Wednesday 13 April 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 2

இப்படியொரு மரங்களை நான் கண்டது இல்லை கீழே காலுக்குத் தட்டிய பழங்களை எடுத்து உண்டேன் சுவையாக இருந்தது காட்டைகடக்க வேண்டியது இல்லை காடு அப்படியே மலையாக மாறுவதை உணர்ந்தேன் விலங்குகள் சத்தம் ஏதுமில்லை பறவைகள் கூட காணவில்லை காற்று வீசியது திரும்பி விடலாம் எனதோணியது அந்த நொண்ணன் இந்நேரம் வந்து இருப்பார் எந்தஎல்லையை கடக்கக்கூடாது என சொன்னார்களோ கடந்து இருந்தேன் விறுவிறுவென அங்கிருந்துதோட்டத்திற்கு ஓடியாந்தேன் நொண்ணன் இன்னும் வரவில்லை படுத்தமாத்திரத்தில் எந்திருடே எங்கட போன என்றார் பழம் சாப்பிடுணே என தந்தேன் எடே என்ன நீ சொல்லசொல்ல மலைக்குப் போயிருக்க என பழம் வாங்கி கடித்தவர் இனிப்பா இருக்குடே என்றதும் எல்லை கடந்ததை சொன்னேன் நிசமாவாடே ஆமாணே என்றதும் சரி வாடே வேலையை செய் என்றார் இந்த சேதிஊருக்குள் பரவியது என்னை எல்லோரும் வந்து கேட்டார்கள் பொய் பேசாதடே என்றார்கள் சிலர் கூடவாங்க என அழைத்தேன்.

ஒருவரும் வரத்தயார் இல்லை அந்த பொட்டி என்னிடம் வந்து எதுக்குடே ஊரை ஏமாத்துற நாசமா போவ என திட்டினார் ஏ பொட்டி உன் நொப்பா செத்தாரு அதுக்கு என்னைத் திட்டுவியா? என் அப்பா மட்டும் சாகலைடே ஊருல நிறைய பேரு போயி செத்தாங்க உன் தாத்தா பாட்டி கூடதான் செத்தாங்க அதான் அந்த எல்லை போட்டது என்னமோ வீரன் கணக்கா பேசற என பொட்டி சொன்னதும் நான் கொண்டு வந்த பழம் ஒன்று தந்தேன் போடா கிறுக்குப்பயலே மலைக்குப் போனானாம் என சொல்லி நடந்தது. ஏ பொட்டி போனவங்க திரும்பதான வரலை செத்தாகனு சொல்ற அங்குட்டு எங்கேனாலும் போயிருக்கலாம்ல பேசுவடே தொலைஞ்சி போறது திரும்பக்கிடைக்காதுடே என்றபடி மண்ணை வாரி தூற்றியது சாகத்தான போற என்னோட வா பொட்டி எல்லையை கடந்து காட்டுறேன் என சொன்னதும் நாலைஞ்சு பொணம் அந்த எல்லைக்கு கிட்ட கிடந்துச்சு ன கதை சொன்னது நான் அடுத்தநாள் கிளம்பத்தயார் ஆனேன் எடே பத்திரமா வந்துடுடே என நொண்ணன் சொன்னார் புளிச்சாதம் கட்டிக்கொண்டு கிளம்பினேன் வீரனாக உணர்ந்தேன் அடுத்த தோட்டம் கடந்தபோது இனிமே திரும்பமாட்ட என மொமா சொன்னார் திரும்பினா நீ செத்துரனும் என நடந்தேன் எல்லையைத் தொட்டேன் கைகால்கள் நடுங்கியது பின்வாங்கினேன் இந்த எல்லையை கடப்பது பற்றி யோசிக்காமல் ஓடித் தாவினேன் வியர்த்தது செடிகளுக்கு மத்தியில் அமர்ந்தேன் மரவாசனையானது பலமாக இருந்தது பூ வாசனை இலை வாசனையைவிட மர வாசனையை நுகர்ந்தேன் தண்ணீர் குடித்தேன் உயர நடக்க ஆரம்பித்தேன் மர வாசனை மாற வேறொரு வாசம் லேசாக வர ஆரம்பித்தது தடுமாற ஆரம்பித்தேன் உடலுக்குள் ஏதோ ஊர்வது போல இருந்தது சட்டென்று கீழே குதித்தேன். மரவாசனை அடிக்க உடல் சற்று சரியானது இதைத்தான் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நிச்சயம் ஏதோ ஒன்று இத்தகைய செயலைச் செய்கிறது என அறிவற்ற மூளைக்கு எட்டியது முகத்தை துணியால் மூடி மீண்டும் செல்ல நினைத்து பக்கவாட்டில் நடந்தேன் துணி விலக்கியபோது எவ்வித வாசமும் இல்லை அதே அளவில் நடந்து சென்றேன் மேலே ஏற முடிவு செய்து ஏறியபோது அதே வாசம் அடித்தது கீழே உருண்டேன் பேச முயற்சித்தபோது பேச வரவில்லை நினைவு எல்லாம் இருந்தது கை கால்கள் மரத்துப் போன உணர்வு அசைத்துப் பார்த்தேன் அசைந்தது மெதுவாக ஊன்றி எழுந்து கீழ் நோக்கி நடந்தேன் பேச முடியவில்லை கைகால்களை வேகமாக ஆட்ட இயலவில்லை காட்டினைத் தாண்டி வந்தபோது சற்று ஓரளவு நிம்மதியாக இருந்தது ஆனால் பேச்சு மட்டும் தொலைந்து போயிருந்தது அழுகையாக வந்தது நடந்து தோட்டம் கடந்தபோது என்னடே ஒருமாதிரி இழுத்து நடக்கற என மொமா சொன்னபோதுதான் பார்த்தேன் இடது காலை இழுத்து இழுத்து நடந்தேன் அந்ந வாசம் என்னை ஏதோ செய்துவிட்டது பதில் சொல்ல நினைத்தும் சொல்ல இயலாது.

தோட்டத்தில் சென்று படுத்தேன் இம்முறை எதுவும் எடுத்து வரவில்லை கொண்டு போன தண்ணீர் புளிச்சாதம் எல்லாம் அப்படியே போட்டபடி வந்துவிட்டேன் எடே எந்திரு என காலையில் வந்து நொண்ணன் எழுப்பினார் பேச்சு வரவில்லை என்னடே ஆச்சு கை கால் எல்லாம் தடிச்சி இருக்கு என்றபோது சொல்லவே முடியாது நான் தவித்த தவிப்பு படித்து இருந்தாலாவது எழுதி காமிக்கலாம் பாவிப்பய மூளைக்கு தெரியலையே அழுது கண்ணீர் வடித்தேன் எழ முடியாமல் எழுந்தேன் வாடே என அழைத்து ஆஸ்பத்திரி போவோம் என்றார் செடியை பறித்து மலை போல கைகள் காட்டி நுகர்ந்து காண்பித்து இப்படி ஆனதாக சொன்னேன் எதுக்குடே இப்படி பண்ணின என திட்டியபடி ஊருக்குள் போனோம் அந்த பொட்டி வந்து, சொன்னேன் கேட்டியாடே முகரைக்கட்டை என்றதும் போயிரு பாட்டி கொன்னுருவேன் என நொண்ணன் திட்ட எனக்கு என்னால் தான் இப்படி என மனம் வலித்தது ஆஸ்பத்திரி போனோம் அலர்ஜி என மருந்து ஊசி போட்டார் பேச்சுதான் என்ன பண்றதுனு தெரியலை என்றார்.

சொல்லு என கைகாட்டினேன் மலைக்குப் போனது நுகர்ந்தது சொன்னதும் அது ஆவி மலை ஆச்சே என்றார் டொக்டர். இல்லை என தலை ஆட்டினேன் பின்னர் யோசித்தேன்ஆவி என்றால் வாயு தானே அப்படி எனில் ஏதோ விஷவாயு அந்த மலையில் இருக்குனு தெரிஞ்சி இருக்கு எனப்பட்டது ஐயோ படிப்பு வரலையே என கதற நினைத்தால் சத்தம் ஏதும் வரவில்லை ஏன்டே மலை மலைனு சொல்லி இப்படி பேச்சை தொலைச்சி நிக்கிற. பொட்டி சொன்னது நினைவுக்கு வந்தது தொலைஞ்சிட்டா திரும்பாது அப்போது அங்கே வந்த ஒருவர் நாங்க பேசினது கேட்டு இங்கன வாப்பா அந்த மலையில் தசைகளை செயல் இழக்கச் செய்யும் கொடிய மருந்து இருக்குனு ஒருத்தர் கண்டு பிடிச்சி இருக்காரு நமக்கு மயக்க மருந்து தருவாங்கல அதைப்போலவே அது வேலை செய்யுமாம் ஆனா இது அதிக விஷத்தன்மை வாய்சசது இவன் தப்பிச்சதுகூடஅதிசயமான விஷயம் தான் இதை ஏன் எங்களுக்கு முன்னமே சொல்லலை அதான் பேய் மலை ஆவி மலைனு போகாதீங்கனு சொல்லி இருக்குல ஒரு பறவையும் விலங்கும் அங்கன எட்டிப்பார்க்கறது இல்லை இவன் எதுக்குப் போனான் என்றதும் என்ன இருக்குனுப் பார்க்கப் போனான் என சமாளித்தார் நொண்ணன் ஏன்டே உனக்கு இதெல்லாம் எனநொண்ணன் சொல்ல படிப்பில் இதே அக்கறை காட்டி இருக்கலாம் என நினைத்தேன் சிலவாரங்கள் பிறகு ஒருவர் எங்க ஊருக்குள் என்னைத் தேடி வந்தார்.

வீக்கமானது குறைந்து இருந்தது. பேச்சு வரவில்லை. ஒரு மருந்தை கொடுத்தவர் ஒரு வாரம் சாப்பிடச் சொன்னார் அதிசயமாக எனக்கு பேச வந்தது உன்னோட குரல் தசையை அந்த வாயு ரொம்பத்தாக்கி இருக்கு என்றார் இனிமே அங்க போகாத அந்த மரங்களை அழிக்கச்சொன்னா யாரு கேட்கிறா என்றவரைப் பார்த்தேன் ஏன்டே உனக்காக அந்த ஆளை தேடி வரதுக்குள்ள போதும்னு ஆயிருச்சி என்றார் நொண்ணன் இப்போது எவரும் பேய் மலை ஆவி மலை என எவரையும் அந்த மலையை நான் அழைக்கவிடுவது இல்லை

(பேய்மலை பாகுபலி முற்றும் இனி செவ்வாய் கிரகம் தொடரும்)

Friday 8 April 2016

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 30

''ஆமா சார், என்ன சார் விஷயம்''

''இதோ இவனை உனக்குத் தெரியுமா?''

''தெரியும் சார், இவன் பேரு கோரன், என்னோடதான் படிச்சான், பாதியில படிப்பை விட்டுட்டான். நேத்துகூட எங்க வீட்டுக்கு வந்து இருந்தான். இப்போ கரியநேந்தல் அப்படிங்கிற ஊருல பிசினஸ் வைச்சி இருக்கிறதா சொன்னான்''
''இவனை யாரோ கொலை பண்ணி இருக்காங்க''

பயத்தில் முருகேசு நடுங்கிக்கொண்டு இருக்க காயத்ரி உடனே வந்தவள்
''சார், சுபத்ராகிட்ட நீங்க விசாரிச்சா எல்லாம் தெரியும், இவருக்கும் கொலைக்கும் சம்பந்தம் இல்லை''

''நீ யாருமா''

''என்னோட பேரு காயத்ரி''

''சரி நீங்க ரெண்டு பேரும் எங்களோட கிளம்பி வாங்க, சுபத்ரா ஊருக்குப் போகலாம், ஊரு தெரியும்ல''

அதற்குள் முருகேசுவின் அம்மா என்னடா இதெல்லாம் என்றபடி வந்து நின்றார்கள்.

''அந்த பையனை இங்க தங்கிட்டுப் போகச் சொன்னோம் அவன் தான் கேட்கலை''

''நீ யாருமா இவனோட அம்மாவா, நீயும் கூட வாம்மா''

மறுப்பேதும் சொல்லாமல் மூவரும் உடன் சென்றார்கள்.

''சார்  இங்க சுபத்ராவோட சொந்தக்காரங்க இருக்காங்க ரங்கநாதனு பேரு என்னோட அக்காவைத்தான் கட்டி இருக்காங்க, அவங்களையும் விசாரிச்சிட்டு கூட்டிட்டுப் போகலாம்''

''அதெல்லாம் இருக்கட்டும், முதலில அந்த சுபத்ராவை விசாரிப்போம்''

சுபத்ராவின் ஊருக்குள் சென்றபோது இருவர் வந்து நின்றார்கள்.

''அந்த பையன் கொலைக்கேசு விஷயமாவ வந்து இருக்கீங்க, நாங்கதான் அவனை கொன்னுபோட்டோம். உங்களுக்கு தகவல் சொன்னதே நாங்கதான். இவங்களை கூப்பிட்டு வந்து இருக்கீங்க''

காவல் அதிகாரி கடும் கோபம் கொண்டார்.

''என்ன தைரியம்டா உங்களுக்கு''

''இருக்காத பின்ன, இந்த ஊரு மண்ணு அப்படி''

''தம்பி நீங்க மூணு பெரும் போகலாம். உன்னைத் தேடித்தான் கோரன் வந்தான்னு அவங்க அப்பா தகவல் சொன்னதாலதான் உன்னை விசாரிக்க வந்தோம்''.

கொலை செய்தோம் என சொன்ன அந்த இருவரையும் காவல் அதிகாரிகள் பிடித்து வைத்தார்கள்.

''சுபத்ரா யாருடா''

''எங்க ஊரு பொண்ணுதான், ஆனா அவளுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நேத்து எங்க தோட்டம் பக்கம் வந்தான் அப்போ யாரு என்னனு  விசாரிச்சப்ப திமிரா பேசினான் அப்போ இவனுக்கும் எங்களுக்கும் நடந்த தகராறுல கொஞ்சம் வரம்பு மீறிப் போச்சு நாங்க அவனை தொலைச்சி கட்டிட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சர்வ சாதாரணம். புடிச்சிட்டுப் போயா, சுபத்ரா எங்க சுமித்ரா எங்கனுட்டு''

பலர் அங்கே கூடி நின்றார்கள். நீங்க எல்லாம் எப்பவுமே திருந்த மாட்டீங்களாடா என்று ஆளாளுக்குப் பேசியபடி நின்றார்கள்.

''நாங்க எதுக்கு திருந்தனும், அவனவன் ஒழுங்கா இருந்தா நாங்க ஒழுங்கா இருக்கப்போறோம்''

காயத்ரி முருகேசுவிடம் வா போகலாம் என்றாள் . கொஞ்சம் இரு என்றான் முருகேசு.

''சுபத்ராவை கூப்பிடுங்க''

சுபத்ரா அங்கு வந்து நின்றாள்.

''என்ன சார் என்ன விஷயம்''

''கோரன் அப்படின்னு ஒருத்தனை கொன்னு இருக்காங்க உனக்கு இதில சம்பந்தம் இருக்கா''

''எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை சார், அவனை எதுக்கு சார் நான் கொல்லனும் எனக்கு என்ன கொல்லுறது தான் தொழில்னு நினைச்சீங்களா''

''ஏன்டா போலிசு மூதேவி, நாங்கதான் கொன்னோம்னு இந்த இரண்டு பேரும் சொல்றாங்க பிடிச்சி வேற வைச்சி இருக்க அவகிட்ட விசாரிக்கிற''

அங்கிருந்த ஒருவர் சொன்னபடி கத்தியை ஓங்கி காவல் அதிகாரியை குத்த வந்தார். அவரை சிலர் பிடித்துக்கொண்டார்கள்.

''சரிம்மா நீ போம்மா''

''எதுவும் மேல் விபரம் தேவைப்பட்டா என்னை கூப்பிடுங்க சார்''

''என்ன நீ அந்த போலிசு  மூதேவிகளை  சார்னு சொல்லிட்டு இருக்க, அவனுகளையும் சேர்த்து வகுந்துட்டா சரியாப் போயிரும்''

இன்னும் அவர் சத்தம் இட்டுக் கொண்டு இருந்தார். அவரை எதுவும் காவல் அதிகாரிகள் சொல்லவில்லை.

காவல் அதிகாரிகள் கொலை செய்தோம் என சொன்ன இருவருடன் கிளம்பினார்கள்.

சுபத்ராவை நோக்கி முருகேசு சென்றான். காயத்ரி எவ்வளவோ தடுத்துப் பார்த்தாள். அவர்களை வெளியே நிற்கச் சொல்லிவிட்டு சுபத்ராவின் வீட்டுக்குள் சென்றான்.

''சுபா நீ போன்ல சொன்னது போல நீதான கொலை பண்ணின''

''ஆமாடா நான்தான் அவனை என்னுடைய தடயம் எதுவும் இல்லாம கொன்னுட்டு பழியை இவனுங்க ரெண்டு பேரையும் ஏத்துக்க சொன்னேன்''

''எதுக்கு சுபா''

''அவன் உன்னையும் என்னையும் கொலை பண்ணத்தான் நேத்து வந்தான். உன் அம்மாவைப் பார்த்து மனசு மாறிட்டான். ஆனா அவன் வஞ்சம் தீரலை. என்கிட்டே அவன் இந்த விபரத்தை சொன்னப்ப அவனை கொலை பண்ணினேன், இப்போ என்னடா அதுக்கு, போயி அதோ அவ இருக்காள அவளோட பிள்ளை குட்டி பெத்து சந்தோசமா இரு. இது இந்த உலக பரிணாமம்டா. புத்தியுள்ளதே பிழைக்கும். அவளைக் கொல்ல எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது, ஆனா எனக்கு நீ சரிப்பட்டு வரமாட்டடா  அதனால அவளைக் கொன்னு பிரயோசனம் இல்லை''

''ஒன்னுமே இல்லாத விஷயத்தை இப்படி கொலையில கொண்டு வந்து நிறுத்திட்டியே சுபா''

''இந்த பூமி கூட ஒன்னுமே இல்லாமத்தான்டா இருந்துச்சு. புல், பூச்சி, மனுஷன் எல்லாம் வரலை, அது போலத்தான்டா, நீ கிளம்பிப் போ. கர்ம வினை அது இதுன்னு சொல்லிட்டு திரியாதே இது பரிணாமம். இன்னும் விலங்குகள் மனம் கொண்ட மனிதர்கள் திரியும் பூமி, கொஞ்சம் மாறி இருக்கேன் இதுவே விலங்கா இருந்து இருந்தா அவளை எப்பவோ கொன்னு போட்டு இருப்பேன்''

''சுபா நீ பண்ணினது தப்புன்னு தோணலையா''

''என்னை உன்னை காப்பாத்திக்க நான் பண்ணினதை எப்படிடா தப்புன்னு சொல்வ, பேசாம போயிருடா, என்னைத் தேடி இனிமே வராதடா''

''என்னப்பா அந்த பொண்ணு சொல்லுது''

''கொலை பண்ணிட்டு அவனுகளை ஏத்துக்கச் சொன்னேன்னு சொல்லுதுமா''

''முருகேசு வா போலீசுக்குப் போகலாம்''

''வேணாம் காயூ''

''இன்னும் அவ மேல உனக்கு கரிசனம் போகலைல முருகேசு''

''ஐயோ அம்மா இவளை கொஞ்சம் பேசாம இருக்கச் சொல்லு''

''காயத்ரி, இத்தோட இந்தப் பிரச்சினை முடிச்சிருச்சினு பேசாம இரும்மா''

''சரி அத்தை''

சில வருடங்கள் கழிந்தது. முருகேசுவிற்கும் காயத்ரிக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. திருமணநாள் அன்று சுபத்ரா வாழ்த்து பூங்கொத்தோடு வந்து இருந்தாள். காயத்ரிக்கு மனதில் பயம் குடி புகுந்தது.

''டேய் முருகேசு நீ சந்தோசமா இருக்க நான் எதுவும் செய்வேன்னு உன்னோட புதுப் பொண்டாட்டிக்கு சொல்லி வை, திருமண வாழ்த்துக்கள் காயத்ரி'' என வாழ்த்திவிட்டு சுபத்ரா சென்றாள். காயத்ரிக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.

''கர்ம வினைன்னு சொல்வாங்களே அதுதான் இதுவா முருகேசு''

''இல்லை காயூ, இது பரிணாமம்''

(முற்றும்)









Wednesday 16 March 2016

பேய் மலை பாகுபலியும் செவ்வாய் கிரகமும் - 1

எனது ஊருக்கு மேற்கே காடுகள் அடர்ந்த ஒருபெரிய மலை ஒன்று இருந்தது அந்த மலைக்கு அருகில் எவரும் சொல்லமாட்டார்கள் குறிப்பிட்ட எல்லையுடன் நின்று விட வேண்டும் என்பது ஊர் விதித்த கட்டளையைவிட அவரவர் விதித்துக்கொண்ட கட்டளைதான் எவரையுமே எல்லை தாண்டவிடவில்லை. சிறு வயது முதல் அந்த எல்லையை தாண்டிவிட வேண்டும் எனும் பேராவல் இருந்தது, அதுவும் குறிப்பாக மலை மீது ஏறி மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது எனப் பார்க்கும் துடிப்பானது ற்றும் குறைந்தபாடில்லை. என் மூளைக்கு என்ன பிரச்சினையோ எனக்கு படிப்பு சுத்தமாக ஏறவில்லை. ஒரொன்னா ஒன்பது என்பேன். நன்றாக கையில் அடி வாங்கி இருக்கிறேன். மதிய சாப்பாட்டிற்காக அந்த அடிகளைத் தாங்கிக்கொள்வேன். நிறைய விசயங்கள் நினைவில் இல்லை. மலை குறித்து பலர் பேசியது அங்குமிங்கும் நினைவு இருக்கிறது. பேய் மலை, ஆவி மலை என கதை சொல்வார்கள். எனக்கு அந்ந கதைகளில் இஷ்டம் இல்லை. படிப்பு வராமல் போனதால் பள்ளிக்கு வரக்கூடாது என திட்டினாலும் மதிய உணவு க்காக வெட்கமின்றி போவேன். அதையும் தடுத்தார்கள். ஒருவனிடம் வாங்கித்தரச் சொல்லி திருடி உண்டேன். 

அதுவும் சில வாரங்கள் நின்றுபோனது. வீட்டில் உணவு இருந்தால் இப்படி எதற்கு அலையப்போகிறேன் நான் பிறந்த சில மாதத்தில் நொப்பாவும் நொம்மாவும் நோயில் செத்துப்போனார்கள் நொம்மாவின் தொம்பிதான் என்னை வளர்த்தார். கழுதை எங்கன போய் திங்கட்டும் என எனக்குத் திட்டு விழும் காலை இரவு ஏதேனும் கொஞ்சம் தின்ன கிடைக்கும்படிப்புதான் வரலைல பள்ளிக்கூடம் போகலைல, போய் வேலை பாத்து காசு கொண்டா என மொமா அடித்து விரட்டினார் அன்றிலிருந்து தோட்ட வேலை என போகத் தொடங்கி மதியம் கொஞ்சம் உண்ண கிடைத்தது. தோட்டத்திலேயே பொழுதன்னைக்கும் கிடப்பேன். காலை இரவு நன்றாக சாப்பிட கிடைத்தது. மொமா எனைத் தேடவில்லை காட்டின் தோட்டத்தின் பொள்ளை ஆனேன் எப்படியாவது மலைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டேன். என்னடே பேசற, பொட்டுல அடிச்சேன் புட்டுக்குறவ ஒழுங்கா கிட என தோட்டத்து நொண்ணன் சொன்னதால் பேசாமல் இருந்துவிட்டேன் எடேய் அந்த மலைக்குப் போனவுக யாருமே உசிரோட திரும்புனது இல்லையாம் என் பாட்டி சொன்னிச்சி என புல் பிடுங்க வர ஒருத்தன் கதை சொன்னான், எடுவட்ட பயலே உன் பொட்டிக்கு யாரு சொன்னதாம் என அவன் தலையில் நங்குனு கொட்டினேன், என் தாத்தா கூட அப்படித்தான் செத்தாராம் என அவன் சொன்னதும் எந்த தொத்தாடா என்றேன் பாட்டியோட அப்பா என்றான் பொட்டியைப் பார்க்கப் போனேன் ஏய் பொட்டி உன் நொப்பா மலைக்குப் போயா செத்தாரு என்றேன் ஆமா என பொட்டி தலையை ஆட்டிச்சி எப்படி எனக் கேட்டேன் எல்லையைத் தாண்டி போனாரு போனவருதான் என பொட்டி அழுதது.

அந்த மலையைப்பற்றி பொட்டி வேறு எதுவும் சொல்ல மறுத்தது. அன்று இரவு எனக்குத் தூக்கமே வரலை. என் தொத்தா பொட்டி எல்லாம் யாரென எனக்குத் தெரியாது. இந்த மாயஜால கதைகள் மாந்த்ரீக கதைகள் எல்லாம் ஒரு ஏமாற்று வித்தைகள் எப்போது இந்த எல்லையைப் போட்டார்கள் என்று கேட்டால் அது எப்பவோ போட்டதுடேஎன்றே சொல்வார்கள். ஒரு பயலுக்கும் அந்த மலையைப்பற்றித் தெரியாது ஆனால் அங்கு போனால் செத்துப்போவாக என்பது மட்டுமே அறிந்து இருந்தார்கள் சாக எவர்தான் ஆசைப்படுவார்கள். அங்கனப்போன செத்த என்பதே பெரும் பயம் தான் எனக்கு உள்ளுக்குள் நமநம எரிச்சல். செத்தாலும் பரவாலை என நினைத்தபடி அந்த மலை மீது எனக்கு ஒரு கண் இருந்தது சீவாத முடி மண் பூசிய சட்டை டவுசர் என திரிந்தேன் மலைப்பக்கம் போக ஆள் சேர்த்தால் அடிக்காத குறைதான் படிப்பு. வந்து இருந்தாலவது நாலு வார்த்தை படிச்சி இருக்கலாம் ஒரு எழுத்து கூட எழுதப்படிக்க மனசே வரலை மறந்து போனது மறந்து போனதுதான் எனக்கு வயசு இப்ப இருக்கும்னு ஒரு நொண்ணனிடம் கேட்டப்ப நீ ஆவணில பொறந்த உனக்கு இப்போ 15 என்றது 15 வயசா என ஆவெனப் பார்த்தேன் மலையைப்பற்றி இத்தனைவருசமாகவா நானுநினைச்சிட்டு இருக்கேன் என அன்னைக்கு ராத்திரி பயத்தோட மலையை நோக்கி நடந்தேன் கொஞ்சம் பயமாக இருந்தது அஞ்சு பாறாங்கல் தூரம் நடக்க மனசுக்கு படபடனு இருந்தது எவடே இந்நேரத்தில இங்குட்டு என ஒரு மொமா கத்தியது நான் தான் மொமா மலைச்சாமி என கத்தினேன் டார்ச் வெளிச்சம் என்மீது பட்டது சே காவக்காரன் மாதிரி நிக்கறான் என நடந்தேன் நில்லுடே மலைப்பக்கம் போகுற உனக்கு புத்திகெட்டுப் போச்சா என மொமா கத்தியது இல்லே மொமா உப்ப திரும்பி போயிருவேன் என சொன்னாலும் தரதரவென எனது கைகளைப் பற்றி இழுத்து அவர் தோட்டத்தில் கொண்டு இட்டார் எடே இன்னும் நாலு பாறாங்கல் இந்த தோட்டம் அதைத் தாண்டிப் போனா கொஞ்ச தூரம் காடு அந்தகாட்டைத் தாண்டித்தான் மலை நீபாட்டுக்குப்போற என சொல்லி சப்புனு ஒரு அறை விழுந்தது மொமா அடிக்கிற வேலை நீ வைச்சிக்காத அப்புறம் கல் எடுத்து கொன்னேப்புடுவேன் சாவுக்கு நான் பயப்படலை மலைக்குப் போனா செத்துப் போயிருவாகனு கதையை நம்ப சொல்றயா என்னடே நீ ஓவராப் பேசற போடே போய் சாவு அப்பன் ஆத்தாளை காவு வாங்கினவதான நீனு என எட்டி உதைத்தார் வலி விர்ரென்று இருந்தது அந்த வார்த்தை என்னை ஒருமாதிரி ஆக்கியது.

மொமா நீ ஒரு தடிமாடு சின்னப்பயல உதைக்கிற எனகத்தினேன் சொல்லிட்டே இருக்கேன் பேசிட்டு இருக்க என ஓங்கி அடிக்க வந்தார் போடே போ நிக்காத மலைக்குப் போக மனசு இல்லை தோட்டம் வந்து படுத்துக்கொண்டேன் என் நொம்மா நொப்பா சாக நான் எப்படி காரணம் என மனசு பதைபதைத்தது என் சோட்டுப்பயக கூட இப்படி சொன்னது இல்லை இந்த மொமாவுக்கு என் மேல என்ன அக்கறை அடிக்கிறான் உதைக்கிறான் என் நொம்மாவோட தொம்பி கூட இப்படி இல்லை நாளைக்கு ஊருல இவன் என்னைப்பத்தி என்ன சொல்வானு தெரியாதே எனநினைத்தபடி வலியுடன் தூங்காமல் தூங்கினேன் எடே எந்திரு நைட்டு மலைப்பக்கம் போனியா என தோட்டத்து நொண்ணன் கேட்டார் இல்லண்ணே தூக்கம் வரலை சும்மா நடந்தேன் அந்த மொமா என்னை அடிச்சாக என்றேன் ஊர்ப்பக்கம் நடக்க வேண்டிதானே எதுக்கு அங்குட்டுப் போன பல்ல விலக்கிட்டு காபியக்குடி இட்லி இருக்கு பொறவு சாப்பிடு வடக்கால தண்ணி பாய்ச்சு மலைப்பக்கம் போவாத இன்னைக்கு யாரும் களை எடுக்க வரலை நானு பொறவு
வரேன் இங்கே வாடே என்னடே கன்னத்தில வீங்கி இருக்கு என தொட்டார் அடிச்சாகனு சொன்னனில காபி குடிடே கூட வாடே என இருந்தார் செங்கல் பொடியால் பல் விலக்கி காபி குடித்து நொண்ணனோடு ஊருக்குள் போனேன் நேராக அந்த மொமா வீட்டுக்குப் போனார் எவனைக்கேட்டு வெண்ணை இவனை அடிச்ச வகுந்துருவேன் என்னமோ நீசோறு போட்டு வளர்க்கற மாதிரி அடிச்சிருக்க அந்த மொமா இல்லை ராசு அவன் பேசின பேச்சு என இழுத்தார் எல்லாம் சொன்னான் அவன் மேலே தப்பு இல்லை இனி அவன் விசயத்தில தலையிட்ட மனுசனா இருக்கமாட்டேன் பாத்துக்க காவாலித்தனத்தை வேறு எவன்கிட்ட வேணா காமி ஊரே கூடியது விடுயா ராசு என விலக்கினார்கள்.

எடே நீ தோட்டத்துக்கு போ என்றதும் எனக்கு சாதிச்சது போன்று இருந்தது அந்த நொண்ணனோட எனக்கான கோபம் என்னவென இப்பதான் பார்த்தேன் வலி ஏதுமில்லை
எனக்குனு ஒருத்தர் இருக்காரு என்பதான தைரியம் நினைக்கவே நன்றாக இருந்தது கொஞ்ச நாளைக்கு மலைக்குப் போக வேண்டும் என எண்ணம் வரவில்லை எதுக்குப் படிப்பு வரலைனு யோசிக்க முடியலை ஆனா இந்தமுறை விளைச்சல் பரவாயில்லை புதுத்துணி கிடைச்சது அதைப்போட்டுக்கிட்டு சும்மா ஊருக்குள்ளார சுத்தினேன்மலைச்சாமி என என் மொமா கூப்பிட்டு காசு இருந்தா கொடுடே எனக் கேட்டார் பையில் இருந்த பத்து ரூபா தாள் கொடுத்தேன் எடே கூடக்கொடு என்றதும் இல்லை என தோட்டம் வந்தேன் மலையை நோக்கி பார்க்கத் துவங்கினேன் நொண்ணன் கிட்ட சொல்லி செய்யலாம் என சாயந்திரம் கேட்டேன் ஏன்டே இப்படி மலைக்கு நீ அலையற போனா உசுரோட யாரும் திரும்ப மாட்டாங்க சொன்னா கேளுடே திரும்பிருவேன் என்றதும் வேணாம்டே அப்புறம் உன் இஷ்டம் என போய்விட்டார் எனக்கு மனசுக்குள் ஒரு தைரியம் வந்தது அன்று இரவு மலையை நோக்கி நடந்தேன் காட்டினை நெருங்கினேன் காட்டுக்குள் பாதைஎன எதுவும் இல்லை நெடு மரங்கள் அசைந்தன சிறுசிறு செடிகள் இருந்தன புதர்கள் போன்றே காட்சி அளித்தது இதுவரை இருந்த நிலவு வெளிச்சம் மறைந்து இருட்டாக இருந்தது டார்ச் அடித்தேன் பகலில் வந்து இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் திரும்ப மனமில்லை அங்கேயே இருந்தேன் அதிகாலையில் சிறு வெளிச்சம் வர உள்ளூர பயமற்று நடந்தேன் மர வாசனையில் நான்மயங்கி விடுவேனோ என நினைத்தேன்

(தொடரும்)