Tuesday 3 May 2011

முடியாது என சொல்லவா தெரியாது!

முடியாது என சொல்ல தெரியாமல் பல விசயங்களில் மனிதர்கள் சிக்கி கொண்டு தடுமாறுகிறார்கள் என படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை விட நம்மை பற்றி பிறர் அதிகம் அறிந்து வைத்திருக்கும் வகையில் நாம் நடந்து கொள்கிறோம் என்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம். 

பிறரின் தூண்டல்களில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்வதினால் நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இதைத்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்லலாம். 

துன்பம் துயரம் இல்லாம் உயரம் கைக்கு எட்டுவதில்லை. அப்படியெனில் சிரமம் இல்லாமல் வாழ்வது எப்படி? போராடாமல் வாழ்வது எப்படி?

சிரமப்படாமல், போராடாமல் வாழ ஒருவர் நினைத்துவிட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

நினைத்ததை செயல்படுத்த அதற்கான அயற்சி இல்லாத முயற்சி அவசியம். முடியாது என சொல்லவா தெரியாது. 

முடியும் விசயத்தில் முடியாது என சொல்பவர்கள் சாதனையாளர்களாக முடியாது என்பது உண்மை. முடியாது விசயத்தில் முடியும் என சொல்பவர்கள் சோதனைகுட்பட்டு, வேதனைக்குட்பட்டு சீரழிகிறார்கள். 

முடியும் விசயம் எது? முடியாது விசயம் எது? உங்களை நீங்களே உறுதி படுத்தி கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்வதை கேட்டு அடுத்த அடி கூட எடுத்து வைக்காதீர்கள். 

2 comments:

ப.கந்தசாமி said...

நம்மால் முடியாததை, அல்லது தேவையில்லாதவற்றை முடியாது என்று சொல்ல நம் ஈகோ விடுவதில்லை.

Radhakrishnan said...

நன்றி ஐயா.