Friday 30 November 2012

அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 2

அஷ்டமாசித்திகளில் முதலான அணுவைப் போல் சிறியது ஆதல் என்பது எவ்வகையில் சாத்தியம் என எவரேனும் பரிசோதனையில் இறங்கி இருக்கிறார்களா என்றால்புராண கதைகளில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால் உண்மையிலே இது சாத்தியமா என்றால் இதுவரை நமது காலகட்டத்தில் எவரேனும் இப்படி முயற்சித்து வெற்றி கண்டு இருக்கிறார்களா என்றால் இல்லையென்றே உறுதியாக சொல்லலாம்.

ஆனால் புராண காலத்து கதாபாத்திரங்கள் அல்லது வாழ்ந்த ஜீவன்கள் எல்லாம் முனிவர்களின் சாபத்தினால் அணிமா நிலையை அடைந்து இருக்கின்றன என்றே குறிப்பு இருக்கிறது. அகலிகை சிறு கல்லாக மாறுதல் கூட ஒருவகையில் அணிமாவை சார்ந்ததுதான். கண்ணுக்கே உட்படாத அணிமா வகை என்பது ஒருவகை பண்புதான்.

அணிமா குறித்து சொல்லும்போதே அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்வோம். எத்தனையோ முறை ஸ்ரீரங்கம் சென்ற போதெல்லாம் இந்த திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம் சென்று பார்க்க வேண்டும் என தோணவே இல்லை. இதுவரை இந்த ஆலயத்திற்கு சென்றதும் இல்லை. அட்லாண்டீசும் லேமூரியாவும் என்ற கதை எழுதிய பொது கூட திருவானைக்கோவிலில் உள்ள நூலகம் என எழுதினேனே தவிர இந்த ஆலயம் பற்றி எழுதவில்லை.மேலும் சில தருணங்களில் திருவானைக்கோவில் வழியாக செல்லாமல் மாம்பழம் சாலை வழியாக ஸ்ரீரங்கம் சென்றது உண்டு. சிறுவயது காலம் தொட்டே இந்த ஸ்ரீரங்கநாதர் எனக்கு மிகவும் பழக்கமாகிப் போனவர்  என இருந்தாலும் திருவானைக்கோவிலில் உள்ள ஜம்புகேஸ்வரர் மட்டும் எனக்கு பரிச்சயமே இல்லை.  சிவ வழிபாடு எல்லாம் செய்யக்கூடாது என்று இல்லை, ஏனோ இந்த அகிலாண்டீஸ்வரியும் ஜம்புகேஸ்வரரும் எனக்கு தெரியாமலே போனது.

அகிலாண்டீஸ்வரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம் வந்தபோது ஜம்புகேஸ்வரர் கண்ணுக்குத் தெரிகிறார். யார் இந்த அகிலாண்டீஸ்வரி? பொதுவாகவே இந்து புராணங்களில் ஒரே ஒரு தெய்வம் தான் பல உருவங்களில் பல பெயர்களில் அவதாரமோ அல்லது பூமியில் பிறப்போ எடுத்து வருவார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான். அவர்களின் பூமியில் எழுந்தருளல் குறித்து மிகவும் அற்புதமாகவே எழுதி வைத்து இருக்கிறார்கள். இவை எல்லாம் சத்தியமாகவே நடந்த செயலா என்றால் எனக்குத் தெரியாது. ஆனால் திருவானைக்கோவிலில் உள்ள ஆலயம் அதற்கு சான்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திற்கும் என வரலாறும், அதோடு சம்பந்தமான புராண கதைகளும் உண்டு.

சிவன், உலகம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என கயிலையில் தவம் இருக்கிறார். சிவன் நினைத்தால் இந்த உலகினை எப்போதுமே நன்றாக வைத்து இருக்க முடியும், அதாவது தீயவைகள் எல்லாம் அழித்துவிட்டால் நல்லவை மட்டும்தானே மிஞ்சும். ஆனால் அந்த தீயவைகளை கூட நல்லவைகளாக மாற்ற வேண்டி சிவன் தவம் இருக்கிறார். சிவனின் தவத்தைக் கண்டு,  பார்வதி சிவனை நோக்கி பரிகாசம் செய்கிறார். இதனால் கோபம் கொண்ட சிவன் பார்வதியை கைலாயிலத்தில் இருந்து பூமிக்கு சென்று தவம் மேற்கொள்ளுமாறு கட்டளை  என்ற சாபம் இடுகிறார். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஊடல் எல்லாம் சிவன், பார்வதியின் வாழ்க்கையில் மிகவும் அதிகமாகவே உண்டு. பார்வதி இவ்வுலக சுபிட்சத்திற்கு நான் தவம் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பூமியில் அகிலாண்டீஸ்வரியாக அவதாரம் மேற்கொள்கிறார்.

அப்பொழுது அவர் தெரிவு செய்த இடம் தான் காடுகள் நிறைந்த திருவானைக்கோவில். அங்கே அவர் ஒரு நாவல் மரத்தின் கீழே தனது தவத்தை மேற்கொள்கிறார். பதிபக்தி என சொல்வார்கள். தன்னை தனியாக அனுப்பிவிட்டாரே என கோபம் எதுவும் சொல்லாமல் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து லிங்கம் செய்து வழிபடுகிறார். மணலில் கயிறு திரிப்பது சாத்தியமற்ற செயலாக இருந்தாலும் இன்றைய அறிவியல் விசயங்களில் மணலுடன் சில வேதியல் பொருட்களை சேர்த்தால் மணலில் கயிறு  திரித்தல் சாத்தியம் தான். அன்றைய கால கட்டத்தில் தனது தவ வலிமையால் பார்வதி தண்ணீரில் லிங்கம் செய்து வழிபட்டது சாத்தியமாகவே இருக்க கூடும். தண்ணீர் பனிக்கட்டியான பின்னர் அதை சிவலிங்கமாக செய்வது மிகவும் சாத்தியமே. இதனை அப்பு லிங்கம் என்றே குறிப்பிடுகிறார்கள். 

அகிலாண்டீஸ்வரியின் தவத்தை மெச்சிய சிவன் ஒருவழியாக கடைசியில் அவருக்கு தரிசனம் தருகிறார். அப்பொழுது சிவன் ஒரு ஆசிரியராக, அகிலாண்டீஸ்வரி ஒரு மாணவியாக இருந்து ஞானம்தனை சிவனிடம் இருந்து பெற்று கொள்கிறார். அதனால் தான் இந்த திருவானைக்கோவிலில் சிவனுக்கும் அகிலாண்டீஸ்வரிக்கும் திருக்கல்யாணம் கூட நடைபெறுவதில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

திருவானைக்கோவில் பெயர் வரலாறு கூட மிகவும் சுவராஸ்யம் தான். சிவனின் பக்தர்களான மலையவன் மற்றும் புஷ்பதந்தா என்பவர்கள் கைய்லாயிலத்தில் வசித்து வந்தார்கள். இவர்கள் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள். இதனால் ஒருவர் மீது ஒருவர் கோபம் கொண்டு புஷ்பந்தாவை பூமியில் ஒரு யானையாக உருவெடுக்க சபதம் போடா, புஷ்ப்தந்தா மலையவனை ஒரு சிலந்தியாக உருவேடுக்குமாறு சபதம் இடுகிறார்கள். இங்கே அணிமாவும், மகிமாவும் சாத்தியமாகிறது. மகிமாவின் மகிமை பற்றி அடுத்தத் தொடரில் பார்க்கலாம். பூமிக்கு உருமாறி வந்தாலும் ஜம்புகேஸ்வரம் என்ற நகரை அடைந்து அங்கே சிவனை பூஜிக்கிறார்கள். அங்கேயும் இவர்களின் சண்டை ஓயவில்லை. சிலந்தியானது நாவல் மர இலைகள் சிவலிங்கம் மேல் விழாமலிருக்க சிலந்தி வலை கட்டுகிறது. ஆனால் யானையோ அது லிங்கத்திற்கு மீதான அழுக்கு என அழித்து கொண்டு தினமும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து அபிஷேகம் செய்கிறது. இதைக் கண்டு கோபம் கொண்ட சிலந்தி யானையை கொன்றுவிடுகிறது. இவர்களது பக்தியினை மெச்சி சிவன் இவர்கள் இருவருக்கும் மீண்டும் பழைய நிலையை கைலாயித்தில் தந்துவிடுகிறார்.

மலையவன் அடுத்தொரு பிறப்பில் கோச்செங்கண்ணன் எனும் அரசராக பிறப்பு எடுக்கிறார். செங்கண்ணன் எனும் பெயர் அவரது கண்கள் பிறப்பிலேயே சிவப்பாக இருந்ததால் வந்தது என்கிறது குறிப்பு. அதாவது ஜோசியர் குறித்த நேரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை மாபெரும் சிறப்பு அடையும் என்ற நிலை. ஆனால் குழந்தை பிறக்கும் தருணம் முன்கூட்டியே வந்துவிட தாய் ஜோசியர் குறித்த நேரம் வரும் வரை தன்னை தலைகீழாக தொங்கவிடச் சொல்கிறார். அப்படி தலைகீழாக தொங்கவிட்டதால் குழந்தையின் கண்கள் சிவந்து போனது என்கிறது குறிப்பு. அறிவியல் சிந்தனை அன்றே கோலோச்சிதான் இருக்கிறது. கோ என்றால் அரசு, அரசர். கோச்செங்கண்ணன் பல சிவ ஆலயங்களை கட்டுகிறார். அப்படி கட்டிய ஒரு பஞ்சபூத ஆலயங்களில் ஒன்றானதுதான் திருவானைக்கோவில். இந்த ஆலயத்தில் ஒரு சிறு யானை கூட நுழையக் கூடாது என பழைய பகையை மனதில் வைத்து ஆலயம் எழுப்பினான் என சொல்வது உண்டு. ஆனாலும் யானைக்கு பெயர் வந்தது. திரு என்றால் சிறப்பு. சிவனை வழிபட்ட யானை. ஜம்பு அதாவது நாவல் மரங்கள் நினைந்த காடு. திருவானைக்கா என்பதுதான் முன்னர் இருந்தது. பின்னர் திருவானைக்கோவில் என மருவியது என்கிறார்கள்.

உலகம் செழிக்க பார்வதியே அகிலாண்டீஸ்வரியாக வந்து தவம் இருந்து கூட சிலந்தி யானையை கொன்றதாகத்தான் வரலாறு குறிக்கிறது. தெய்வபக்தி நிறைந்த இருவர் ஒருவர் மீது ஒருவர் கொண்ட பொறாமை எண்ணம் இருவரையும் அழிக்கிறது, இருப்பினும் தெய்வபக்தியால் யோகநிலை கைகூடுகிறது. ஆனால் இது தவறான ஒன்று. காதல், அன்பு, தெய்வீகம் என சொல்லிக்கொண்டு மற்றதை அழித்தல் முறை கேடான செயல். பற்று கொண்டு இருத்தல் என்பது பற்றற்று இருத்தல் போல் இருப்பது இல்லை.

நல்ல விசயங்கள் மனதில் இல்லாது போகும்போது நாம் கூனிக்குறுகி போகிறோம். இதுதான் உண்மையான அணிமா. எண்ணங்கள் சிறுத்து போதல் எனலாம்.

(தொடரும்)


No comments: