ஶ்ரீரங்கத்தில் எனது கனவில் சென்ற வருடம் வந்து பின் சிலநாளில் இறந்து போன சின்ன அத்தை குறித்து விசாரிக்கப்போனோம். இரண்டு வருடங்கள் முன்னர் என்னை திருமணத்தில் சந்தித்த அந்த அத்தை பாகவதர் போல நாமத்துடன் நான் இருந்தது கண்டு வீட்டுக்கு வந்து சொல்லி இருக்கிறார். அந்த வீட்டில் முருகனுக்கு கூட நாமத்தை இட்ட படம் இன்னும் உண்டு. பெரிய அத்தையிடம் பல வருடங்கள் முன் ஒருவர் கேட்க பாற்கடலை கடைந்தபோது ராமத்தை இடாதோர் எவர் என சொல்ல அவர் அமைதி ஆனாராம்.

மீண்டும் திருச்சி. மக்கள் கூட்டம், இம்முறை கடைகளில். ஒருவழியாக இரவு 11 மணி ஊர் வந்தோம். இரு தினங்கள் பின் சென்னைக்கு கிளம்பி வர ஶ்ரீரங்கத்தில் உள்ள ஒரு அண்ணன் திடீரென அழைத்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள செக் உள்ளது, ஒருவர் தருகிறேன் என்றார். லண்டனில் உபயோகிக்கலாம், சரி என்றால் சென்னைக்கு வரச் சொல்கிறேன். அவர் ஆசையை கெடுப்பானேன் என சரி என்றேன். உண்மையா பொய்யா என கேட்டு சொல்கிறேன் என்றபோதே எனக்குப் புரிந்தது

அவரவே இல்லை.  இன்னும் மனிதர்கள் நம்பிக்கொண்டே இருக்கிறார்கள் இறைவன் முதற்கொண்டு இலவசமாக எவரேனும் உதவுவார்கள் என. இது பொருள் உலகம்

(தொடரும்)

No comments: