மழையில் நனையாமல் இருக்க
குடை பிடித்தேன்
குடை நனையாமல் இருக்க
மழை நிற்குமா?!
பிரச்சினைகள் கண்டு கண்டு
ஓடி ஒளிந்தேன்
நான் ஓடி ஒளிந்ததை கண்டு
பிரச்சினைகள் ஒழியுமா?!
அன்பின் அவசியம் குறித்து
கோபம் கொண்டேன்
கோபம் கொள்வது என்பது
அன்பில் அவசியமா?!
இறையென பலர் சொன்னதும்
இரை என்கிறேன்
இரையின்றி இறைவன் சரி
மனிதன் சரியா?!
ஏனோ கவிதைகள் புரிவதில்லை
வார்த்தைகள் என்றேன்
வெறும் வார்த்தைகள் கொண்டால்
கவிதை அவையாகுமா?