Wednesday 10 February 2010

கிராம வளர்ச்சி


செந்தாமரைக்குளத்திற்கு பொடிநடையாக வந்து சேர்ந்தான் சீராளன். எந்த ஒரு வாகன வசதியும் இல்லாத ஊர் அது. தரிசாக கிடக்கும் நிலங்களையும், சற்று காய்ந்து வற்றிக் கொண்டிருந்த கண்மாய்களையும் கடந்து வந்தான். ஊருக்கு வரும் வழியில் ஒருத்தரையும் அவன் கண்டிருக்கவில்லை. ஊருக்குள் வந்தவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஊரெல்லாம் ஒரே அமைதியாக இருந்தது.

Monday 8 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (9)

அந்த நிறுத்தத்திற்குப் பின்னர் சேலத்தை சிரமமில்லாமல் அடைந்தோம். சரியாக மணி ஒன்பது ஆகி இருந்தது. அந்த அண்ணன் எங்களுக்காகக் காத்திருந்தார். பிறரை மதிக்கும் பண்பு, உபசரிப்பு என எனது கண்களில் அவர் உயர்ந்து தெரிந்தார்.

Sunday 7 February 2010

வித்தியாசமான விடுமுறைப் பயணம் - 2009 (8)

தினா அழைத்துச் சென்றது ஆஞ்சநேயர் ஆலயம். முன்னரே தான் செல்ல வேண்டி நினைத்திருந்ததால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதாகக் கூறினார். ஆலயத்திற்குச் சென்றதும் உயரமான ஆஞ்சநேயர் சிலை கண்டு பிரமித்துப் போனேன், ஆனால் அதையும் தாண்டி நடந்த விசயம்தான் என்னை யோசிக்க வைத்தது.