Tuesday 15 February 2011

வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது

பல மாதங்கள் முன்னர் எனது மனைவிக்கு ஒரு புத்தகம் வாங்கி தந்தேன். புத்தகத்தின் தலைப்பு மூன்று தேநீர் கோப்பைகள். இந்த புத்தகம் வாங்க சொல்லி எவரும் பரிந்துரைக்க வில்லை.

தமிழ் எழுதுவது மறந்து கொண்டிருந்தது. வேலை பளு என சொல்வதா, எழுத விருப்பம் இல்லை என சொல்வதா என தெரியவில்லை. ஏனோ தமிழ் பக்கம் வரவே எண்ணம் ஏற்படவில்லை. சில நேரங்களில் இது போன்ற ஒரு இடைவெளி எனக்கு ஏற்படுவது உண்டு.

இந்த புத்தகம் பற்றி சொல்ல நினைத்ததை தலைப்பாகவே வைத்துவிட்டேன். ஆங்கிலம் படிக்க விருப்பம் இருப்பவர்கள் நிச்சயம் இந்த புத்தகம் வாங்கி படியுங்கள்.

உலகில் உதவ வேண்டும் என எண்ணம் இருப்பவர்கள் பல்லாயிரம் இருக்கலாம், ஆனால் வெகு சிலரே உதவி செய்கிறார்கள். அப்படி உதவி செய்யும் மனிதர்களை நாம் உற்சாகபடுத்தி அவர்களது உதவிக்கு உறுதுணையாய் இருந்தாலே அது பெரிய காரியம் தான். ஆனால்...

எனது சட்டை பையில் கொஞ்சம் பணம் அதிகமாகவே இருக்கிறது; அழுத பையன் அழுதபடியே;

புத்தகம் வாங்க, அறிந்து கொள்ள  http://www.threecupsoftea.com

நன்றி. 

5 comments:

Chitra said...

பகிர்வுக்கு நன்றி.

R. Gopi said...

சார், இன்னும் கொஞ்சம் கூடுதல் தகவல்கள் கொடுங்களேன். நன்றி

G.M Balasubramaniam said...

அதீத கனவுகள் கண்டு சில காலம் ஆயிற்று என்று என் பதிவில் “எழுதுவது எழுதுவதின்...........”எழுதியிருந்தேன். அந்த நேரமோ என்னவோ, இப்போது உங்கள் எழுத்துகள் காண்கிறேன். LOOKING FORWARD FOR MORE.

Anisha Yunus said...

அமேஸான்ல 2500 பேர் இதுக்கு சப்போர்ட் செஞ்சிருக்காங்க... ஒடனே படிச்சிர வேண்டியதுதேன். நன்றி சார். :)

Radhakrishnan said...

நன்றி சித்ரா, நன்றி கோபி, இணைப்பில் அதிக விபரம் உள்ளதால் விட்டுவிட்டேன். நன்றி ஐயா. நன்றி அன்னு.