Thursday 29 August 2013

எதைத் தேர்ந்தெடுப்பது?

வீட்டின் வாசலைத் தாண்டியதும் 
எதைத் தேர்ந்தெடுப்பது என்பதில் 
மனம் கொள்ளும் குழப்பங்கள் 

கொட்டிக் கிடக்கின்றன வகை வகையாய் 
தொட்டு எதை எடுப்பது என்பதில் 
தட்டு தடுமாறியே போகும் எண்ணங்கள் 

எதை எல்லாம் எழுதுவது 
என்பதில் கூட 
கலங்கி நிற்கும் 
கவிதைகள் 

முத்தம் அன்பா, காமமா?

காதலின், அன்பின் போது நமது உடலில் டோபமைன் (dopamine), நார்எபிநேப்ரின் (norepinephrine), அதுவும் மிகவும் குறிப்பாக ஆக்சிடோசின் (oxytocin) போன்ற வேதி பொருட்களின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. காமத்தின் போது டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் வேதிப் பொருளின் அளவு அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஆக்சிடோசின் பெண்களில் குழந்தை பிறப்பின் போது, மழலைக்கு பால் தரும்போது அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பெயர்க்காரணமே 'பிள்ளை பெறுவதில் உதவி புரிவதில்' இருந்து வந்ததாக குறிப்பில் இருக்கிறது.

முத்தம் அன்பின் வெளிப்பாடு. முத்தம் இரு நபர்களுக்கு இடையிலான உறவை உறுதிபடுத்தி கொள்ளும் விசயம். கணவன் மனைவிக்கும், காதலர்களின் இதழுடன் இதழ் சேரும் முத்தம் குறித்து ஆராய்ச்சி சொல்லும் விசயம் மிகவும் சுவாரஸ்யமானது. நமது உடலில் நோய் எதிர்ப்பு தன்மை சக்தியை முத்தம் அதிகரிப்பதாக நம்பபடுகிறது. அதே வேளையில் சில நாடுகளில் இதழ்களின் முத்தம் 'அசிங்கம்' என்றே கருதப்படுகிறது.

கைகளில் தரப்படும் முத்தம், கன்னத்தில் தரப்படும் முத்தம், நெற்றியில் தரப்படும் முத்தம், இதழ்களில் தரப்படும் முத்தம் என முத்தம் ஒவ்வொரு நிலையில் அதனதன் அர்த்தம்தனை வேறுபடுத்தி கொள்கிறது. மேலைநாடுகளில் கன்னத்துடன் கன்னம் ஒட்டிக்கொண்டு முத்தம் தருவது போல் சப்தம் எழுப்பி கொள்வார்கள். எல்லா உயிரினங்களும் முத்தம் தந்து கொள்வதாகவே ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த முத்தம் ஒரு அமைதியை நமது உடலில் பரவ செய்கிறது.

முத்தம் நம்பிக்கையின் வெளிப்பாடு. நினைத்த நபர்களுக்கு எல்லாம் முத்தம் எவராலும் தர இயலாது, சினிமாவில் தவிர. நாம் நெருங்கி பழகும் நபர்களிடம், நாம் நல்லதொரு நம்பிக்கை வைத்திருக்கும் நபர்களிடம் மட்டுமே முத்த பரிமாற்றம் நிகழ்த்துவோம் எனப்படுகிறது.

முத்தம் ஆனந்தத்தின் வெளிப்பாடு. பெற்ற பிள்ளைகளை கொஞ்சி குலாவும் போது தரப்படும் முத்தத்தில் இருக்கும் ஆனந்தம் இந்த ஆகிச்டோசின் அளவை அதிகரித்து நம்முள் அமைதியான ஆனந்தம் பரவிட செய்கிறது.

பரிணாம உணர்வின் முதல் உணர்வு தொடுதல். அந்த தொடுதல் உணர்வை தருவது முத்தம். வெளிச்சம், காற்று, வாசம் எல்லாம் தொடுதல் உணர்வில் தெரிந்து கொண்டதுதான். இதழ்களில் இருக்கும் தொடுதல் உணர்ச்சி போல நமது உடல் பாகத்தில் எங்கேயும் இல்லை என்கிறார்கள். முதல் முத்தம் எல்லாம் பெரிதாக பேசப்படுகிறது. முத்தம் பற்றி எல்லாம் எழுத வேண்டிய அவசியம் என்ன? என்றே சத்தம் ஒன்று கேட்டது. காமம் தனியுடைமை. அன்பு பொதுவுடைமை. பலர் முத்தம்தனை தனியுடமை என்றே நினைத்து கொள்கிறார்கள்.

முத்தம் பற்றி அறிந்து கொள்ள 

Friday 23 August 2013

பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 19

''எதுக்கு சுபத்ராவை பார்க்கனும்?''

''முருகேசா, தெரியலை, பார்த்துட்டு வருவோம்''

நானும் பதில் எதுவும் பேசாமல் எங்கே பார்ப்பது என தெரியாமல் அங்கிருந்து நடந்தோம். இறுதியாக ரங்கநாதன் வீட்டிற்கு செல்வதென முடிவெடுத்து அங்கே சென்றோம். சுபத்ரா அப்போதுதான் வீட்டில் இருந்து வெளியே வந்தாள்.

''சுபா, உன்கிட்ட  பேசனும்''

''என்னடா பேச போற''

சுபத்ராவின் வார்த்தையில் கோபம் கொப்பளித்தது.

''கோபப்படாதே, எங்களுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை அதுதான் ரங்கநாதன் கிட்ட சொன்னோம்''

''உன்னோட வாழ்க்கைக்கு இனி நான் இடைஞ்சல் பண்ண மாட்டேன், பேசறதுக்கு ஒன்னுமில்ல''

''சுபா, சொன்னா கேளு. எங்களோட வா''

சுபத்ரா எங்களோடு வர மறுத்துவிட்டாள். காயத்ரியும் கேட்டுப் பார்த்தாள், ஆனால் அவள் வருவதாகவே இல்லை. இனிமேல் அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என நாங்கள் கிளம்பினோம்.

''காயூ, சுபாவோட மாற்றத்தை பார்த்தியா?''

''இல்லை முருகேசா, அவ மாறி இருந்தா நம்மளோட வந்து இருப்பா, எதுக்கும் நீ எச்சரிக்கையா இரு''

காயத்ரி சொன்னதில் எனக்கு அர்த்தம்  .இருப்பதாகவே தெரிந்தது. மறுநாள் கல்லூரிக்கு சென்றோம். ஆசிரியர் சேகரன் பாடம் எடுக்க ஆரம்பித்தார். இவர் எனக்கு முதலில் பிடிக்காமல் இருந்து பின்னர் பிடித்து போனது. எனது அருகில் இருந்தவன் எதுவும் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து கொண்டேன்.

''Our thoughts are very strange at sometimes. No one knows why and how we think and where our thoughts come from. When you look at a picture, you could see that you can have various thoughts on it, same goes with when you see a girl''

''Can I stop you there Sir?''

மறுபடியும் ஆரம்பித்துவிட்டானே என்றே நினைத்தேன். இந்த கோரனுக்கு மிகவும் கோரமான சிந்தனைகள் வந்து சேர்கிறதே என நினைத்தேன்.

''Say Mr. Koran''

''Could you please explain why did you mention about a girl?''

''I gave an example''

''I don't think so''

''It is an example''

''I interpret that you see a girl as an object rather than a human being''

''That's what your brain processed the thoughts on it, not mine Koran. Please sit down and do not disturb the class''

அனைவரும் மேசைகளை தட்டி கோரனை உட்கார சொன்னார்கள். நானும் அவனது கையை பிடித்து இழுத்து அமர வைத்தேன், ஆனால் அவனோ என்னை தள்ளிக் கொண்டு வகுப்பை விட்டு  வெளியேறினான். இவனுக்கு என்ன ஆனது என்றே நான் யோசித்து கொண்டிருந்தேன். வகுப்பு ஆசிரியரோ எதையும் கண்டு கொள்ளாதவாறு பாடம் நடத்த ஆரம்பித்தார்.

''We all have brain network consists of neurons which will interact with inside and outside factors and thoughts are created. When the brain process the thoughts, chemicals are released from endocrine glands and nerve endings. These chemicals determine the next step of your body's physical activity. A mental process leads into physical process''

கல்லூரி பிரின்சிபல் உடன் கோரன் வகுப்பின் வாசலில் வந்து நின்றான். பிரின்சிபல் வகுப்பு ஆசிரியரை அழைத்தார். ஒரு சில நிமிடங்கள் வெளியில் சென்று பேசிவிட்டு உள்ளே வந்தார் ஆசிரியர். என்ன நடந்தது என சொல்லாமல் பாடத்தை மேலும் தொடங்கினார். கோரன் வகுப்புக்குள் வரவில்லை.

''Our thoughts have limitations, it has some boundaries which is not easy to cross''

''என்ன பிரச்சினை சார், எதுக்கு பிரின்சிபல் வந்தார்''

வகுப்பு தலைமை மாணவன் சூரியராஜ் எழுந்து கேட்கவே ஆசிரியர் சிரித்து கொண்டே சொன்னார்.

''நான் பெண்களை கொச்சையா பேசறேனாம், நான் கிளாஸ் எடுக்கறப்ப எல்லாம் கேர்ல்ஸ் எல்லாம் வகுப்புல உட்கார முடியாம நெளியராங்கனு இவன் போய் கம்ப்ளைன் பண்ணி இருக்கான். அதுதான் வகுப்புல என்ன நடக்குதுன்னு பாக்க வந்து இருக்காரு, என்ன அக்கிரமம்''

காயத்ரி எழுந்து ''Sir, how many thoughts are good for a person at a time?''

''Fewer thoughts are better as you can save energy. More uncontrollable thoughts are waste of energy. You should control your thoughts on particular issue so that you can easily handle it. Once you have control on what you think, your brain process that thought meaningfully and convert them into reality. For example if you are cheated by someone, you would tend to have unnecessary thoughts on it and try to explore why this happened to you and so on. In reality, your expectations were not met, it is simple as that, so further thoughts on this unnecessary and you should move away your thoughts from that person how important that person is''

''It is very difficult thing to do Sir as you always have those memories coming back to you, isn't''

காயத்ரியின் கேள்வியில் அவளுக்கு உண்டான வலி தெரிந்தது.

''Certainly Gayathri, why do you need give importance to someone who does not care to give importance to you. It is not about egoism or caring, it is about how you make yourself strong in the world community. Your thought process should not destroy yourself, it should make you very firm. Your thoughts should be focused on universal rather than personal''

காயத்ரி அமைதியாகவே அமர்ந்துவிட்டாள். அப்போது கோரன் உள்ளே வந்து அமர்ந்தான்.

''Koran, what were you thinking?''

''I was thinking about how to murder you and tonight I would definitely kill you. This is your last day''

''Could you ask your brain, what is the basis for this thought process and what does your brain wanted to achieve by murdering me?''

மொத்த வகுப்பும் கோரனை கோபத்துடன் பார்த்தது. கோரனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தேன்.

''டேய், நீ என்னடா பேசற. எதுக்குடா இவர் மேல கோபம்''

''பெரிய தாட் ப்ரோசெசஸ் பத்தி பேசறான். இவனை இன்னைக்கு முடிச்சிட போறேன்''

''Koran, answer me''

''Yes, you have killed your wife and tell me why did you do that, what was the basis of that thought process and what did your brain want to achieve by killing her?''

அனைத்து வகுப்பும் அப்படியே உறைந்து போனது.

(தொடரும்)