Friday 25 April 2014

கலாச்சார சீரழிவு

கிட்டத்தட்ட 23 வருடங்கள் முன்னர் ஒரு கதை எழுதினேன்.

''அண்ணன் தங்கை
உடன் பிறந்தவர்கள்
சிறுவயதில்  பிரிகிறார்கள்.

ஒரு கால கட்டத்தில்
கல்லூரியில் பயில்கிறார்கள்
இருவருக்கும் காதல் வருகிறது

திருமணம் வரை வருகிறார்கள்
உண்மை தெரிய வருகிறது
திருமணத்திற்கு தடை போடபடுகிறது

இருவரும் ஊரைவிட்டு ஓடிவிடுகிறார்கள். ''

இதை காந்தியடிகளின் 125வது பிறந்த தினம் என நினைக்கிறேன். அனுப்ப நினைத்து தூக்கி குப்பையில் போட்டுவிட்டேன். அப்போது அவர்களுக்குள் காதல் மட்டுமா, களவும் இருந்ததா என்றெல்லாம் விவரிக்கும் தைரியம் இல்லை.

அதற்கு பின்னர் மறுபதிப்பு என ஒரு கதை எழுதி அனுப்பி ஆறுதல் பரிசு கிடைத்தது. வசன கவிதையில் எழுதி இருந்தேன்.

எப்போது அண்ணன் தங்கை கதையை எழுதி தூக்கி குப்பையில் போட்டேனோ அடுத்த வருடமே  அது போன்ற கதை படிக்க நேர்ந்தது. நொந்து கொண்டேன்.

திடீரென ஒரு கதை சிந்தனை.

அன்னை மகன்.
மகன் சிறுவயதில் தொலைந்து போகிறான்

இன்னுமொரு மகள் பிறக்கிறாள்
மகள் பிறந்த சில வருடம்
கணவன் இறந்து போகிறார்.

தொலைந்த மகனை
பதினெட்டு வயதில் காண்கிறாள் அன்னை

இருவரும் காதல் கொள்கிறார்கள்
தாய் மகன் என தெரியாமல்.

தாய் மீது மகன் காதல் கொள்வதை கூட கலாச்சார சீரழிவு என்றே சமூகம் கருதும்.

காதலை காமத்துடன் இணைத்து பார்த்த சமூகத்திடம் என்ன எதிர்பார்க்க இயலும். கதை முடிகிறது. இதை அவரவர் கற்பனைக்கு விட்டுவிட்டு போகிறேன். 

Wednesday 2 April 2014

காதலே இல்லைன்னு சொன்னா

அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு இருந்தேன்.
ஒருவழியாய் தைரியம் வரவழைத்து 'உன்னை எனக்குப் பிடிச்சி இருக்கு, நான் உன்னை காதலிக்கிறேன்' என சொன்னதும் 'செருப்பு பிஞ்சிரும்' என திட்டிவிட்டு போய்விட்டாள்.

எனக்கு அவமானமாக இருந்தது. அவளை பின் தொடர்ந்துசெல்ல என் மனம் இடம் தரவில்லை. வாழ்வது வீண் என்றே எண்ணிக் கொண்டு இருந்தேன். வீட்டில் சொல்லவும் தயக்கம்.

ஒருநாள் எதேச்சையாக அவளைப்  பார்த்தேன். பார்த்த மறுகணம் தலைகுனிந்தே இடம் அகன்றேன். இப்படியாக எனது காதல் தத்தளித்தது. அம்மாவிடம் சொல்லி பெண் கேட்டு வர சொன்னேன். அம்மா பெருத்த ஏமாற்றத்துடன் திரும்பினார்.

வாழ்வா சாவா என போராடிக் கொண்டு இருந்தேன். வாழ்வது என முடிவு எடுத்தேன். 

சாமியார் ஆகிவிட்டேன். 

Wednesday 26 March 2014

அறிவுகெட்ட

உன்னை நான் காதலிச்சேன்.
என்னை நீ காதலிச்ச.
எனக்குப் பிடிச்சது
உனக்குப் பிடிச்சது.
கல்யாணம் பண்ணிக்கலாம்னு
திட்டம் போட்டோம்.
நீயும்தான் சரின்னு சொன்ன.

அடி பாதகத்தி
காதலுல வந்த சின்ன சின்ன
சண்டைகள் எல்லாம்
அன்பின் தடயம்னு
நானும்தான் நம்பி இருந்தேன்
உன்னோட கோவத்தை எல்லாம்
பாசம்னு கதை படிச்சேன்

போராடி வீட்டுல வாங்கிய
சம்மதம் வைச்சி
போட்டேன் மூணு முடிச்சி
நம்ம சந்தோசத்துக்கு
பெரிய வலை விரிச்சி
நீயும்தான் கழுத்து நீட்டின

என்னைவிட நீ பெரிய படிப்பு
என்னைவிட நீ பெரிய பதவி
என்னைவிட நீ பேரழகி
எப்பவுமே பேதம் பாக்கலையே
இதையெல்லாம் என்கிட்டே
ஒருபோதும் நீ கேட்கலையே

ஆத்தாடி நீயும் என்
ஆசைநாயகி ஆன பின்னே
எல்லாமும் வித்தியாசம் ஆகுமா
இதையே ஒரு காரணம்
என நீ சொன்னா தகுமா

உன்னோட சேவகனா
நான் கிடக்கேன்
என்னை நீயும்
கை வுட்ராதே
கைகட்டி நானும் நிக்கிறேன்
உன் கண் பார்வையில்
இருந்து என்னை ஒதுக்காதே
பலமுறை கேட்டாலும்
படுபாவி உன் காது செவிடா

பாவ புண்ணியம் பாக்காம
கோர்ட் வாசப்படி
மிதிக்க வைச்சே
உன்னை கொடுமை
படுத்துறேனு கொடி பிடிச்ச
படிப்பு, பதவின்னு
சொல்லி வைச்ச

சண்டாள பயபுள்ளைக
உண்மை தெரியாம
நீதி சொன்னாக
இதை சரித்திரத்தில
தப்பாக குறிச்சி வைப்பாங்களே

எல்லாம் இந்த
அறிவுகெட்ட